Friday, July 23, 2021

George Ponnaiah


திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை, பாரதமாதா, இந்துமதம் குறித்து ஆணவமாக பேசிய மதபோதகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு…. 

Read more at: https://tamil.oneindia.com/news/nagercoil/police-files-case-against-father-george-ponnaiya-for-his-hate-speech-against-modi-and-dmk/articlecontent-pf574752-427832.html
 
https://patrikai.com/case-registered-in-7-sections-of-father-george-ponniah-who-spoke-arrogantly-as-bharat-mata-hinduism-dmk-victory-is-our-alms/

நாகர்கோவில்: பாரத மாதா, இந்துமதம், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா  குறித்து அவதூறு பரப்பியதுடன், திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை என்று ஆணவமாகவும், அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கிறிஸ்தவ மத போதாகர் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது இந்து மதத்தினர் மட்டுமின்றி, பாரத மாதாவையும் தரக்குறைவாகவும் அருவருப்பாகவும் பேசியுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது பேச்சு குறித்து பல பகுதிகளில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்து அமைப்பினர் எச்சரிக்கை  விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.




மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது,  அமைச்சர் சேகர் பாபு. , அமைச்சர் மனோ தங்கராஜ்  ஒன்று சொல்கிறேன் நீங்கள் எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுத்தாமல் சாமி நீங்கள் கும்பிட்டாலும், ஒருத்தன் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டான். மண்டைக்காடு பக்தனும் உங்களுக்கு போட போடுவது கிடையாது, இந்துக்களும் உங்களுக்கு ஒட்டு போட போடுவது கிடையாது. நீங்கள் வெற்றி பெற்றது கிறிஸ்துவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடைய திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது எங்களுடைய ஆயர்கள், கிறிஸ்தவ ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னார்கள்.

பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம் ஆர் காந்தி செருப்பு போட மாட்டான், கேட்டால் பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம், ஆனால் நாம சூ போட்டது எதற்கு பாரதமாதா ஒரு அசிங்கம் அது நம்மை தோற்று விடக் கூடாது என்பதற்காக தான், மேலும் நமக்கு சொரி சிரங்கு எல்லாம் வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்துள்ளது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரஸான ஆளு, சொரி, சிரங்கு பிடிக்கும் அதனால செருப்பு போட்டுக்கணும்.

நாங்கள் இப்போது 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவீதமாக வந்துவிட்டோம், இன்னும் சில காலங்களில் 70 சதவீதமாக வந்து விடுவோம், எங்களை யாரும் தடுக்க முடியாது. இதை எச்சரிக்கையாக இந்து சகோதரர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.

மோடியின் கடைசி காலம் மிக மிக பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால் அமித்ஷா, மோடியை நாயும், புழுவும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். எங்கள் சாபம் உன்னை அழிக்கும் என எச்சரித்து இருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து,  மத போதகர் போதாகர் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட மாநகராட்சி துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார் போலீஸ் புகார் தெரிவித்துள்ளார். அதுபோல தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் பொன்னையா மீது புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  மத போதகர் ஜார்ஜ் பென்னையா மீது 7 பிரிவுகளில் அருமனை போலீசார்  வழக்குபதிவு  செய்துள்ளனர். ஆனால், அவரை இதுவரை கைது செய்யவில்லை.

இது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தினர் மட்டுமின்றி, தேச பக்தர்களும், திமுகவினரும் ஜார்ஜ் பொன்னைவின் ஆணவ பேச்சை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

மதத்தினரிரைடயே மோதலை உருவாக்கும் வகையிலும், தான் வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்நாட்டை இழிவாபக பேசிய இதுபோன்ற நபர்கள்மீது தேசத்துரோக சட்டம்,  குண்டாஸ் சட்டம் பாயாதோ?

'பாரத மாதா குறித்த சர்ச்சைப் பேச்சு' ; இந்து இயக்கங்கள் எதிர்ப்பு; வருத்தம் தெரிவித்த பாதிரியார்! 

சிந்து ஆர் https://www.vikatan.com/news/tamilnadu/in-kanyakumari-christian-priest-speech-makes-controversy


பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30 புகார்களை அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, `தமிழகத்தில் தி.மு.க வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபு, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களி்ல் சர்ச்சையை ஏற்படுத்தின.

அருமனையில் நடந்த போராட்டத்தில்...
அருமனையில் நடந்த போராட்டத்தில்...

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்று விட்டு எம்.எல்.ஏ-க்கள் இந்து கோயில்கள்தோறும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனப் பேசியதுடன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஓட்டுக்கு இரண்டாயிரம் வீதம் கொடுத்து கிறிஸ்தவ நாடார் ஓட்டை வாங்கி வெற்றிபெற்றதாகவும் பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். பாரத மாதா பற்றி அவர் கூறிய கருத்துகளும் பெரும் சர்ச்சைக்குள்ளாகின.

இந்த வீடியோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பரவிவருகிறது. மேலும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30 புகார்களை அளித்துள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


காவல் நிலையத்தில் புகார் அளித்த பா.ஜ.க-வினர்

இது குறித்து பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகருமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம் பேசினோம். ``அந்த வீடியோ எடிட் செய்து போடப்பட்டிருக்கிறது. யாருடைய மத உணர்வும் புண்படும்படி பேசவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறோம். இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்" என்றார்.

பாரத மாதா, மோடி, திமுக பற்றி சர்ச்சை

 பேச்சு.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

 மீது 7 பிரிவுகளில் வழக்கு 

By Veerakumar Published: Friday, July 23, 2021, 8:20 [IST]

நாகர்கோவில்: பாரத மாதா பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. ஸ்டேன்சுவாமியின் சிறைமரணத்திற்கு நீதி கேட்டும் வட்டார கிறிஸ்தவ இயக்கமும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்புகளில் ஒன்றாகும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திமுக பற்றியும் கருத்து அந்த வீடியோவில் தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாக காட்சிகள் உள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபு, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டசபை உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குறித்தும் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

எம்எல்ஏக்கள் கோவில்களுக்கு செல்ல எதிர்ப்பு மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்ற திமுக கூட்டணி எம்எல்ஏக்கள், இந்து கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.

நாகர்கோவில் தொகுதியில் பாஜக சட்டசபை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஓட்டுக்கு பணம் கொடுத்துதான், கிறிஸ்தவ மதத்திலுள்ள, நாடார் ஜாதி ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்றார் என்று பல சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார்.

மோடி, பாரத மாதா குறித்து சர்ச்சை பேச்சு இத்தோடு விடவில்லை, ஜார்ஜ் பொன்னையா. பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா குறித்தும் மோசமாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

இது அனைத்துக்கும் உச்சமாக பாரத மாதா பற்றி அவர் கூறிய கருத்துக்கள் கேட்போருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.

மத மோதல் என புகார் இந்த வீடியோ வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்ததும், ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளனர்.

7 பிரிவுகளில் வழக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதமாவதால், பல இடங்களில் போராட்டங்கள் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், பங்குத் தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல் , ஜாதி ,மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விளக்கம் இந்த சம்பவம் குறித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னய்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுவதாகவும், பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் இனிமேல் அதை திருத்திக் கொள்வதாகவும் கூறியுள்ளார். Read more at: https://tamil.oneindia.com/news/nagercoil/police-files-case-against-father-george-ponnaiya-for-his-hate-speech-against-modi-and-dmk/articlecontent-pf574756-427832.html

நாங்கள் செருப்பு போட்டு நடப்பதற்கு

 காரணம் பாரதமாதாவின் குப்பைகள்

 என் காலில் படக் கூடாது    என்பதற்காகத் தான்!   - பாதிரியாரின் ஆணவப் பேச்சு!

குமரியில் ஆபிரகாமிய மதத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர், திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் கிறிஸ்தவர்கள் ஓட்டு ஓட்டு பிச்சை தான்!
நாங்கள் குமரியில் 62 சதவீத கிறிஸ்துவர்கள் இருக்கிறோம். இது இந்துக்களுக்கு ஒரு எச்சரிக்கை' என்று பேசினார்.
ஆனால் இதுபற்றி ஒரு மீடியாவும் பேசாது!
மிஷனரிகள் யாரும் மத வெறுப்பை தூண்டுவது கிடையாது. கிறிஸ்தவர்கள் அமைதியை விரும்புபவர்கள். இந்துக்கள் தான் மதவெறியை தூண்டுகிறார்கள் என்று கூசாமல் பேசும் மிஷனரிகள் லைனில் வந்து கமென்ட் போடவும்!
மத போதகர் ஜார்ஜ் பொன்னையா பேசியது தற்செயல் என்றோ,அது உணர்ச்சி வசத்தால் வந்த வார்த்தை என்றோ எடுத்துக்கொள்ள முடியாது.இதுதான் உண்மையான அரசியல் செய்தி,இப்படி பேசாமலே சாதிக்க முடியும் என்று நம்பியிருந்தார்கள்.ஆனால் பாஜகவின் எழுச்சி இன்று அரசியல் களத்தை தோலுரிக்கிறது..
இங்கு திமுகவும்,அதிமுகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும்,இது பெரியார் பூமி என்றும் பேசுவதற்கு பின்னால் இருக்கும் உண்மை அரசியல் ஜார்ஜ் பொன்னையாவின் குரல்தான்.அவர் ஒரு தனி நபரல்ல,கருத்தியலின் பிரச்சார முகங்களில் ஒன்று அவ்வளவுதான்..
திமுகவினர் எல்லோரும் கோவிலுக்கு போகிறவர்களாக இருந்தும்,நல்ல ஹிந்துக்களாக இருந்தும் அதை மறைக்க வேண்டிய அரசியல் எங்கிருந்து உருவாகிறது என புரிகிறதா?
அமைச்சர் சேகர்பாபு,மனோ தங்கராஜ் போன்றவர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பலமுறை சென்றுவிட்டார்கள்.அங்கே பிரசன்னம் பார்க்க அமைச்சரே சென்றார் என்கிற போது,அவர்களின் நம்பிக்கை வீச்சு இவர்களுக்கு புரிகிறது..இப்படி வெளிப்படையாக திமுக அமைச்சர்கள் நடந்துகொள்வதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
திமுகவினர் முன்பு போல் இல்லாமல் தங்கள் பக்தி உணர்வை வெளிப்படையாக காட்டிக்கொள்கிறார்கள். அதையெல்லாம் இந்த தரப்புகளால் தாங்க முடியவில்லை.இதுதான் நாம் கவனிக்க வேண்டிய இடம்.
இங்கே திராவிடம்,தமிழ் என இன்னும் லட்சம் வார்த்தைகளின் பின்னே சென்று ஒளிந்து கொள்வது, தமிழன் தன்னை ஹிந்து என்று உணரக் கூடாது என்ற நோக்கத்தினால் மட்டுமே..அதை உணர வைக்கும் அரசியல் இங்கே எழுந்து வருகிற போது ஜார்ஜ் பொன்னையாக்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
பொதுவாகவே கன்னியாகுமரி ஆசாமிகள் ஒருமாதிரியாகத்தான் பேசுவார்கள், அதிலும் ஜெகத் கஸ்பர் போன்ற பாதிரிகள் பேச்செல்லாம் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்
அதில் அந்த ஜார்ஜ் பொன்னையா எனும் பாதிரியும் வசமாக சிக்கிவிட்டார் அல்லது தன் விஷத்தை கக்கிவிட்டார்
அவரின் பேச்சு ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடு, பாதிரி ஸ்டேன் சாமியின் நினைவு அஞ்சலியில் அவர் பேசியிருக்க்கும் விஷயம் என்பது திமுக கிறிஸ்தவர்களை கைவிடுவிடுகின்றது எனும் ஒருவித விரக்தியில் பேசியதையே சொல்கின்றது
ஸ்டேன் சாமி விவகாரத்தை திமுக கையில் எடுக்கவில்லை, காரணம் அதில் மர்மம் ஏதுமில்ல்லை. இந்தியாவில் எங்கெல்லாமோ அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிட்ட சாமி கடைசியில் முழுக்க கிறிஸ்தவ மருத்துவமனையில்தான் கிசிச்சை பெற்றார் அப்படியே மரித்தும் போனார்
ஆனால் கிறிஸ்தவ அமைப்புக்கள் பலவற்றுக்கு திமுக மோடி அரசை ஸ்டேன் சாமி விவகாரத்தில் விமர்சிக்கவில்லை , அவர்களோடு இணக்கமாக செல்கின்றார்கள் என்பது போல் சந்தேக கண் கொள்ள வைத்தன‌
கூடுதலாக திமுகவின் அரசியல் என்பது இப்பொழுதெல்லாம் இந்து ஆலய பாதுகாப்பு, இந்துக்களின் வழிபாட்டு உரிமை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதையும் இவர்களால் ரசிக்க முடியவில்லை
முன்பு டெல்லியில் காங்கிரஸ் அதன் தயவில் தமிழக கருணாநிதி , அதிமுக அரசியல் திராவிடம் எனும் பெயரில் இந்து விரோதம் மற்ற மதத்தவருக்கு சவுகரியம் என்பதை மட்டும் கண்ட , சுமார் 70 ஆண்டுகளாக கண்டு தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இது பெரும் அடி
இந்துக்களிடம் ஏற்பட்டிருக்கும் எழுச்சியினை திமுக போன்ற பெரும் கட்சிகள் சாதாரணமாய் எடுக்க முடியாது, அப்படி எடுத்தால் மிகபெரிய வீழ்ச்சியினை அக்கட்சி பின்னாளில் பெறும்
இதனால் மிக கவனமாக இந்துக்களின் அதிருப்தியினை களையும் நோக்கில் திமுக அரசு பல காரியங்களை செய்கின்றது, சேகர்பாபுவின் இடைவிடாத பயணங்கள் அதை சொல்கின்றன‌
ஆனால் திமுகவும் தமிழகமும் தங்கள் சொத்து, தாங்கள் இஷ்டபடி ஆட்டிவைக்கும் கட்சி திமுக‌ என இருமாந்திருந்த கிறிஸ்தவ அமைப்ப்புக்கள் அலறி கொண்டிருக்கின்றன‌
இது தொடக்கமே, இன்னும் பல பல அலறல்கள் தொடர்ந்து கேட்கும்
இயேசுபிரான் சொன்னதுதான் " விரியன் பாம்பு குட்டிகளே, வரபோகும் சினத்துக்கு உங்களால் எப்படி தப்பமுடியும்? , ஏற்கனவே அடிமரத்தில் கோடாரி வைத்தாயிற்று"
அலறட்டும், அவர்கள் ஓங்கி ஓங்கி அலறட்டும்
சுமார் 300 வருட காலம் வெள்ளையன், நீதிகட்சி, காங்கிரஸ், திராவிடம் என வகை வகையாக தமிழர்களை குழப்பி தங்கள் இருப்பினை உறுதி செய்த அந்த மிக சிறிய கூட்டம் இப்பொழுது முதல் முறையாக அலறலை தொடங்கியிருகின்றது
மிக சிறிய குழுக்கள் மிகபெரிய இனங்களை அடக்கி வைக்கும் காலம் மலையேறிற்று என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்து கொண்டால் நல்லது, இல்லையேல் ஜார்ஜ் பொன்னையா போல் அழுது கொண்டே அலறிகொண்டே இருக்க வேண்டியதுதான்
தமிழக அரசு, இந்து ஆலயங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் அரசு அதற்குரிய காரியங்களை செய்யும் பொழுது இந்த பாதிரிகளுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் என்பதுதான் புரியவில்லை அல்லது அவர்களின் ஆழ்மனம் வெளிதெரியும் தருணமிது
இன்னும் பல பாதிரிகள் பேசுவார்கள், இருந்து பாருங்கள் ஆனால் இதெல்லாம் திமுகவுக்கும் அதன் இந்து எதிர்ப்ப்பு நண்பர்களுக்குமான உட்கட்சி கும்மாங்குத்து என்பதை ஒருவகையில் ரசிக்கலாம்
இந்துக்கள் என்பவர்கள் உறங்கும் சக்திமிக்க கூட்டம், அது எழும்பினால் மாபெரும் அதிசயங்களை சீனா போல் செய்யமுடியும்
இந்துக்கள் மெல்ல எழும்புகின்றனர், அந்த அதிர்ச்சியில் ஆண்டாண்டுகாலம் ஏமாற்றிய கும்பல் ஊளையிடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌
மிகபெரிய எதிர்ப்பு தோன்றுவதை அடுத்து ஜார்ஜ் பொன்னுசாமி தான் பேசியதெல்லாம் எடிட் செய்யபட்டுவிட்டது என வழக்கமான பல்டி அடிக்கின்றார்
தடயவியல் உள்ளிட்ட துறைகள் மிகபெரிய வளர்ச்சிபெற்ற நிலையில் அதையும் சோதித்துவிட்டு அவரின் பேச்சுக்கு உரிய பதிலை அளிக்கவேண்டியது தமிழக அரசின் கடமை





 

No comments:

Post a Comment