சுவிசேஷ கதைகள் இஸ்ரேலின் முதல் நூற்றாண்டில் ரோம் ஆட்சியால் மரண தண்டனையில் செத்த மனிதன் இயேசுவை தெய்வீகமாக புனையப்பட்ட கதைகள்.
இயேசு பற்றி நம்மிடம் உள்ள கதைகள் & செய்திகள் அனைத்திற்கும் ஒரே தரவு மதம் பரப்புவதற்காக வரையப்பட்ட பைபிள் சுவிசேஷக் கதைகள் மட்டுமே. பைபிளில் பழைய ஏற்பாடு என்பது யூதர்களின் எபிரேய புராணக் கதைகள். புதிய ஏற்பாடு கிறிஸ்துவர் கிரேக்க புராணக் கதைகள்.
இஸ்ரேலில் ரோமன் ஆட்சி மரண தண்டனையில் செத்த மனிதன் இயேசுவை தெய்வீகமாக உயர்த்தி 70 - 75ல் கிரேக்க மொழியில் மாற்கு சுவிசேஷக் கதை வரையப்பட்டது. யூதேயாவில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த யோவான் ஸ்நானகரைத் தேடிச் சென்று கலிலேயர் இயேசு பாவமன்னிப்பு ஞானஸ்தானம் பெற்றதாக கதையை தொடக்கம்
மாற்கு 1:2 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். |
மாற்கு கதாசிரியர் சுட்டது
மலாக்கி3: 1 இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார் |
மாற்கு சுவிசேஷம் யோவான் கைதிற்குப் பின்பே இயேசு இயக்கம் தொடங்கினார்.
மாற்கு 1:14 இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். 15 “சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது. |
யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் தந்த பின்பும் தனித்து இயங்கினார் (கைதாகவில்லை) (சர்ச் செவிவழி கதைப்படியே ரோம் மன்னன் ட்ராஜன் ஆட்சி போது அதாவது 97 -118ல் வரையப்பட்டது)
யோவான் 3: 22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது). |
யோவான் கைது மரணம் பற்றிய சுவிசேஷக் கதை
ஏரோது அந்திப்பாஸ் ஏரோது அந்திப்பா ராஜா தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னுடைய சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தன்னுடைய மனைவியாக வைத்துக் கொண்டான்.ஏரோது செய்தது தவறு என்று யோவான் ஸ்நானகர் கண்டித்திட, அவரைச் சிறையில் தள்ளினான். ஏரோது பிறந்தநாள் விழாவில் நன்றாக நடனம் ஆடி விருந்தினர்களை திருப்தி செய்த ஏரோதியாள் மகள் சலோமி அம்மா பேச்சைக் கேட்டு “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடுங்கள்” என்று கேட்க; ஏரோது ஆணையில் ஆணையில் கொல்லப்பட்டார்.
லூக்கா 3:1 அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது; பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான். ஏரோது அந்திப்பாஸ் கலிலேயாவை ஆண்டான். ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும் திராகொனித்தி நாட்டையும் ஆண்டான் |

மாற்கு கதாசிரியர் எலியா தீர்க்கர் என பழைய ஏற்பாடு காலத்தில் மன்னர் ஆகாப் மனைவி யேசபேல் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தை பிடுங்க சதி செய்து கொலை செய்ததை தழுவியே இக்கதை புனைந்துள்ளார் என பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்
கிறிஸ்துவ மதப் புராண நாயகர் ஏசு– பற்றி தெரிந்து கொள்ள உள்ள ஒரே ஒரு வழி சுவிசேஷக் கதைகளே.
சுவிசேஷக் கதைகளின் வரைந்துள்ள கதை அமைப்பு, கதாசிரியர்கள் உத்திகள், கூற்று வைத்தே பைபிளியல் அறிஞர்கள் இவை புனைக்கதைகள் என ஆய்வு முடிபு றிவிக்கின்றார்கள். இந்த நான்கு கதாசிரியர்களில் முதலில் வரையப்பட்டது மாற்கு தான். இதன் காலம் பொ.கா. 70-75ல்.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus” என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார் - //The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, and that two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled “Q”} …. // Page -25.
மாற்கு1:2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். |
மலாக்கி3: 1 இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார் |
மத்தேயு11:14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா என்றார் இயேசு |
லூக்கா7: 27 ' இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது. |
மாற்கு கதையில் யோவான் ஸ்நானகன் பாவமன்னிப்பு பின்பே பரிசுத்த ஆவி பெற்றது எனக் காட்டுவதை மாற்றி ஸ்நானகரே இயேசுவை புகழ்ந்தார் எனக் கதை ஆனால்
மத்தேயு11: 2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார். 3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார். 12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். 13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்கு உரைத்தன. |
|
மத்தேயு11:13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப் பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. |
லூக்கா16: 16 திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். |
மலாக்கி4:1 இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், என்கிறார் படைகளின் ஆண்டவர். 5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். 6 நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார். |
யோவேல்1:15 துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன். |
யோவேல்2: 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும். சந்திரன் இரத்தமாக மாற்றப்படும். பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு, கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.” சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள். இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள். |
|
. |
மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். 5.இயேசு அவர்களிடம்,, “யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள்.23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன் |
அப்போஸ்தலர் நடபடிகள் 23:8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர். |
யோவான் 6:48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49. நமது மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப் போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் பூமியில் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். |
| மத்தேயு19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப் படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். |
ஒத்த கதையமைப்பு சுவிசேஷங்கள்
மாற்கு கதையின் அடிப்படையை மாற்றாமல் மத்தேயூ - லூக்கா கதாசிரியர்கள் அதே நடைமுறையை அதாவது கைதிற்குப் பின்பே இயேசு இயக்கம் தொடக்கம் எனக் கதை.
2ம் நூற்றாண்டு பாப்பியாஸ் பெயரில் 4ம் நூற்றாண்டு குறிப்பு-
//மாற்கு பற்றி ஒரு மூப்பர் சொன்னதாக பேதுருவின் மொழி பெயர்ப்பாளராக அவர் நினைவில் வைத்து அனைத்தையும் துல்லியமாக எழுதினார், பேதுருவையே இவர் பின் தொடர்ந்தவர்- இயேசுவை பின்பற்றியோ கேட்டவரோ இல்லை. பேதுரு தேவைக்கு ஏற்ப அவ்வப்போது சொன்னவை நிகழ்ந்த வரிசையில் இல்லை. பேதுருவிடம் கேட்டவற்றில் அனைத்தையும் எந்த தவறு இன்றி எழுதி முடித்தார். ”
// மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலேயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவாரம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.//-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.
If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned...The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.
பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார், "Where as Synoptic record most of Jesus ministry is located in Galilee,John place most of it in Jerusalem and its neighbourhood." - Page-27 - THE REAL JESUS.
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது- ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-//The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition.// P-64 V-II
புதிய ஏற்பாட்டு இயேசு கதைகள், புராணக் கதைகள்- இவற்றின் ஏடுகளோ சற்றும் நம்பிக்கை தருவதாக இல்லை (இங்கே). ஆனால் முதல் நூற்றாண்டில் வாழ்ந்ததான ஜோசபஸ் என்னும் ஆசிரியர் எழுதிய நூல்கள் உள்ளன, ஆனால் இவை 1000 வருட பிற்கால ஏடுகள். இவற்றில் அக்கால நிகழ்வுகள் பலவற்றைக் காண்கிறோம். இயேசு பற்றி உள்ள இரண்டு பத்திகள் கிறிஸ்துவர்கள் 4ம் நூற்றாண்டில் சொருகிய போர்ஜறிகள் என பெரும்பாலான பைபிளியல் அறிஞர் ஏற்றனர் எனப் பார்த்தோம். (இங்கே)யோவான் ஞானஸ்நானகர் பற்றி ஜோசபஸ் சொல்வது
மாற்கு 6:3 இவர் தச்சன் தானே. இவருடைய தாய் மரியாள் அல்லவா! இவர் யாக்கோபு, யோசே, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள்.
மத்தேயு 13:55 தச்சுன் மகன் தானே இவன். இவன் தாய் மரியாள். யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா ஆகியோர் இவன் சகோதரர்கள். 56 இவனது எல்லா சகோதரிகளும் நம்முடன் உள்ளார்கள்.
மாற்கு அடிப்படை- கோட்பாடுபடி, எல்லா சீடரும் செத்த பின்னர், சாட்சிகள் யாரும் இல்லாதபடிக்கு இஸ்ரேலின் புவியியல் தெரியாத மாற்கு எனும் கிரேக்கர் புனைந்த கதையே முதல் சுவிசேஷக் கதை, மற்றவை அதிலிருந்து தன்னிச்சையாக கதை செய்தவை
வரலாற்று ஆசிரியர்கள் சுவிசேஷ கதையமைப்பு மிகத் தெளிவாக செத்த மனிதனை தெய்வமாக்கி அடிமைகளாகி பணம் சம்பாதிக்கும் நோக்கில் புனையப்பட்டது என நிராகரிக்கின்றனர்
மாற்கு சுவியே அடிப்படை எனும்போது, நற்செய்தி என்பது ஏசு பற்றியது இல்லை
யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள் ' என்றார். அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு | The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார். நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின் இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசு ச்றிவித்தது என்றோ, ஏன் நற்செய்தி என்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை. யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றின- இவற்றின் எதிரொலி நாம் 100 வாக்கில் வரையப்பட்ட யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார். |
மாற்கு சுவியே அடிப்படை எனும்போது, கன்னி பிறப்பு கட்டுக்கதை
There seems to be no doubt that the Infancy Narratives of Matthew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia மத்தேயு, லூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் "குழந்தைப் புனையல்கள்" எனப்படும் இவை- சர்ச் பாரம்பரியப்படியான செவிவழி மூலக் கதை- ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு அன்றே உயிர்த்து எழுந்து வானுலகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது மட்டுமே, இவை எல்லாம் பிற்சேர்க்கை. |
மாற்கு சுவியே அடிப்படை எனும்போது இயேசு யூத இனவெறி பிடித்து திரிந்த அடிப்படை வாதி
மாற்கு சுவியே அடிப்படை எனும்போது, கன்னி பிறப்பு கட்டுக்கதை; நான்காம் சுவியில் ஏசு தன்னை தேவன் என்றவை எல்லாமே கதாசிரியர் கற்பனை
Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: //“The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters: the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”// |












No comments:
Post a Comment