கேரளாவின் கும்பமேளா- மலப்புரம் திருநாவாய நவமுகுந்தா ஆலயத்தில் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை
250 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த கும்பமேளா நாளை முதல் கேரளாவில், மலப்புரத்தில் உள்ள திருநாவாய நவ முகுந்தா ஆலயத்தில் தொடங்குகிறது.
நவ முகுந்தா ஆலயம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் பாடிய ஸ்தலம். பரதபுழா நதிக்கரையில் நடக்க விருக்கும் கும்பமேளா ஜனவரி 18 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.
250 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிகழ்வு பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது.
கேரளா மாநில அரசே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தாலும் பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லை. செய்திகளும் இல்லை. இந்து மத நிகழ்வுகளை பற்றிய செய்திகளை வெளியிடுவது கூட இங்கே மதவாதம் ஆகிவிட்டது போல.
பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் போன்ற இடங்களில் நடக்கும் கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் மலப்புரம் செல்லலாம்.
திருநாவாய நவ முகுந்தன் திருக்கோயில் பற்றியும், கும்பமேளா பற்றியும் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.
#keralakumbamela
No comments:
Post a Comment