(Historical & Theological view based on International University researches)
பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபர் பி.ஆர் சுந்தர்.
இந்த நிலையில் மன்னிப்பு கேட்பதாக கூறி பி.ஆர் சுந்தர் அவரது அலுவலகத்திறகு வரவழைத்து ஒரு அறையில் பூட்டி வைத்து பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் போலீசார் பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் பி.ஆர். சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவரது மனைவி மங்கையர்கரசி மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
பெங்களூருவில் இருந்த பி.ஆர் சுந்தர் மற்றும் அவருடைய மனைவியை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பி.ஆர்.சுந்தர் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ”சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் சொத்து, Mansun கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளேன். அந்த சொத்தில் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் காவல் கண்காணிப்பாளராக தொழில்நுட்ப சேவை பிரிவில் பணியாற்றி வரும் அன்புச் செழியன் வசித்து வருகிறார். சட்டபூர்வ அனுமதி இன்றி தங்கி வருகிறார்.
பலமுறை கேட்டும் சொத்தை காலி செய்து ஒப்படைக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால் இதுவரை இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாகத்தான் தன்னை குறிவைத்து திட்டமிட்டு இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்...
No comments:
Post a Comment