Saturday, February 7, 2026

ராஜ்யசபாவில் கமல்ஹாசன் பைத்தியக்காரத்தன உளறல் பேச்சு


அண்ணாதுரை மீது என்ன கோபமோ? அண்ணாவிடம் தமிழ் கற்றவன் என்றும் கூறி விட்டார். அதனால்,  கமல்ஹாசனின் தமிழை கிண்டல் செய்தால் அண்ணாவை கிண்டல் செய்தது போலாகி விடும். ஆனால், அண்ணாதுரை அவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. இந்த தமிழையும் தாங்கிக் கொள்வார்.

அண்ணாவின் மகன், ஈவெராமசாமியார்-காந்தியின் கொள்ளுப் பேரன். சரி,  முதல்வருடன் என்ன உறவு என்றும் கமல் கூறியிருக்கலாம். 

அவர் பேச்சில் என்னை மிகவும் கவர்ந்தது-  ' வீழ்க வளமுடன் ' என்று மத்திய அரசை சாபம் கலந்து வாழ்த்தியதுதான். அடாடா, என்ன ஒரு சொல்லாட்சி! 

ரொம்ப கிண்டல் செய்வது நியாயமல்ல. மற்ற பல எம்.பி.க்களின் பேச்சுக்கு இவர் பேச்சு ஒன்றும் குறைந்து விடவில்லை. சரக்கில்லா விட்டாலும் இதில் காமெடியாவது இருக்கிறது.

பல எம்.பிக்களின் பேச்சில் அது கூட இல்லை.      -துக்ளக் சத்யா.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது தர்மேந்திர பிரதான் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது ஈவெராமசாமியார் பெயரைக் குறிப்பிடாமல், 'விடுதலை' இதழில் வெளியானதாகக் கூறி ஒரு பகுதியை வாசித்தார். "தமிழ் படித்தால் பிச்சை கூடக் கிடைக்காது. - இந்த ஒரு வரி போதும். இருந்தாலும் முழுவதும் படிக்கிறேன் - தமிழ் படிப்பது பிச்சை எடுப்பதைத் தவிர, உயிர் வாழ வேறு ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காக செலவுசெய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஒரு அனுபவப் புலவர் பாடியிருக்கிறார் என்று அவர் (ஈவெராமசாமியார்) பேசியிருக்கிறார். அப்படிப் பேசியவரின் புகைப்படத்தை உங்கள் அலுவலகங்களில் மாட்டி வைத்திருக்கிறீர்கள். மேசைகளில் வைத்திருக்கிறீர்கள். எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறீர்கள். அவரை வணங்குகிறீர்கள்" என்று குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.

 என் மாநில மக்களுக்காக நான் தமிழில் பேசுகிறேன் என்று கூறிய அவர், ‘பிச்சைப்பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது. நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாக கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அதன் பிறகு தான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியல் ஆனது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை தமிழரை பார்த்து பிச்சை எடுக்க கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.

இது ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது… திருடவும் உதவாது.

தமிழின் பிச்சை எடுக்க மாட்டான்… அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.

தங்கச்சி… ஓட்டையும் நாட்டையும் கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன்.

கருணையுடன் நீங்களே ஏற்பீர்கள். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்றிது.

 ‘உம் வினை உம்மை சுடுக’. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. ‘வந்தீர் வென்றீர் செல்வீர்’ இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட” என்று உரையாற்றினார்.  

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று 27 நவம்பர் 1943 அன்று வெளியான விடுதலை  பத்திரிகையில்  ஒருவர் (ஈவெராமசாமியார்) கூறியிருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

இந்தசூழலில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன்  பைத்தியக்காரத்தன உளறலாக இவ்வாறு பேசியுள்ளார். 

 

No comments:

Post a Comment

திமுக கூட்டணிக்குள் பாமக ராமதாஸ் வந்தால் நாங்கள் வெளியேறுவோம்” - திருமாவளவன்

திமுக கூட்டணிக்குள்  பாமக  ராமதாஸ் வந்தால் நாங்கள் வெளியேறுவோம்” - திருமாவளவன்    08 Feb 2026 பாமக நிறுவனர் ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால், ...