திருப்பரங்குன்றம் மலை -தமிழர் வழிபாட்டு உரிமையை மறுத்த நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கு, கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆஜர், தலைமை செயலர் ஆன்லைனில் வந்தார்
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான தீபத் தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபமேற்ற எத்தனை தடங்கல்களை இந்த ஆளும் அரசு கொண்டு வந்தது என நமக்கெல்லாம் தெரியும்.
தீபம் ஏற்ற தீர்ப்பு வந்த பின்பும், மதக் கலவரம் ஏற்படும் என கற்பனையான ஒன்றை காரணம் காட்டி மூன்று பேர் கூட மலைக்கு சென்று தீபம் ஏறர அனுமதி மறுக்கப்பட்டது. காவலுக்கு வந்த துணை ராணுவத்தினரை கைது செய்யும் அளவுக்கு அதல பாதாளத்திற்கு சென்ற ஏவல் துறை தர்கா விழாவுக்கு மட்டும் அனுமதி வழங்கி ஒரு தலை பட்சமாக செயல்பட்டதும் நமக்கெல்லாம் தெரியும்.
இப்போதோ, ஒரு படி மேலே போய், திருக்கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்திலேயே தர்கா கொடியை ஏற்றியிருக்கிறார்கள். இதை கண்டுக் கொள்ளாமல் சென்றிருக்கிறது ஏவல் துறை.
திருப்பரங்குன்றம் தலத்தின் தலமரம் கல்லத்தி மரம் ஆகும். இது காட்டத்தி என்றும் குறிக்கப்பெறுகிறது. இது கல்லால் இனத்தைச் சார்ந்த மரவகையாகும். சுந்தரமூர்த்தி நாயனாரும் திருப்பரங்குன்றத் திருப்பதிகத்தில் “கல்லால் கீழற்கீழ் ஒரு நாட்கண்டது” என்று குறிப்பிடுகின்றார். இதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லத்தி மரம் தல விருட்சமாக விளங்குவதை கண்கிறோம்.
சிறிய ஆலிலை வடிவில் கரும்பச்சையான இலைகளையும், இலைக்கோணங்களில் மெல்லிய சுணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பட்டை, பால், பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.
இதை குறிப்பிட்டு நீதியரசர்கள் நேற்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மத கலவரம் வரலாம் என தீபம் ஏற்றுவதை தடை செய்தீர்களே, இதனால் மட்டும் மத கலவரம் வராதா என. ஏவல் துறை அதற்கும் பொறுப்பற்ற பதிலை தந்திருக்கிறது.
அந்த புகைப்படத்தை பார்க்கவே மனம் பற்றிக் கொண்டு வருகிறது. முன்னோர் பாடுபட்டு காப்பாற்றிக் கொடுத்த கலாச்சாரத்தை நம் காலத்தில், நம் கண் முன்னால் பறி கொடுக்கிறோம்.
முன்னோர்கள் நமக்களித்த பொக்கிஷங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கடத்தாவிடில், பித்ருக்களின் ஆசி எவ்வாறு கிட்டும்? எத்தனை சமுத்திரங்களுக்கு சென்று முழுகினாலும் இந்த பாவம் போகாது. மாறாக அவர்கள் சாபமே கிட்டும்
No comments:
Post a Comment