Wednesday, March 25, 2026

கோயில் சொத்து பத்திரப் பதிவு அரசாணை வாபஸ் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

 

கோயில் சொத்து பத்திரப் பதிவு அரசாணை வாபஸ் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் Tamil Indian express webDesk 26 Mar 202

தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்ய வழிவகை செய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற்றுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோயில் நிலங்களை தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யவும், பட்டா பெறவும் வழிவகுத்த வருவாய்த்துறையின் சர்ச்சைக்குரிய அரசாணையைத் திரும்பப் பெற்றுள்ளதாக என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்ய வழிவகை செய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற்றுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்தத் தகவலை அடுத்து, அந்த அரசாணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தமிழகத்தில் கோயில் நிலங்களைப் பாதுகாப்பதற்காக, பதிவுத் துறையில் அந்த நிலங்களின் மதிப்பீட்டை 'பூஜ்ஜியம்' எனப் பதிவிடுவது நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் கோயில் நிலங்களைத் தனிநபர்கள் விற்பனை செய்யவோ அல்லது பட்டா பெறவோ முடியாது.

ஆனால், கடந்த 2025 ஆகஸ்ட் 29-ம் தேதி வருவாய்த் துறை வெளியிட்ட ஒரு புதிய அரசாணை, கோயில் நிலங்களைப் பத்திரப் பதிவு செய்யவும், பட்டா பெறவும் வாய்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த அரசாணை கோயில் சொத்துகளைத் தனிநபர்கள் எளிதாகத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ள வழிவகுக்கும் என்றும், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுதாரர் வாதிட்டிருந்தார்.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, சர்ச்சைக்குரிய அந்த அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனால் கோயில் நிலங்கள் தனிநபர்களுக்குக் கைமாறும் சூழல் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலப் பதிவு தொடர்பான அந்த அரசாணையை அரசு முழுமையாகத் திரும்பப் பெற்றுவிட்டது என்ற தகவலைத் தெரிவித்தார்.

அரசாணையே ரத்து செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் கோயில் நிலங்களின் பாதுகாப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment