திருவட்டாறு கோயில் நகைகள் மாயம்: பட்டியல் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20231208-14212908 Dec 2023
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இடிக்கப்பட்ட அறையில் இருந்த பொருள்கள் குறித்து பட்டியல் ஒன்றை தயார் செய்து, அதை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த அறையில் பல்வேறு விலை உயர்ந்த பொருள்கள் இருந்ததாகவும் அவை திடீரென மாயமாகிவிட்டதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. குடமுழுக்கு பணிக்காக இடிக்கப்பட்ட கோயில் அறையில் இருந்த பொருள்கள் குறித்த விவரங்களையே நீதிமன்றம் கோரியுள்ளது.
இது தொடர்பாக கன்யாகுமரி மாவட்டம், திருவட்டாறைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது சில அறைகள் இடிக்கப்பட்டதில் அங்கிருந்த விலை மதிப்புமிக்க நகைகள், பொருள்கள் மாயமாகிவிட்டன,” என்று ரவிச்சந்திரன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, திருவட்டாறு கோயில் நகைகள், பொருள்களை முறையாகப் பராமரிக்கவும் கோயிலில் மாயமான ஆபரணங்களை கண்டுபிடிக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


No comments:
Post a Comment