Friday, December 31, 2021

இந்து அறநிலையத்துறை அராஜகம்!!??

சென்னை குயப்பேட்டையில் உள்ள கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில்கள் அருகே பழைய மீன் சந்தை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய மீன் சந்தைக்கான கட்டிடம் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
இந்தக் கட்டிடங்களைக் கட்டும் பணிகளுக்கு ரூ. 1.55 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மீன் சந்தையைக் கட்டுவதற்கு தேவையான நிதியை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் கோயில் போன்ற திருக்கோயில்களிலிருந்து கடனாகப் பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளார். 
தமிழக இந்து திருக்கோயில்களின் நிதியிலிருந்து மீன் சந்தைக் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 

No comments:

Post a Comment

Boy Irrefular to madrasa chained

Boy Irrefular to madrasa  chained  Another Old Incident https://www.deccanherald.com/india/slow-learner-boy-chained-madrasa-2365081