பாட்டுத்தொகை நூல்களான சங்க இலக்கியத்தில் மாமூலனார் பாடல்களில் நந்தர் ஆட்சி மற்றும் மௌரியர் பற்றிய குறிப்புகள் பற்றி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வரலாற்று ஆய்வு நூல் தரும் தெளிவான விளக்கம்
அகநானூறு 251, மாமூலனார்நாம் படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்ற வண்
தங்கலர்- வாழி, தோழி!-
மாமூலனார்- தலைவியின் பிரிவுத் துயரைத் தேற்ற கூறுவதாக- நந்தரின் பெரும்செல்வத்தை பெறும் நிலையில் இருந்தாலும் உன் துயர் கேட்டால் வேறு ஊரில் தங்காது திரும்புவார்.
அகநானூறு – 265.
4.பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை 5
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
22வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!
புகழ் பெற்ற பாடலிபுத்ரத்தின் நந்தர் கங்கைகரையில் ஒளித்து வைத்துள்ள செல்வத்தையா திரட்டிவரப்போகிறார் என தலைவி அலுத்துக் கொள்கிறாள்.
அகநானூறு 281, மாமூலனார், பாலை திணை – தலைவி சொன்னது
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
எண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து, அவரோ சென்றனர்
மோரியர்:
வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.[2] இப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நூழைந்தது. வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.[3][4]
அகநானூறு 69, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்,
10. விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
பொன்பு னை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும்,
நந்தர் விண்ணைத் தொடுமளவு நீண்ட குடை கொண்ட தேரில் வந்த இரும்புச் சக்கரம் கொண்ட தேர் செல்ல வெட்டிக் குடைந்த கணவாய் கடந்து என் காதலர் சென்றார் என்கிறாள்.
அகநானூறு 251, மாமூலனார்,
,
10 தெம் முனை சிதைத்த ஞான்றை; மோகூர்
பணியா மையின், பகை தலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர்,
மோகூர் பணியாததால், புதிய மோர்யர் பகையுள்ளத்தோடு, பெரும் படையோடு, தங்கள் தேர் சக்கரம் உருண்டு செல்ல அருவி பாயும் மலைப்பாதையை குறைத்து வழி அமைத்தார்கள்..
அகநானூறு 281, மாமூலனார்
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
எண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த


No comments:
Post a Comment