திமுக அரசு -தூய்மைப் பணியாளர்கள் தரமாக இல்லாத காலை உணவு -தஞ்சாவூர் திருப்பி அனுப்பினர் 11 Feb 2026
தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 16 பேர் நேற்று காலை தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை என்று கூறி, ஒப்பந்ததாரரிடமே திருப்பி வழங்கிவிட்டனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என மொத்தம் 757 பேருக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, 2-வது நாளான நேற்று காலை 14-வது கோட்டத்தில் உணவு வழங்கப்பட்டபோது, உணவு தரமாக இல்லை என்றும், ஒவ்வாமை ஏற்படுவதாகவும் கூறி அந்த உணவை தூய்மைப் பணியாளர்கள் உண்ண மறுத்து, அவற்றை ஒப்பந்ததாரரிடமே வழங்கிவிட்டனர். மேலும், இதற்கான காரணத்தை விளக்கி, மாநகராட்சியில் கடிதத்தையும் வழங்கினர்.
இதுகுறித்து தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தராஜ் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சியின் 5, 7, 8 ஆகிய கோட்டங்களில் ஒரு மாதம் பரீட்சார்த்த முறையில் தினமும் ரவா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, வெண் பொங்கல், இட்லி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று வழங்கப்பட்டது.
ஆனால், அந்த உணவு தரமாக இல்லாததால் பல நாட்கள் நாங்கள் சாப்பிடவில்லை. மேலும் இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்து, தரமாக உணவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
இத்திட்டம் தொடங்கப்பட்ட பின் தரமான உணவு வழங்கப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் நேற்று (பிப். 9 இந்த திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, இன்று காலையும் தரமில்லாத ரவா கிச்சடியையே வழங்கினார்.
எனவே, 14-வது கோட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 16 பேரும், உணவை அவர்களிடமே திருப்பி வழங்கிவிட்டோம். தரமான உணவு தந்தால்தான் ஏற்றுக் கொள்வோம்.
இல்லையெனில், எங்களுக்கு இந்த உணவு வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மாநகர நகர் நல அலுவலர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, “14-வது கோட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் காலை உணவைத் திருப்பி அனுப்பிய தகவல் இதுவரை எனக்கு வரவில்லை, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

No comments:
Post a Comment