Wednesday, November 26, 2025

ஸ்டெர்லிங் பயோடெக் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்​கில் ரூ.5,100 கோடி கட்டினால் விடுவிப்பு- உச்ச நீதி​மன்​றம்

ஸ்டெர்லிங் நிறுவனத்தின் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி - சந்தேசரா சகோதரர்கள் ரூ.5,100 கோடி செலுத்த முடிவு செய்திப்பிரிவு  Updated on: 26 Nov 2025,

குற்றவியல் நடவடிக்கைகளை கைவிட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுடெல்லி: ஸ்​டெர்​லிங் பயோடெக் நிறு​வனத்​தின் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி தொடர்​பான வழக்​கில் சந்​தேசரா சகோதரர்​கள் ரூ.5,100 கோடியை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

சந்​தேசரா சகோதரர்​கள் என்று அழைக்​கப்​படும் நிதின், சேத்​தன் ஆகியோர் ஸ்டெர்​லிங் பயோடெக்​கின் நிறு​வனர்​களாவர். இவர்​கள், வங்​கி​களில் ரூ.14,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, சந்​தேசரா சகோதரர்​கள், குடும்ப உறுப்​பினர் உட்பட 4 பேர் கடந்த 2017ல் வெளி​நாட்​டுக்கு தப்​பியோடினர். 2020 செப்டம்பரில் இவர்கள் அனை​வரும் தேடப்​படும் பொருளா​தார குற்றவாளிகளாக அறிவிக்​கப்​பட்​டனர்.

இவர்​களுக்கு சொந்​த​மாக வெளி​நாட்​டில் உள்ள எண்​ணெய் கிணறு உள்​ளிட்ட ஏராள​மான சொத்​துகளை முடக்க      நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. இருப்​பினும், அமலாக்​கத் துறை​யின் உத்தர​வு​களுக்கு வெளி​நாடு​கள் ஒத்​துழைப்பு  வழங்​க​வில்​லை.

இது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் ஜே.கே. மகேஸ்​வரி மற்​றும் விஜய் பிஷோனி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் தங்​களது உத்தரவில் கூறிய​தாவது: ஸ்டெர்​லிங் பயோடெக் வங்கி கடன் மோசடி வழக்​கில் அதன் நிறு​வனர்​கள் ரூ.5,100 கோடியை திருப்பிச் செலுத்த ஒப்​பு​கொண்​டுள்​ளனர். இதனை மத்​திய அரசும், அமலாக்​கத் துறை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளன. பொதுமக்களின் பணம் மீண்​டும் வங்​கி​களுக்கே திரும்ப     உள்​ளது.

இதற்கு மேலும் அவர்​கள் மீது குற்​ற​வியல் நடவடிக்​கைகளை தொடர்​வது எந்த பயனை​யும் அளிக்​காது. அனைத்து தொகையையும் வரும் டிசம்​பர் 17ம் தேதிக்​குள் செலுத்த வேண்டும். ஆனால், இந்த உத்​தரவு இந்த ஒரு வழக்​குக்கு        மட்​டுமே பொருந்​தும். இதனை முன்​னு​தா​ரண​மாக கருதக்       கூ​டாது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.




 

No comments:

Post a Comment

Facebookல் நீதிபதிகளை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு கிடையாது - உச்ச நீதிமன்றம்

In November 2018, the  Supreme Court of India ruled that criticism of a judge on Facebook is not necessarily contempt of court , provided it...