#திருப்பரங்குன்றம் மலையின் மீது அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, #விசுவஹிந்துபரிஷத் மற்றும் #பஜ்ரங்தள் சார்பில் மாநில இணை அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் பக்தி மற்றும் அமைதியான முறையில் 108 தேங்காய்கள் உடைத்து பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்து கொண்ட 19 பேரை தமிழக காவல்துறை கைது செய்து, அவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மதச்சார்பற்ற உரிமைகள் மற்றும் ஆன்மீக சுதந்திரம் குறித்த விவாதங்களையும் தூண்டியது. இதனை தொடர்ந்து, #பஜ்ரங்தள்_மாநிலஅமைப்பாளரும், மதுரை #உயர்நீதிமன்றவழக்கறிஞருமான #PM_பிரிதிவிராஜன் அவர்கள், குற்றமற்ற இந்த 19 பேர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

No comments:
Post a Comment