அரசு பஸ்களில் தமிழ்நாடு என போஸ்டர் ஒட்டும் போராட்டம் அதிகரிப்பு.. பின்னணி என்ன? பெயர் மாற்றம் ஏன்?
சென்னை: அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாததைக் கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அரசுப் பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 2012-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, பேருந்துகளின் பெயர்களை எளிதாகப் படிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது போராட்டம் வெடித்துள்ளது.
பெங்களூரில் உள்ள தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தமிழ் அமைப்புகளால், இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல இடங்களில் இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசு பேருந்துகளில் அந்தந்த மாநிலங்களின் பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழக அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயர் இடம்பெறவில்லை என்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/why-is-the-tamil-nadu-poster-protest-growing-on-government-buses-background-of-name-change-759838.html
No comments:
Post a Comment