திண்டுக்கல் சின்னாளப்பட்டி கோவில் ஐகோர்ட் அனுமதித்தும் கார்த்திகை தீபம் ஏற்றாமல் அரசு 144 தடை- GRS தீர்ப்பு தடை
பெருமாள்கோவில்பட்டியில் கார்த்திகை தீபம்: தனி நீதிபதி GRS உத்தரவுக்கு ஐகோர்ட் அமர்வு தடை ADDED : டிச 20, 2025 https://www.dinamalar.com/news/tamil-nadu-news/high-court-bench-stays-karthigai-deepam-single-judges-order-in-perumal-kovilpatti/4108879
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துறை அருகே பெருமாள்கோவில்பட்டி யைச் சேர்ந்த சித்தன் பால்ராஜ்.
இவர், 'பெருமாள்கோவில்பட்டி மண்டு கருப்பணசாமி கோவிலை மீண்டும் திறந்து, தினசரி பூஜை நடத்தவும், காளியம்மன் கோவில் மற்றும் கருப்பணசாமி கோவில் முன், கார்த்திகை தீப திருவிழா நடத்த அனுமதி வழங்கவும் ஆத்துார் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
டிச., 2ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'மனுவில் குறிப்பிட்டுள்ள இடங்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகிறது. பக்தர்களின் உரிமை நிலைநாட்டப்படுவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், 'கலெக்டர் சரவணன், ஆர்.டி.ஓ., திருமலை, ஆத்துார் தாசில்தார் முத்துமுருகன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, சித்தன் பால்ராஜ் மனு தாக்கல் செய்தார்.
இதை டிச., 3ல் அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கலெக்டர், எஸ்.பி., அன்றே ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி, கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே, திண்டுக்கல் ஆர்.டி.ஓ., ஆத்துார் தாசில்தார், சின்னாளபட்டி இன்ஸ்பெக்டர் தரப்பில் தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனுவில், 'அது அரசு புறம்போக்கு நிலம்.
நிலம் மற்றும் தீபம் ஏற்றும் உரிமை குறித்து சிவில் வழக்கில் தான் தீர்மானிக்க முடியும்.
'தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல. அது பதற்றமான பகுதி. 21 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
ஒரு கொலை நடந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டனர்.
ரிட் மனுவில் எதிர்மனுதாரர்களில் ஒருவரான பெருமாள்கோவில்பட்டி சவரிமுத்து, மற்றொரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், சவரிமுத்து தரப்பில் வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜன., 19க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.
சின்னாளப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந்த பல வருடங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
இதனால் இப்பகுதியில் திருவிழாக்கள் நடத்த 10 வருடங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர்கள் இங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு மண்டு கருப்பண்ண சாமி கோவில் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி கேட்டு இருந்தனர். அதன்படி இன்று கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது. பொதுவான இந்த இடத்தில் வழிபாடு நடத்தினால் பின்னர் இந்த இடம் அவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விடும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் வரவே ஏ.டி.எஸ்.பி. தெய்வம், ரூரல் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. மேலும் ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் கோர்ட்டு அனுமதித்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்றும், யாரும் இப்பகுதியில் அமைதியை அமைதியை குலைக்கும் வகையில் பிரச்சனை செய்யக்கூடாது என தெரிவித்து 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்படுவதாக தாசில்தார் முத்துமுருகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
2 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அது வரை அமைதி காக்க வேண்டும் எனவும் தாசில்தார் முத்துமுருகன் தெரிவித்துள்ளார்.https://www.maalaimalar.com/news/tamilnadu/karthigai-deepam-at-a-court-approved-location-near-dindigul-section-144-prohibitory-order-799987
திண்டுக்கல்லில் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம்
https://www.facebook.com/SunNewsTamil/videos/793108387105195/?__cft__[0]=AZZa0PEwQh1R9tx6mLxErRdTuYhtKtA-9c6Ng7rEcshyJFxhAlKhsJY6QXHZKDs2VVokLg5pI2tGdG1bvJMJ3CejWiylpLvrfNbs4Z2o3DnSV7u6kdZNDrLltXaOEa9A9GjtiRJLVYkVqSZU3uPP5Yp11JLw_GMbkE2HUdt0mWc6r95wbl64nKVzGIL9KxykMYT2Q6d3FaZsR3Ehf3Zth9qg&__tn__=%2CO%2CP-R


No comments:
Post a Comment