யாராவது இந்த நெடிய கொடுங்கனவில் இருநது என்னை தட்டி எழுப்புங்கள். அடுத்தவரின் மூளையில் எண்ண ஓட்டங்கள், சிந்தனைகள் எப்படியிருக்கும் என புரிந்துகொள்ளமுடியவில்லை. 12 வயதுக் குழந்தை அவன். சாதரண குடும்பத்தில் இருந்து வந்தேன். மாத வாடகைக்கும், ஸ்கூல் பீசுக்கும் திணறுவேன். சிங்கிள் பேரண்ட்டாக என்னை நிலைநிறுத்திக்கொள்ளவும், எனது மகனை பாதிக்காமல் கொண்டு செல்லவுமே முயன்றேன். எனது அப்பா, அம்மா, அண்ணா உதவியுடன் அவனுக்கு இயற்கையோடு கிராமத்து வாழ்வை, நண்பர்களிடனும் மரங்களிடனுமே வாழ வைத்தேன். தியோ பிறந்ததிலிருந்து அவர்களுடனே வளர்ந்து வந்தான். அவனை வேருடன் பிடுங்கி சென்னையில் நட வேண்டாம் என எண்ணினேன். அவனது விருப்பத்துடனே வரட்டும் என நினைத்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக சென்னை வர ஒப்புக்கொண்டான். ஆனால் ஆதார் கார்ட் கட்டாயத்தின்பேரில் சேர்க்கமுடியவில்லை. பாதியிலேயோ அல்லது அடுத்த வருடமோ எல்லோரும் சென்னை வந்துவிடுவோம் என்றேன். கலீல் ஜிப்ரானின், உங்கள் குழந்தைகள் உங்களிலிருந்து வந்தவர்கள்; உங்களுக்காக உருவாக்கப்பட்டவர்கள் இல்லை என்னும் வரியை எனது கர்ப்பகாலத்தில் படித்தேன். தியோவை அடித்து வளர்த்ததில்லை. எப்போதாவது சப்தமிடுவேன், விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் தியோ அதிகம் விடுப்பு எடுத்துள்ளான். அவனை படி என்று கூட சொல்ல மாட்டேன். ஆனால், மதிப்பெண்கள் எடுத்துவிடுவான். அவ்வளவு மூளைக்காரன். அபார ஞாபக சக்தி. கடந்த மூன்று வாரங்கள், வேலைக்கு செல்லாமல், முழுவதுமாக என்னுடன் வைத்துப் பார்த்துக்கொண்டேன். என்னுடன் வீட்டில், பூவுலகின் நண்பர்கள் அலுவலகத்தில் அல்லது வெற்றி வீட்டில் என தியோவிற்கு அன்று பிடித்த இடத்தில் இருந்தான். நண்பர்களைப் பார்க்க வேண்டும்; பள்ளிக்கு செல்ல வேண்டும், வீட்டில் விடு என தியோ கேட்டதால், நேற்று டெண்டல் சென்று அவனுக்கு சிகிச்சையைத் துவங்கி, அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் சனிக்கிழமை வாங்கினேன். வேர்சிகிச்சைக்கு பயந்து, சனிக்கிழமை என் கூடவே இரு என சொல்லிக்கொண்டே வந்தான். உன்னோடுதானடா இருப்பேன். பயப்படாத'னு சொல்லி, தியோவை மாலை வீட்டில் விட்டுட்டு கோயமுத்தூர் கிளம்பினேன். தசாரா விடுமுறையில் கெவி ட்ரிப் செல்ல பல திட்டங்களிட்டான். இரவு என்னிடம், பஸ் வந்துடுச்சா, ஏறிட்டியா எனக் கேட்ட பின்பே தூங்கினான். காலையில் அம்மாவிடம் பள்ளிக்கு இட்லி கட்டி கொடுக்க சொல்லியிருக்கான்; புதிதாக தைத்த பேண்ட் போடப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான். தியோவைப் போன்று யாராலும் அப்படி மரமேற முடியாது. ஹைபர் ஆக்டிவ் என்பதால் எதன் மீதாவது ஏறிக்கொண்டே இருப்பான். மரமெல்லாம் புடவைகள் ஒவ்வொரு வித ஊங்சலாய்த் தொங்கும், ஏற, இறங்க, படுக்கவென விதவிதமாய். ஆனால் இன்று புடவை எடுத்து பாத்ரூம் பக்கம் சென்றுள்ளான். வீட்டின் முன் இருக்கும் மரத்தில் கட்ட சொல்லியிருக்கிறார் அம்மா. அண்ணா பள்ளிக்கு கிளம்பசொல்லியதும் குளிக்க போனவன், மீண்டும் மரமேறி அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறான். பத்து நிமிட இடைவெளி, சீக்கிரம் வாடா என குரலெழுப்பிச் சென்ற அம்மாவே தியோவை முதலில் கண்டார். பத்து நிமிடங்களில், பேச்சு மூச்சில்லை. 12 ஆண்டுகளாக தியோவின் மனம் கோணாமல் வளர்க்க முயற்சித்தோம். ஆனால், ஏன் எதற்கு என எதற்கும் பதிலில்லை என்னிடம். ஏதோதோ யோசித்துப் பார்க்கிறேன். முடிந்தவரை நேர்மறை எண்ணங்களோடே வளர்க்கப் பார்த்தேன். அவன் அப்பாவைப் பற்றிகூட எதிர்மறையாக எண்ணம் சொல்லிக்கொடுத்து வளர்க்கவில்லை. மறந்தும் கூட எனது மகனுக்கு யார் மீதும் நான் வெறுப்பை ஊட்டி வளர்க்கவில்லை. அம்மா கோவக்காரி தெரியுமில்லை, சண்டை போட்டுட்டு வந்துட்டேன், தாய்வழிச் சமூகம் நீ என சொல்லியே வளர்த்து வந்தேன். அவனது முழுப்பெயர் தியோ ஆழிசை. எப்பொழுதும் நான் தியோவுடன் உரையாடுவேன். அவனுடைய கருத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பேன். பெரும்பாலும் என்ன செய்தாலும் அவனிடம் கருத்து கேட்பேன். உரையாடலும் விளையாட்டுமாகவே இருந்தோம். தியோவிற்குப் பிடித்த சீரியஸ் நான் பார்ப்பதும், அவனுடம் கேம்ஸ் விளையாடுவதுமாகவே இருந்தேன். ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே, தாய் வளரத் துவங்குகிறாள் என்பேன். அவனோடு சேர்ந்து வளருவதாகவே எண்ணினேன். தியோவிற்கு மனதளவில் அவ்வளவு நெருக்கமாய் இருந்தும், அவனால் என்னிடம் பகிர முடியாத துயரம் இருந்ததோ? இந்த சிறுவயதில், பெரிய பாரத்தை தனியாக சுமக்க விட்டிருக்கிறேன். ஒரு அம்மாவாக எனது கையாலாகத்தனமே பெருங்குற்றம் இதில்.
நான் இல்லையென்றால் தியோவிற்கு யாரெல்லாம் இருக்க வேண்டும்; என்னவெல்லாம் செய்ய வேண்டும் என என்னுடைய நண்பர்கள் பட்டாளத்தையே அவனுக்கு உருவாக்கி வைத்திருந்தேன். அவனில்லாமல் நான் எப்படியிருப்பேன் என யோசித்தது கூட இல்லை. விரல்கள் நடுங்க இப்பதிவை இடுகிறேன். தற்போதைய வீடியோக்கள் இவை. இப்படி ஓராயிரம் நினைவுகள். எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் அவன்.
யாராவது இந்த நெடிய கொடுங்கனவில் இருநது என்னை தட்டி எழுப்புங்கள். அடுத்தவரின் மூளையில் எண்ண ஓட்டங்கள், சிந்தனைகள் எப்படியிருக்கும் என புரிந்துகொள்ளமுடியவில்லை. 12 வயதுக் குழந்தை அவன். சாதரண குடும்பத்தில் இருந்து வந்தேன். மாத வாடகைக்கும், ஸ்கூல் பீசுக்கும் திணறுவேன். சிங்கிள் பேரண்ட்டாக என்னை நிலைநிறுத்திக்கொள்ளவும், எனது மகனை பாதிக்காமல் கொண்டு செல்லவுமே முயன்றேன். எனது அப்பா, அம்மா, அண்ணா உதவியுடன் அவனுக்கு இயற்கையோடு கிராமத்து வாழ்வை, நண்பர்களிடனும் மரங்களிடனுமே வாழ வைத்தேன். தியோ பிறந்ததிலிருந்து அவர்களுடனே வளர்ந்து வந்தான். அவனை வேருடன் பிடுங்கி சென்னையில் நட வேண்டாம் என எண்ணினேன். அவனது விருப்பத்துடனே வரட்டும் என நினைத்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக சென்னை வர ஒப்புக்கொண்டான். ஆனால் ஆதார் கார்ட் கட்டாயத்தின்பேரில் சேர்க்கமுடியவில்லை. பாதியிலேயோ அல்லது அடுத்த வருடமோ எல்லோரும் சென்னை வந்துவிடுவோம் என்றேன். கலீல் ஜிப்ரானின், உங்கள் குழந்தைகள் உங்களிலிருந்து வந்தவர்கள்; உங்களுக்காக உருவாக்கப்பட்டவர்கள் இல்லை என்னும் வரியை எனது கர்ப்பகாலத்தில் படித்தேன். தியோவை அடித்து வளர்த்ததில்லை. எப்போதாவது சப்தமிடுவேன், விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் தியோ அதிகம் விடுப்பு எடுத்துள்ளான். அவனை படி என்று கூட சொல்ல மாட்டேன். ஆனால், மதிப்பெண்கள் எடுத்துவிடுவான். அவ்வளவு மூளைக்காரன். அபார ஞாபக சக்தி. கடந்த மூன்று வாரங்கள், வேலைக்கு செல்லாமல், முழுவதுமாக என்னுடன் வைத்துப் பார்த்துக்கொண்டேன். என்னுடன் வீட்டில், பூவுலகின் நண்பர்கள் அலுவலகத்தில் அல்லது வெற்றி வீட்டில் என தியோவிற்கு அன்று பிடித்த இடத்தில் இருந்தான். நண்பர்களைப் பார்க்க வேண்டும்; பள்ளிக்கு செல்ல வேண்டும், வீட்டில் விடு என தியோ கேட்டதால், நேற்று டெண்டல் சென்று அவனுக்கு சிகிச்சையைத் துவங்கி, அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் சனிக்கிழமை வாங்கினேன். வேர்சிகிச்சைக்கு பயந்து, சனிக்கிழமை என் கூடவே இரு என சொல்லிக்கொண்டே வந்தான். உன்னோடுதானடா இருப்பேன். பயப்படாத'னு சொல்லி, தியோவை மாலை வீட்டில் விட்டுட்டு கோயமுத்தூர் கிளம்பினேன். தசாரா விடுமுறையில் கெவி ட்ரிப் செல்ல பல திட்டங்களிட்டான். இரவு என்னிடம், பஸ் வந்துடுச்சா, ஏறிட்டியா எனக் கேட்ட பின்பே தூங்கினான். காலையில் அம்மாவிடம் பள்ளிக்கு இட்லி கட்டி கொடுக்க சொல்லியிருக்கான்; புதிதாக தைத்த பேண்ட் போடப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான். தியோவைப் போன்று யாராலும் அப்படி மரமேற முடியாது. ஹைபர் ஆக்டிவ் என்பதால் எதன் மீதாவது ஏறிக்கொண்டே இருப்பான். மரமெல்லாம் புடவைகள் ஒவ்வொரு வித ஊங்சலாய்த் தொங்கும், ஏற, இறங்க, படுக்கவென விதவிதமாய். ஆனால் இன்று புடவை எடுத்து பாத்ரூம் பக்கம் சென்றுள்ளான். வீட்டின் முன் இருக்கும் மரத்தில் கட்ட சொல்லியிருக்கிறார் அம்மா. அண்ணா பள்ளிக்கு கிளம்பசொல்லியதும் குளிக்க போனவன், மீண்டும் மரமேறி அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறான். பத்து நிமிட இடைவெளி, சீக்கிரம் வாடா என குரலெழுப்பிச் சென்ற அம்மாவே தியோவை முதலில் கண்டார். பத்து நிமிடங்களில், பேச்சு மூச்சில்லை. 12 ஆண்டுகளாக தியோவின் மனம் கோணாமல் வளர்க்க முயற்சித்தோம். ஆனால், ஏன் எதற்கு என எதற்கும் பதிலில்லை என்னிடம். ஏதோதோ யோசித்துப் பார்க்கிறேன். முடிந்தவரை நேர்மறை எண்ணங்களோடே வளர்க்கப் பார்த்தேன். அவன் அப்பாவைப் பற்றிகூட எதிர்மறையாக எண்ணம் சொல்லிக்கொடுத்து வளர்க்கவில்லை. மறந்தும் கூட எனது மகனுக்கு யார் மீதும் நான் வெறுப்பை ஊட்டி வளர்க்கவில்லை. அம்மா கோவக்காரி தெரியுமில்லை, சண்டை போட்டுட்டு வந்துட்டேன், தாய்வழிச் சமூகம் நீ என சொல்லியே வளர்த்து வந்தேன். அவனது முழுப்பெயர் தியோ ஆழிசை. எப்பொழுதும் நான் தியோவுடன் உரையாடுவேன். அவனுடைய கருத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பேன். பெரும்பாலும் என்ன செய்தாலும் அவனிடம் கருத்து கேட்பேன். உரையாடலும் விளையாட்டுமாகவே இருந்தோம். தியோவிற்குப் பிடித்த சீரியஸ் நான் பார்ப்பதும், அவனுடம் கேம்ஸ் விளையாடுவதுமாகவே இருந்தேன். ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே, தாய் வளரத் துவங்குகிறாள் என்பேன். அவனோடு சேர்ந்து வளருவதாகவே எண்ணினேன். தியோவிற்கு மனதளவில் அவ்வளவு நெருக்கமாய் இருந்தும், அவனால் என்னிடம் பகிர முடியாத துயரம் இருந்ததோ? இந்த சிறுவயதில், பெரிய பாரத்தை தனியாக சுமக்க விட்டிருக்கிறேன். ஒரு அம்மாவாக எனது கையாலாகத்தனமே பெருங்குற்றம் இதில்.
நான் இல்லையென்றால் தியோவிற்கு யாரெல்லாம் இருக்க வேண்டும்; என்னவெல்லாம் செய்ய வேண்டும் என என்னுடைய நண்பர்கள் பட்டாளத்தையே அவனுக்கு உருவாக்கி வைத்திருந்தேன். அவனில்லாமல் நான் எப்படியிருப்பேன் என யோசித்தது கூட இல்லை. விரல்கள் நடுங்க இப்பதிவை இடுகிறேன். தற்போதைய வீடியோக்கள் இவை. இப்படி ஓராயிரம் நினைவுகள். எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் அவன்.


No comments:
Post a Comment