திராவிடம் சமத்துவப் பொங்கல் என்று கொண்டாடுவது ஏன் தெரியுமா?
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் முக்கியமான நோக்கமே சூரியனை வணங்குவது தான். சூரியனை வணங்கி, படையல் இடுவது தான் பொங்கல் பண்டிகை. சூரியனை வணங்குவது, இயற்கையை வணங்குவதை இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்கள் ஏற்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஏக இறைவன் கோட்பாட்டை கொண்டவர்கள். இதை நான் சொல்லவில்லை. இதைப் பற்றி ஆளூர்ஷாநவாஸ் பேசிய காணொளியில் அவர் தெளிவாகவே சொல்லியிருப்பார். பொங்கல் வழிபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது என்று தெளிவாக வாதிட்டிருப்பார்.
இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களும் பொங்கல் பொண்டாட வேண்டும் என்பதற்காக திராவிடம் கண்டுபிடித்தது தான் "சமத்துவப் பொங்கல்". தமிழர் பண்டிகையின் கூறுகளான இயற்கையை வணங்குதல், சூரியனை வணங்குதலை நீக்கி விட்டு, பொங்கல் மட்டும் வைப்பது தான் சமத்துவப் பொங்கல். அதாவது சிறுபான்மையினருக்காக, எந்த வித தயக்கமும் இல்லாமல், தமிழர்களின் பண்டிகை முறையையே மாற்றுகிறார்கள்.
சரி கிறுஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் ஏன் பொங்கல் கொண்டாடியே ஆக வேண்டும்.? தமிழர்கள் என்று சொன்னால் தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும் அல்லவா? இல்லையெனில் நாளைய வரலாற்றில் சிக்கல் வந்துவிடுமே. அதற்காக தங்களுக்கு ஏற்றவாறு பண்டிகையை மாற்றி, இயற்கை வழிபாடு இல்லாமல் கொண்டாடுகிறார்கள்.
அன்னிய மதமாக இருந்தாலும், அதில் இருப்பவர்களின் மூதாதையர்கள் தமிழர்களாக இருந்தவர்கள் தானே என்று வாதிடுவார்கள். தமிழன் என்று சொல்லிக் கொண்டு, வருடத்தில் ஒரு நாள், ஒரே ஒரு நாள், அதில் குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் சூரியனை வணங்குவதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை. அதற்கு திமுகவும் உறுதுணையாக நின்று தமிழர்களின் வழிபாட்டு முறையை மாற்றித் தருகிறது.
பொங்கலை கொண்டாடுவதில் கூட திமுகவுக்கு ஓட்டரசியல் நோக்கம் இருக்கிறது. சிறுபான்மையினர்கள் ஏன் திமுகவைத் தவிர யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்பதற்கு, சமத்துவ பொங்கலும் ஒரு சான்று...
தமிழர்களின் அடையாளங்களையே துடைத்து எறியும் திமுகவைத் தான் இந்த மக்கள் நம்புகிறார்கள்.
No comments:
Post a Comment