Sunday, February 8, 2026

பைபிள் சுவிசேஷக் கதை ஏசு சாராயம் குடித்தார் என்ற உண்மை சொன்ன விஜய் ஆண்டனி மீது பாசீச மதவெறியர்கள் தாக்கு

சு மது குடித்ததாக சொன்ன விஜய் ஆண்டனி.. கடுப்பான தமிழ்நாடு  பாசீச  கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு!


விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் அவரின் பேச்சுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இயேசு கிறிஸ்து குறித்து தவறான கருத்து குறித்த இசையமைப்பாளரும்,நடிகருமான விஜய் ஆண்டனிக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  

“ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு.. மது நீண்ட நாட்களாகவே இருக்கு” - விஜய் ஆண்டனி சர்ச்சை பேச்சு

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வளர்ந்தவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல துறைகளிலும் தனது திறமைகளை நிரூபித்தார்.

ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான்.இதில் வேறுபாடு என்பதெல்லாம் ஒன்றுமில்லை என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வளர்ந்தவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல துறைகளிலும் தனது திறமைகளை நிரூபித்த அவர், தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது “ரோமியோ” என்ற பெயரிலான படத்தை நடித்துள்ளார்.இந்த படத்தில் மிருனாளினி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் என பலரும் நடித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள ரோமியோ படம் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகிறது. 

முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தனர். இதில் விஜய் ஆண்டனி அளித்த பதில் ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

கேள்வி: தமிழ்நாட்டில் வந்து மது ஒழிக்க வேண்டும் என சொல்கிறார்கள். முதல் இரவு என்பது வாழ்க்கையை தொடங்கும் விஷயம். ஆனால் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாலும் பழத்துக்கு பதிலாக சரக்கு ஊற்றுவது போல அதுவும் பெண் கையில் இருப்பது போல போஸ்டர் வந்துச்சே? 

விஜய் ஆண்டனி: இங்க வந்திருப்பவர்களில் பாதி பேர் குடிப்பீர்கள் என நினைக்கிறேன். இதில் ஆண், பெண் என வேறுபாடு பார்க்க வேண்டாம். குடி என்றால் எல்லாருக்கும் ஒன்று தான். ஆண்களுக்கு என்னவெல்லாம் இருக்குதோ அதுவெல்லாம் அவர்களுக்கும் பொருந்தும். அந்த மாதிரி தான் மது அருந்துவதும். நான் அதை சரி என ஆதரிக்கவில்லை. ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான். 

குடி என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது. சாராயம் என்ற பெயரில் குடித்தது இன்றைக்கு பார் வரை வந்துள்ளது. அந்த காலத்தில் திராட்சை ரசம் என்ற பெயரில் இருந்தது. சுவிசேஷக் கதை ஏசு கூட குடிச்சிருக்காரு. ராஜா காலத்தில் சோமபானம் என்ற இருந்துள்ளது. குடி என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது. அது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வேறு வேறு பெயராக உள்ளது.  இதன் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது ரோமியோ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மிருனாளினி ரவி, யோகி பாபு, இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் என பலரும் நடித்திருக்க விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இந்த படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி பேசியது சர்ச்சையானது. அதில் ரோமியோ பட போஸ்டரில் பெண் மது பாட்டிலை கையில் வைத்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. 

விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் அவரின் பேச்சுக்கு தமிழ்நாடு பாசீச கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு பாசீச கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு தலைவர் பிலிப் நெல்சன் லியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும், ஜாதி மதம் மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினாலும் போற்றக்கூடியவர் பைபிள் சுவிசேஷக் கதையில்  தேவ குமாரனாகிய ஏசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களையும், சு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு சு கிறிஸ்து மது குடித்தார் என பொது வெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

பைபிள் சுவிசேஷக் கதை ஏசு சாராயம் குடித்தார் என்ற உண்மை சொன்ன விஜய் ஆண்டனி மீது பாசீச மதவெறியர்கள் தாக்கு

ஏ சு மது குடித்ததாக சொன்ன விஜய் ஆண்டனி.. கடுப்பான தமிழ்நாடு  பாசீச  கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு! விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு கடும் சர்ச்ச...