Thursday, January 15, 2026

மேற்கு வங்க ED ரெய்டு போது - மம்தா வந்து ஆதாரங்கள் பறிமுதல் சட்ட விரோதம்- சுப்ரீம் கோரிட்

 

மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 8,2026ல் அமலாக்கத்துறை ஐபேக் தேர்தல் ஆலோசனை நிறுவனத்தில் சோதனைகள் நடத்தியது.

இதில் கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் பென் ட்ரைவ் போன்றவைகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா போலீஸ் துணையுடன் வந்து பறித்து சென்றுள்ளார். இதுதான் வழக்கின் அடிப்படை.

தனியார் நடத்தும் நிறுவனத்திற்கு ஆதரவாக, சட்டப்படி நடக்க வேண்டிய ஒரு மாநில முதல்வரே வந்து ஆவணங்களை பறித்து செல்வது அதிர்ச்சி அராஜகம் என்று மக்கள் உச்சநீதிமன்றம் கருதுகிறது.

மேலும் வழக்கு நடத்தும் போது வக்கீல்கள் கூடமாக வந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி வழக்கு விசாரிக்க முடியாமல் தள்ளி வைக்கப்பட்டது.
....
தமிழ்நாட்டில் மே 2023ல் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது திமுகவைச் சேர்ந்த குமார் என்பவர் வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரி தாக்கியதாகக் கூறி மயங்கி விழுந்தார்.
அவரை திமுகவினர் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதனால் ஆத்திரமடைந்தவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் முகப்புக் கண்ணாடியை உடைத்து, சைடு ரியர் வியூவ் கண்ணாடியை சேதப்படுத்தினர்.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து பாதுகாப்பு கேட்டு கரூர் நகர காவல் நிலையம் சென்றனர். அதன்பிறகு சேதமடைந்த காரை அங்கே விட்டுவிட்டு கரூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்றனர். இதையடுத்து மற்ற வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனைக்கு சென்ற இடங்களிலும் கட்சியினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால் அனைத்து வருமான வரித்துறை அலுவலர்களும் எஸ்.பி. அலுவலகம் வந்தனர்.

ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டுக்கு சோதனைக்கு சென்ற காயத்ரி உள்ளிட்ட 4 அதிகாரிகளும் போலீஸ் பாதுகாப்புடன் கார்களில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு சென்று சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதனால் வருமான வரித்துறை சோதனை மாலை வரை நிறுத்தப்பட்டிருந்து. 

No comments:

Post a Comment

Srirangam Temple land - sale, transfer stayed by High court

ஸ்ரீரங்கம் தாலுகா திம்மராயசமுத்திரம் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் 6 சென்ட் பரப்பளவு கொண்ட, சுமார் ₹600 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் நிலம்...