Wednesday, November 26, 2025

ஸ்டெர்லிங் பயோடெக் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்​கில் ரூ.5,100 கோடி கட்டினால் விடுவிப்பு- உச்ச நீதி​மன்​றம்

ஸ்டெர்லிங் நிறுவனத்தின் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி - சந்தேசரா சகோதரர்கள் ரூ.5,100 கோடி செலுத்த முடிவு செய்திப்பிரிவு  Updated on: 26 Nov 2025,

குற்றவியல் நடவடிக்கைகளை கைவிட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுடெல்லி: ஸ்​டெர்​லிங் பயோடெக் நிறு​வனத்​தின் ரூ.14,000 கோடி வங்கி கடன் மோசடி தொடர்​பான வழக்​கில் சந்​தேசரா சகோதரர்​கள் ரூ.5,100 கோடியை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

சந்​தேசரா சகோதரர்​கள் என்று அழைக்​கப்​படும் நிதின், சேத்​தன் ஆகியோர் ஸ்டெர்​லிங் பயோடெக்​கின் நிறு​வனர்​களாவர். இவர்​கள், வங்​கி​களில் ரூ.14,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, சந்​தேசரா சகோதரர்​கள், குடும்ப உறுப்​பினர் உட்பட 4 பேர் கடந்த 2017ல் வெளி​நாட்​டுக்கு தப்​பியோடினர். 2020 செப்டம்பரில் இவர்கள் அனை​வரும் தேடப்​படும் பொருளா​தார குற்றவாளிகளாக அறிவிக்​கப்​பட்​டனர்.

இவர்​களுக்கு சொந்​த​மாக வெளி​நாட்​டில் உள்ள எண்​ணெய் கிணறு உள்​ளிட்ட ஏராள​மான சொத்​துகளை முடக்க      நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. இருப்​பினும், அமலாக்​கத் துறை​யின் உத்தர​வு​களுக்கு வெளி​நாடு​கள் ஒத்​துழைப்பு  வழங்​க​வில்​லை.

இது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் ஜே.கே. மகேஸ்​வரி மற்​றும் விஜய் பிஷோனி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் தங்​களது உத்தரவில் கூறிய​தாவது: ஸ்டெர்​லிங் பயோடெக் வங்கி கடன் மோசடி வழக்​கில் அதன் நிறு​வனர்​கள் ரூ.5,100 கோடியை திருப்பிச் செலுத்த ஒப்​பு​கொண்​டுள்​ளனர். இதனை மத்​திய அரசும், அமலாக்​கத் துறை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளன. பொதுமக்களின் பணம் மீண்​டும் வங்​கி​களுக்கே திரும்ப     உள்​ளது.

இதற்கு மேலும் அவர்​கள் மீது குற்​ற​வியல் நடவடிக்​கைகளை தொடர்​வது எந்த பயனை​யும் அளிக்​காது. அனைத்து தொகையையும் வரும் டிசம்​பர் 17ம் தேதிக்​குள் செலுத்த வேண்டும். ஆனால், இந்த உத்​தரவு இந்த ஒரு வழக்​குக்கு        மட்​டுமே பொருந்​தும். இதனை முன்​னு​தா​ரண​மாக கருதக்       கூ​டாது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.




 

No comments:

Post a Comment

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசாங்க பணி கொடுப்பது தவறான முன்னுதாரணம்.

  கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசாங்க பணி நியமனம் தொடர்பாக (lengthy post. TLDR at the end) 1. அரசாங...