Thursday, October 3, 2024

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம்

இதோ ஓர் உதாரணம்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இதற்கு ஓரளவு தமிழ் தெரிந்தவர் கூட பொருள் புரிந்து கொண்டு விடுவார்... இருந்தாலும் சாலமன் பாப்பையா உரையைப் பாருங்கள்.
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
— சாலமன் பாப்பையா
இவருக்கே தமிழே தெரியாது. இதோ மு.கருணாந்தி உரை வளத்தைப் பாருங்கள்.
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
— மு. கருணாநிதி
இது உரையா உருட்டா என்று கேட்பவர்கள் மீது குண்டாஸ் போடப்படும்.

No comments:

Post a Comment

Sarvam AI becomes a Unicorn on funding