தமிழர் சமயமும்- திருமா போன்ற அன்னிய மத தமிழர் விரோதிகள் உளறலும்
தமிழர் சமய மெய்யியலை மிக எளிமையாக திருவள்ளுவ நாயனார் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து -கல்வி கற்பதன் பயனே இறைவனின் திருவடியை தொழுவதற்கே என்கிறார் அதற்கு முந்தைய குறளில் இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்பதை "ஆதி
பகவன் முதற்றே உலகு" என விளக்கியுள்ளார்.
தமிழர் மெய்யியல் மரபில் இறைவனின் வெளிப்பாடாக பஞ்சபூதங்களை போற்றி வழிபடுவோம். வள்ளுவர் இரண்டாம் அதிகாரமாக மழையைப் போற்றும் வான்சிறப்பு அதிகாரத்தில் மழை இல்லாவிடில் முக்கியமான அறங்கள் நாட்டில் இல்லாது போய்விடும் என்கையில் தவமும் தானமும் என்பார். சிறப்போடு பூஜனை செல்லாது என்பது இறைவனின் திருமேனிக்கு தினசரி செய்யப்படும் அன்றாட பூஜைகளும் பண்டிகை நாளில் விசேஷ பூஜைகளும் இல்லாது போய்விடும் என்பார்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவன் உருவ வழிபாட்டில் அதாவது திருமேனி வழிபாட்டை சிறப்பிக்கும் வழியாக இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் திருவடி தொழுதல் என்பது எட்டு குறட்பாக்களில் கூறப்படுகிறது அதில் ஒன்பதாவது குறட்பாவில் தன் தலையால் இறைவனின் திருவடியை வணங்காவிட்டால் தலையில் உள்ள ஐம்பொறிகளும் பயனில்லை அதாவது ஒரு பொம்மைக்கு கூட கண்,காது, மூக்கு, வாய் உடல் (தோல்) போன்றவை இருந்தாலும் அவை அவற்றில் பயனில்லை அதுபோல இறைவன் திருவடியைவணங்காதவன் ஒரு பொம்மைக்கு சமமானவன் என்பார் திருவள்ளுவர்
திருக்குறள் என்பது இடைக்காலத்தில் எழுந்தது எனிலும்- இதற்கு முந்தைய தமிழின் தொடக்க கால நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும்

No comments:
Post a Comment