இப்பிரச்சினைக்கு முழு காரணம் 3 மனுதாரர்கள் தான். தனி நீதிபதி மனுவை அவசர அவசரமாக விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த திடீர் உத்தரவால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர்” என்றார்.
சிக்கந்தர் தர்கா தரப்பு மூத்த வழக்கறிஞர் மோகன் வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் இதற்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தர்கா தரப்பை தனி நீதிபதி தாமாக முன்வந்து சேர்த்ததால் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
எங்களுக்கு போதுமான அவகாசம் தரவில்லை. எங்கள் தரப்பு வாதங்களை கேட்கவும் இல்லை. ரிட் மனு எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. தர்காவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்பதை ஏற்க முடியாது.
தர்காவில் ஆடு, கோழி பலியிட அனுமதி கோரப்பட்ட வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்கா நிர்வாகம் மலையை ஆக்கிரமித்திருப்பதாக தனி நீதிபதி தெரிவித்துள்ளார். இது சொத்துரிமை தொடர்பான வழக்கு அல்ல” என்றார்.
அப்போது நீதிபதிகள், “தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றலாமா?” எனக் கேள்வி எழுப்பினர். தர்கா தரப்பில், “இதுவரை முறையாக எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் அளவீடு செய்தால் மட்டுமே தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த முடியும். தர்கா அருகே உள்ள கல்லத்தி மரம் அருகே கொடியேற்ற தர்கா நிர்வாகம் முடிவு செய்த போது கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. தொல்லியில் துறையிடம் தனி நீதிபதி கருத்து கேட்கவில்லை” என்றார்.
மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் வாதிடுகையில், “பாபர் மசூதி பிரச்சினையால் மத ரீதியான கொலைகள் நடந்தேறியது. இந்தச் சூழலில் இதுபோன்ற உத்தரவுகள் ஏற்புடையது அல்ல. உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார்.
கோயில் நிர்வாகம், தர்கா தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், வக்ஃபு வாரியம், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் தரப்பில் வாதங்களை முன்வைப்பதற்காக விசாரணையை நாளைய தினத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை வரலாறு, கல்வெட்டு, சமணர் வரலாறு தொடர்பான புத்தகங்கள், மதுரை சுற்றியுள்ள மலைகளில் உள்ள கல் தூண்களின் புகைப்படங்களை நீதிபதிகளிடம் அறநிலையத் துறை சார்பில் வழங்கப்பட்டது



No comments:
Post a Comment