Friday, October 4, 2024

கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து! ஈவெராமசாமியார் சிலை பீடத்தில் உள்ள வாசகம் பற்றி பேசியதாக நீதிபதி கருத்து

கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து! ஈவெராமசாமியார் சிலை பீடத்தில் உள்ள வாசகம் பற்றி பேசியதாக நீதிபதி கருத்து! By Vignesh Selvaraj Updated: Thursday, October 3, 2024,





 சென்னை: ஈவெராமசாமியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதற்காக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என பேசியிருந்தார். 

இதுதொடர்பாக தந்தை ஈவெராமசாமியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கோவில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சிலையை காவல் துறையினர் அகற்றியிருக்க வேண்டும், சிலையை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு பதில், தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கோவிலுக்கு எதிரில் ஆத்திகர்கள் குறித்து சிலை பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பற்றியே மனுதாரர் கனல் கண்ணன் அவ்வாறு பேசியிருக்கிறார் எனக் கூறி, கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-has-quashed-the-case-filed-against-kanal-kannan-643493.html

No comments:

Post a Comment

Dravidianist Govts' HR&CE Dept Buried A 1966 Supreme Court Verdict And Let 49 Acres Of Madurai Meenakshi Temple Land Stay With RC Church

Dravidianist Govts' HR&CE Dept Buried A 1966 Supreme Court Verdict And Let 49 Acres Of Madurai Meenakshi Temple Land Stay With RC Ch...