Sunday, February 8, 2026

கத்தோலிக்க ஆர்சி கிறிஸ்துவ பிரிவு சர்ச் கார்டினல் ஆக என்ற (முன்னாள் எஸ்சி) Rev.பூலா அந்தோணி தேர்வாம்

கத்தோலிக்க ஆர்சி கிறிஸ்துவ பிரிவு சர்ச் கார்டினல் ஆக என்ற முன்னாள் எஸ்சி Rev.பூலா அந்தோணி தேர்வாம்


 புதிய தலைவரான தலித் மதகுரு; யார் இந்த கார்டினல் பூலா அந்தோணி?

சனிக்கிழமை நடந்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) 37-வது பொதுக்குழு கூட்டத்தில், ஹைதராபாத் பேராயர் கார்டினல் பூலா அந்தோணி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் சுமார் 2 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் தலித் பேராயர் இவராவார்.

கார்டினல் பூலா அந்தோணி, முக்கியமான காலகட்டத்தில் இந்திய கத்தோலிக்க சர்ச்-ன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். பல தசாப்த கால Pastoral அனுபவம், நிர்வாகத் திறன் மற்றும் நீதி, மனித கண்ணியம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு திருச்சபையின் பணிக்கு பெரும் பலம் சேர்க்கும் என்று சி.பி.சி.ஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் விசுவாசிகள் சந்தித்துவரும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு, சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடுவதிலும், அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் கார்டினல் அந்தோணி முக்கியப் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் இப்பொறுப்பில் இருந்தார்.

யார் இந்த கார்டினல் பூலா அந்தோணி?

பிறப்பு: நவ.15, 1961 அன்று கர்நூல் மறைமாவட்டத்தின் போலூரு கிராமத்தில் பிறந்தார்.

கல்வி: பெங்களூரு புனித பீட்டர்ஸ் செமினாரியில் குருத்துவ கல்வியை முடித்தார். 1992-ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

பணிகள்: கடப்பா மறைமாவட்டத்தில் பல ஊர்களில் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்.

உயர் கல்வி: அமெரிக்காவின் சிகாகோ லயோலா பல்கலை.யில் Pastoral Care துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

நிர்வாகப் பொறுப்புகள்: குழந்தைகள், முதியோருக்கான கிறிஸ்தவ அறக்கட்டளையின் இயக்குநராகவும், கடப்பா மறைமாவட்டக் கல்விச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

உயர் பதவிகள்:

2008: கர்நூல் ஆயராகப் பொறுப்பேற்றார்.

2020: போப் பிரான்சிஸ் அவர்களால் ஹைதராபாத்  விவிலிய மாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார்.

2022: ஆகஸ்ட் 27 அன்று போப் பிரான்சிஸ் இவரை 'கார்டினல்' (Cardinal) அந்தஸ்திற்கு உயர்த்தினார்.

The Indian Express தமிழ்

No comments:

Post a Comment

கண்ணதாசன் - C.N.அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்!

  திராவிடம் : அண்ணாதுரைக்கு கண்ணதாசன் நூறு கேள்விகள்! கவியரசு கண்ணதாசன்  அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்! 1. ‘மொழிவழி பிரிந்து இன வழி ஒன்று கூட...