Tuesday, February 10, 2026

ஜெனரல் நரவானே புத்தகத்தை இன்னும் அச்சிடவில்லை -பெங்குவின் பதிப்பகம்

 ஜெனரல் நரவானே புத்தக விவகாரம்...

"அந்தப் புத்தகத்தை இன்னும் அச்சிடவில்லை. புத்தகம் 'pre-order' செய்யலாம் என்பதால் அந்தப் புத்தகம் அச்சாகி வந்து விட்டது என்று அர்த்தமில்லை" என்று பதிப்பாளர் பெங்குவின் பதிவிட்டிருக்கிறது.
அதே வேளையில் இண்டியா டுடே, "புத்தகம் அச்சாகி டில்லி புத்தக விற்பனை நிலையங்களுக்கு வந்து விட்டது. கடைசி நிமிடத்தில் புத்தகங்களைத் திரும்பப் பெற்றிருக்கிறது பெங்குவின். ஏன்? அரசிடம் அனுமதி பெறாமல் இராணுவ சம்ந்தப்பட்ட புத்தகங்களை வெளியிடக் கூடாது என்று பெங்குவினுக்குத் தெரிந்தும் அந்தப் புத்தகத்தை அனுமதி பெறாமல் அச்சிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்தது ஏன்?" என்று கேட்டிருக்கிறது.
ஜெனரல் நரவானேயும் தான் எழுதும் புத்தகத்துக்கு அரசிடம் இன்னும் ஒப்புதல் பெறவில்லை. பெங்குவினும் அச்சிடுமுன் அனுமதி பெறவில்லை.
"ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததையடுத்து தனக்கு அவர் பதவியை அரசு கொடுக்கும் என்று காத்திருந்தார் நரவனே. என்றாலும் மோதிஜி அரசு அவருக்கு அந்தப் பதவியைத் தரவில்லை. அந்தக் கடுப்பில் தான், 'மோதிஜி அரசு முடிவெடுக்காமல் என்னை முடிவெடுக்கச் சொன்னது' என்று நரவானே குற்றம் சாட்டி, அரசியலாக்கியிருக்கிறார் அந்தப் புத்தகத்தில்" என்று ஒரு தரப்பு குற்றச்சாட்டு.
மற்றொரு தரப்பு - "அவர் விழிப்புடன் இருந்திருந்தால் கல்வான் பிரச்சினையே வந்திருக்காது. எப்படி உறங்கிக் கொண்டிருந்தார் நரவானே? சீனாவுடன் / கான்கிரஸுடன் ரகசிய ஒப்பந்தம் ஏதும் செய்து கொண்டாரா நரவானே?" என்று குற்றம் சாட்டுகிறது.
"நரவானே சீனா சார்பாக ஏன் நடந்து கொண்டார்?" என்று கேட்டு நீண்ட பதிவிட்டிருக்கிறார் டாக்டர் பிரம்மா செலனே (Dr. Brahma Chellaney) @ https://x.com/Chellaney/status/2021138610502893676 .
"ஜெனரல் நரவானே மீது அனேகமாக நடவடிக்கை எடுக்காது அரசு. அவரது ஓய்வுக் காலத்தில் அவருக்கு தொந்தரவு கொடுக்காது அரசு" - என்கிறார்கள் சிலர். ஆனால்...
"அனுமதி பெறாமல் புத்தகத்தை வெளியிட்டதால் கைதாகும் நிலையில் பெங்குவின் நிர்வாகத்தார்!
இவர்களையடுத்து தான் வின்சி பக்கம் வரும் நடவடிக்கை. (வரும், ஆனால் வராது).
*** முந்தைய பதிவு கமெண்டில்.
How did Rahul Gandhi get an unpublished book by Gen Naravane?
Statement from the Publisher.


பிப் 4இல் வின்சி: "ஜெனரல் நரவானே தன் புத்தகத்தில் மோதிஜி அரசு தன்னிடம் 'கள நிலவரத்தைப் பொறுத்து முடிவெடுங்கள்' என்று சொன்னதாக குறிப்பிட்டிருக்கிறார். இது சொதப்பல்".
பிப் 9இல் பெங்குவின் பதிப்பாளர்: "ஜெனரல் நரவானே புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை, எனவே விற்கப்படவும் இல்லை. ஜெனரல் நரவானே புத்தகம் என ஒன்று (வாட்சாப்பில்) உலா வருகிறது. அதற்கெதிராக டில்லி போலீஸிடம் வழக்கு பதிந்திருக்கிறோம்".
*** வின்சி கை வைத்ததெல்லாம் இப்படி பல்பு வாங்கினால் எப்படி?? பெங்குவின் நிர்வாகம் இன்னும் அந்த புத்தகத்தை அச்சிடாத நிலையில், 'நரவானே புத்தகம்' என்று பாராளுமன்றத்தில் பேசியிருப்பது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய செயல்.
பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, வின்சி அந்தப் புத்தகத்தை பாராளுமன்றத்துக்கு வெளியேயும் காட்டியதால், டில்லி போலீஸ் விசாரிக்கத் தகுதியானது..
காத்திருப்போம்! 🍿 🍿 🍿
As I said, PM Modi won't come to Parliament because he is scared and doesn't want to face the truth.
BIG: After Delhi Police registers FIR over circulation of unpublished book of Gen Naravane on social media, book’s publisher releases statement. Says
-book has not gone into publication
-no copies of the book, in print or digital form have been published, distributed or sold .
PENGUIN RANDOM HOUSE INDIA STATEMENT
ON FOUR STARS OF DESTINY
BY GENERAL MANOJ MUKUND NARAVANE

No comments:

Post a Comment

ஜெனரல் நரவானே புத்தகத்தை இன்னும் அச்சிடவில்லை -பெங்குவின் பதிப்பகம்

  ஜெனரல் நரவானே புத்தக விவகாரம்... "அந்தப் புத்தகத்தை இன்னும் அச்சிடவில்லை. புத்தகம் 'pre-order' செய்யலாம் என்பதால் அந்தப் புத்...