Tuesday, February 24, 2026

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் கைது தஹாவூர் ஹுசைன் ராணாவின் குடியுரிமை கனடா ரத்து?

 தஹாவூர் ஹுசைன் ராணா தற்போது இந்தியாவில் காவலில் உள்ளான், ......



26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப் பட்டு, அமெரிக்க சிறையில் இருந்து, இப்பொழுது, இந்தியாவிற்கு நாடு கடத்தப் பட்டுள்ளான்.........

குண்டு வெடிப்பில் பங்கு வகித்ததற்கான வழக்கில் விசாரணைக்காக காத்திருக்கிறான்......

ஒட்டாவா: 26/11 ( நவ.26, 2008) மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ஹுசைன் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.....

கார்னியின் இந்திய வருகைக்கு முன்னதாக ... தஹாவூர் ரானாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா அவ்வாறு செய்யவுள்ளது




திமுக முக்கிய தலைகள் தொகுதிகளில் போலி வாக்களார் நீக்கம் - 2026 முடிவு மாறுமா?








ஸ்டாலின் திமுக ஆட்சியில் குறைவான நாட்களே கூடிய சட்டசபை

ஸ்டாலின் திமுக ஆட்சியில் குறைவான நாட்களே கூடிய சட்டசபை 

சென்னை: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், சட்டசபை கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், சட்டசபை கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம், 100 நாட்கள் வரை சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. 
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்தமாக, 161 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. 30 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில், இதுவே குறைவு.கடைசியாக, 1989 - 1991 வரை நடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் தான், மிக குறைவாக, 104 நாட்கள் சட்டசபை நடந்துள்ளது. 2011 - 2016 வரையிலான ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 191 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 162 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது. பழனிசாமி முதல்வராக இருந்த போது, 2020 மார்ச் 8 முதல் ஏப்ரல் 9 வரை சட்டசபை நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக, ஒன்பது நாட்களுக்கு முன்பாகவே கூட்டம் முடிக்கப்பட்டது. கொரோனா பரவல் இல்லாவிட்டால், கூடுதல் நாட்கள் சபை நடந்திருக்கும்.தி.மு.க., ஆட்சியில் சபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கேள்வி நேரம், முதல்வர், அமைச்சர்கள் பதிலுரை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மட்டுமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க.,வினர் பங்கேற்ற விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. சட்டசபை இறுதி நாளான, கடந்த 20ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவர்கள், அரசையும், முதல்வரையும் புகழ்ந்து பேசியது மட்டும், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

High Court feels kerala story 2 movie showing state in wrong light


 

DMK Ministers 1996-2001 assets accumalatin beyond income case - DMK Govt delays and get 6 more months from High court


 

High Court Fines Man who cheated mother and got properties


 

Gang- push young girls in to Prostitution in the name of getting JObs arrested


 

IDFC first bank gives Haryana 578 crores


 

Thirupathi 20 Crore Laddus made with adulterated Ghee

 


 

Madha Dental College warned and asked to pay back excess fees - High court


 

Highcourt Dimiss Vaiko petition to lift ban on Terrorist LTTE- killers of Rajiv Gandhi




 

Keralam not Kerala anymore



 

High court orders CBCID enquiry - Medical examiner posting stay due to cash for job


 

HRCE not saving Temple Properties - Highcourt


 

DMK - not releasing Co-operative society election results


 

Guidny race courst Property tax arrears




 

West Bengal -Supreme court take steps to bring other states Judicial officers to complete EC S.I.R.






 

Monday, February 23, 2026

தமிழர் மரபை அவமதிக்கும் திமுக- மதுரை கோரிப்பாளையம் பகுதி புதிய பாலம் அருகே ஓவியத்தில் கள்ளழகர் இல்லாத ஓவியம்

 மீண்டும் மீண்டும் தனது இந்து விரோத செயலை உறுதிப்படுத்தும்

 “சிங்கார சென்னை 2.0” என்ற அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜாஜி சாலையில் உள்ள 500 மீட்டர் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையின் ஓரங்களில் சோழர் கால ஓவியங்களில் தமிழர் மெய்யியல் சனாதன இந்து அடையாளம் மாற்ற கட்டளை

சோழர் கால ஓவியங்களை அழகுபடுத்தும் பணியின் ஒரு பகுதியாக மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இந்து தெய்வங்களை "சிறப்பம்சமாக" காட்ட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி கலைஞர்களை கேட்டுக் கொண்டுள்ளது. நிறுவனத்திடம் புகார் அளித்த சில குழுக்களிடமிருந்து "அழுத்தம்" இருப்பதாக கலைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

The Chennai corporation has asked artists to not “highlight” Hindu deities in an effort to re-create Chola era paintings as a part of beautification work. Artists allege “pressure” from certain groups which had complained to the corporation. As the Chola era paintings we have now are mainly from temples, artists wonder how it can be re-created without “highlighting” Hindu deities.

The Chennai corporation had hired painting artists to draw Chola era paintings on the sidewalls of 500 meter RBI subway on Rajaji Road as part of the beautification program “Singara Chennai 2.0”. It is a pet project of DMK. After 20% of the art has been completed, artists have been called by the corporation officials to ask them to “modify” the paintings so as not to stir up any controversy. Some artists, on the condition of anonymity, told TOI that there was pressure from certain groups which complained to the corporation. 





ஜாதி -ஜீடிநாயுடு பாலம் எனப் பெயர், அரசு வைக்கும். கோவில் திருவிழா ஜாதி அழைப்பிதழில் கூடாது - ஹைகோர்ட்

 ஜீடிநாயுடு பாலம் எனப் பெயர் - திமுக கவுண்டர், கம்மா நாயுடு ஜாதிக் கூட்டம் நடத்தி நிதியும் தருகிறது


எகிப்தின் பெரெனிகே துறைமுகத்தில் கிருஷ்ண பலராமன் சிலை; மத்தியப்பிரதேச டிக்லா குகை( பொமு 250) குகை வரைபடம்

சங்க இலக்கியம் போற்றும் கிருஷ்ண பலராமன் குகை வரைபடம் மத்தியப்பிரதேச டிக்லா குகை( பொமு 250);  எகிப்தின் பெர்னிகே துறைமுக நகரத்தில் சிலைகளாக


https://travelosthan.com/tikla/
https://www.smithsonianmag.com/history/hidden-ancient-egyptian-port-reveals-180984485/
 பலராமனைப் புலவர்கள் பலர் "பால்நிற வண்ணன்' என்றும் அழைத்துள்ளனர்.
 ""வானுற வோங்கிய வயங்கொளிர்
 பனைக்கொடி பால்நிற வண்ணன்''
 என்று முல்லைக்கலி 4-ஆவது பாடலும்,
 ""பால் நிறவண்ணன் பலராமன்'' என்று சீவக சிந்தாமணியும் (நாமகள் இலம்பகம், 209),
 ""பால் அன்ன மேனியான்'' என்று நெய்தற்கலியில் உள்ள 7-ஆவது பாடலும் எடுத்துரைக்கின்றன.
 "வெள்ளை' என்ற பெயராலும் நம் முன்னோர் பலராமனை அழைத்துள்ளனர்.
 ""பொற்பனை வெள்ளையை உன்னாது ஒழுகின் இன்னா'' என்பது இன்னா நாற்பது நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இதையெல்லாம் பார்க்கும்போது கண்ணனின் அண்ணனாகிய பலராமனை பால்வண்ணன், வெள்ளையன் என்றெல்லாம் அக்கால மக்கள் அழைத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இன்றும் தமிழ் மக்கள் பலராமன், பலதேவன், வெள்ளை, வெள்ளையன், வெள்ளைச்சாமி என்று தம் மக்களுக்குப் பெயரிட்டு அழைப்பதிலிருந்து இக்கருத்து உண்மை என்பதை உணரலாம்.
 ஆதியில் பலராமனை கோயில் கட்டி வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. இதை ஆண்டாள் நாச்சியார், "செம்பொன் கழலடிச் செல்வன் பலதேவனை நந்தகோபன் அரண்மனையில் சென்று எழுப்பும் பாடல்' திருப்பாவையில் இடம்பெற்றுள்ளது.
 புறநானூற்றிலோ 56-ஆவது பாடலில், மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் கடவுள்களை வரிசைப்படுத்திக் கூறும்போது, முதலில் சிவனையும், அடுத்து பலதேவனையும், அதற்கடுத்து கண்ணனையும் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறே பலராமனையும் கண்ணனையும் முன்பின்னாக வைத்து மாற்றி வரிசைப்படுத்தும் வழக்கு முல்லைக்கலியில் (4, 5-ஆவது பாடல்கள்) உள்ளன.
 இளங்கோவடிகளும் பூம்புகாரில் உள்ள கோயில்களைப் பற்றிக் கூறும்போது, சிவன் கோயிலை முதலாவதாகவும், முருகன் கோயிலை இரண்டாவதாகவும், பலராமன் கோயிலை மூன்றாவதாகவும் எடுத்துக் கூறுகிறார். மேலும், மதுரை மாநகரில் பலராமனுக்குக் கோயில் இருந்ததை, ""மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்'' என்னும் வரியின் மூலமும் எடுத்துரைக்கிறார்.
 பரிபாடலில் உள்ள 15-ஆவது பாடலைப் பாடியவர் இளம் பெருவழுதியார் என்னும் புலவர். இவர் திருமாலிருஞ் சோலையில் கண்ணன், பலராமன் ஆகிய இருவருக்கும் கோயில்கள் இருந்தன என்பதை எடுத்துரைக்கிறார்.
 திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் மாயவனாகிய கண்ணனை மட்டும் கூறி, பலதேவனான கண்ணனை "முன்னோன்' என்ற சொல்லால் சுட்டுகின்றது. ""மாயவனும் தம்முனும்போல'' என்பது அவ்வரி. இதே வழக்கு, "மாயவன்தம் முன்னினொடும்'' (சிலம்.17) என்று சிலப்பதிகாரத்திலும், ""நெடியோன் முன்னொடு நின்றன'' (மணி.19) என்று மணிமேகலையிலும் கையாளப்பட்டுள்ளன.
 முதலில் இருவர்களாகத் தனித்தனியே எடுத்துக் காட்டிய வழக்குப் போய் மாயவனான கண்ணனை மட்டும் சிறப்பித்து "முன்னவன்' என்ற சொல்லால் பலராமனைச் சொல்கிறார்கள். பின்னர் பலராமனும் கண்ணனும் ஒருவரே என்று கருதவும் தொடங்கிவிட்டனர். பரிபாடலில் இவ்வழக்கு பெரும்பாலும் காணப்படுகிறது. இதில் திருமாலுக்குரியவாக ஏழு பாடல்கள் உள்ளன. இவை திருமாலை முன்னிலைப்படுத்தி, கண்ணனையும், பலராமனையும் ஏழு அவதாரங்களில் (பாடல் -1, 2) ஒன்றாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
 மேலும், பலதேவனின் ஆடை, அணிகலன்கள், கொடி, படை, ஆயுதம் முதலியவற்றைப் பற்றியும் இலக்கியங்களில் (பனைக் கொடி உடையவன் - புறநா.56; முல்லைக்கலி- பா.4; நாஞ்சில் எனும் ஆயுதம் கலப்பையாகும் - பாலைக்கலி (36); கார்நாற்பது (19) காணமுடிகிறது.
 திருமால் எடுத்த அவதாரங்களுள் எட்டாவது அவதாரமான பலராமர் அவதாரத்திற்கென்று தனி வரலாறு ஏதுமில்லை. கண்ணனின் தமையராக இருந்த அவர், கண்ணன் வரலாற்றோடேயே முழுக்க முழுக்க இணைந்திருந்ததால், கண்ணன் வரலாறே பலராமன் வரலாராயிற்று. ஒரிஸாவில் "கேன்டாபாரா' என்னுமிடத்தில் பலராமனுக்குக் கோயில் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
 ஆதிகாலத்தில் தமிழ் நாடெங்கும் பலராமன் வழிபாடு இருந்ததை சங்க நூல்கள் மட்டும் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன.



கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளை அனுமதிக்க ஹைகோர்ட் உத்தரவு

கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளை அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார் Updated on: 23 Feb 2026 

  
சென்னை:
 கோயில்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளையும், உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா வரும் மார்ச் 11-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு முறையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், தற்காலிக கடைகளை முறைப்படுத்த கோரியும் சேலத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரதசக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என விளக்கமளிக்கப்பட்டது

மேலும், ‘ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பாதுகாப்புக்காக போதுமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். கோயில் திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்ட நிலையில், அதில் ஒருவர் மட்டும் டெண்டர் கேட்டதால் மீண்டும் புதிதாக டெண்டர் விட இருக்கிறது’ என அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, ‘கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் குடிநீர் மற்றும் போதுமான கழிப்பிட வசதிகளை உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

‘கோயில் திருவிழா என்பது சடங்கு மட்டுமல்ல. அது ஒரு கலாச்சார நிகழ்வு’ என கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இந்த மாதிரியான திருவிழாக்களின்போது சிறிய வியாபாரிகள் நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். அது விடுத்து வெளிப்படை தன்மை என்ற பெயரில் அதிக விலைக்கு டெண்டர் கேட்டால் அது சாதாரண சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.

அதனால், அதிக விலைக்கு டெண்டர் குறிப்படாமல் சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் டெண்டர் கோர வேண்டும். இல்லாவிட்டால் கோயில் தனது கலாச்சார மதிப்பை இழந்து விடும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், ‘கோயில் திருவிழாக்கள் வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், கோயில் திருவிழாக்களில் உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகள், பெண்கள், பழங்குடியினர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், கோட்டை மாரியம்மன் கோயில் சொத்துகள் அக்கிரமிப்பில் உள்ளதா, இல்லையா என கண்டறிந்து, ஆக்கிரமிப்பில் இருந்தால் அந்நிலங்களை மீட்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தமிழ்நாடு மின்சார கட்டணம் MSME தொழிற்சாலை மிக அதிகம்

தொழிற்சாலையில் 100kv க்கு மாத மாதம் மினிமம் ரூ3900 இருந்ததை ரூ19700 ஆக ஏற்றி உள்ளார்கள்
100கிலோவாட் மின் இணைப்புக்கு மாதாமாதம் ரீடிங் முறை
ஒரேயொரு யூனிட் மின்சாரம் பயன்படுத்த வில்லை என்றாலும் மாதக் கட்டணம் செலுத்த வேண்டும்
அப்போது தமிழ் நாடு முழுவதும் நினைத்து பாருங்கள் அப்புறம் தொழில் எப்படி நடக்கும்

உதய் மின் திட்டத்தில் சேர்ந்த மற்ற மாநில மின் கட்டணம் உயரவில்லையே என கேட்டால், கடனை தமிழக அரசே ஏற்று கொண்டது அதனால் கட்டணம் உயர்ந்தது என பதில். உண்மையில் மின்சார வாரியத்தின் கடனை மாநில அரசே எற்று கொண்டு வாரியத்தின் கடனை குறைத்தால் மின் கட்டணம் குறையும் என்றுதான் உதய் திட்டம் சொல்கிறது.
 

எகிப்தின் பெரெனிகே துறைமுக நகரத்தில் 3 ஆம் நூற்றாண்டு சமஸ்கிருத கல்வெட்டு

 கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டு, எகிப்தின் பெரெனிகேயில் (பண்டைய துறைமுக நகரம்) தோண்டப்பட்டது, அங்கு பிரபலமான வாசுதேவ #கிருஷ்ணர், #சம்கர்சனா மற்றும் #ஏகநாம்ஷா சிலை மற்றும் ஒரு #புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கல்வெட்டு, வசுலா என்ற #க்ஷத்ரியரால் அர்ப்பணிக்கப்பட்டது, அங்கு அவர் அனைவரின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ஒரு "பிரதிமா"வை அர்ப்பணிக்கிறார் - 

“அத்ர திவாசே வாசுலேன க்ஷத்ரியேன” 

“சர்வ சத்வ ஹித சுகாயா”

இது கி.பி 244 -249 வரை ரோமானியப் பேரரசை ஆண்ட பேரரசர் மார்கஸ் ஜூலியஸ் பிலிப்பஸின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது

“சித்தம்! ராஜ்னோ பிலிப்பஸ்ய வ(ர்)ஸ்(ஈ) சாஸ்..”

Siddham!
Rājño Philippasya varṣe …
Vāsulena Kṣatriyeṇa
Sarva-sattva-hita-sukhāya pratima pratiṣṭhāpitā
"
Berenike was a major Indo–Roman maritime hub linking Roman Egypt with western Indian ports like Barygaza (Bhrigu Kaksha), Muziris, Arikamedu and Tamralipti.
Indo Roman traders used monsoon navigation described in the Periplus of the Erythraean Sea. Goods moved from India to the Red Sea, overland to the Nile and onward to Rome.
Indian merchants often lived seasonally or semi-permanently in these ports, building shrines and preserving their religious identities abroad.
In the 3rd century CE, inside the Roman Empire, on the Red Sea coast of Egypt at the ancient port of Berenike, a Samskrit inscription was carved in Brāhmī script by an Indian Kṣatriya named Vasula – and it is still there.
It is dated to the reign of Philip the Arab (Marcus Julius Philippus, 244–249 CE).
The inscription begins with “Siddham!” - meaning "Success!"
It records that “in the year of King Philip,” Vāsula the Kṣatriya established a Pratimā “for the welfare and happiness of all beings” – sarva-sattva-hita-sukhāya.
That phrase is deeply associated with Buddhist dedicatory language, yet the archaeological context reveals something even more powerful.
Alongside evidence of a Buddha image, the site yielded references to the early Bhagavata triad – Vasudeva Krishna, Samkarshana and Ekanamsha.
This is the same Vasudeva, Samkarshana & Ekanamsha triad known from Mathura and the Heliodorus pillar tradition, now found operating inside Roman territory.
This was not a passing trader scratching graffiti. The inscription uses Roman regnal dating, proving integration into imperial administrative timekeeping, and it reflects a functioning Indian religious community in Egypt.
The donor’s self-identification as a Kṣatriya suggests a high-status merchant or guild-linked expatriate from western India during a period when Roman gold flowed into India. Long-distance oceanic trade was still active then despite political instability in Rome.
This well dated inscription is devotional instead of trade focused.
It proves Samskrit usage outside India in the 3rd century CE. It confirms Krishna–Vasudeva worship in the Mediterranean world. It also shows Buddhist and Vaishnava coexistence within the same diaspora space.
This inscription provides a direct Indo–Roman synchronism anchored to a named emperor.
This means, Indian Ocean was already a globalised civilisational network nearly 1800 years ago.

https://x.com/BishtLokinder/status/2025899866342281261/photo/2

 Sanskrit inscription of about 3rd c AD excavated in Berenike (ancient port city) #Egypt  where the famous Vasudeva #Krishna, #Samkarsana and #Ekanamsha statue along with a #Buddha statue were found. The inscription is a dedication by a #Kshatriya named Vasula where he dedicates a “Pratima” for the welfare and happiness of all - 

“atra diwasé Vasuléna Ksattriyéna” “Sarvva satva hita sukhaya” It is dated to the reign of the emperor Marcus Julius Philippus, who ruled the Roman Empire from 244 -249 CE “Siddham! Rajño Philippasya Va(r)s(é) sas..”

தாம்பரம் சதானந்தபுரம் GKM கல்லூரிக்கு சொந்தமான ரூ.450 கோடி நிலத்தை அபகரிக்க ஜி ஸ்கொயர் நிறுவனம் முயற்சி

தாம்பரம் சதானந்தபுரத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான ரூ.450 கோடி நிலத்தை அபகரிக்க ஜி ஸ்கொயர் நிறுவனம் முயற்சிப்பதாக கல்லூரி நிர்வாகம் குற்றச்சாட்டு. 


 

 கல்லூரி கட்டிடங்களின் சில பகுதிகளை ஜி ஸ்கொயர் நிறுவனம் அனுமதி இல்லாமல் இடித்து விட்டதாக வேதனை.

ED dossiers against T.N. Minister K.N. Nehru contain funds to DMK party, IAS, IPS officers lobby for Pre-Tender fixing and paying bribes

 What did the ED dossiers against T.N. Minister K.N. Nehru contain | Explained February 23, 2026 Mohamed Imranullah S. 

https://www.thehindu.com/news/national/tamil-nadu/what-did-the-ed-dossiers-against-tamil-nadu-dmk-minister-kn-nehru-contain-explained/article70665786.ece

How did the ED get hold of materials related to the alleged cash-for-jobs and tender scams? What did the ED recover from the mobile phones? What was the modus operandi? Is the Chief Minister linked to these allegations?

ED-யின் குற்றச்சாட்டுகள்: தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு மீதான லஞ்ச ஊழல் வழக்கு – விளக்கம்

சமீபகாலமாக தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Enforcement Directorate (ED) அமைச்சர் கே.என். நேரு மீது சமர்ப்பித்துள்ள குற்றச்சாட்டுகள். இந்த வழக்கு பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA)-ன் கீழ் தொடங்கியது, ஆனால் பின்னர் லஞ்ச ஊழல் தொடர்பான ஆதாரங்களை ED பகிர்ந்துள்ளது. The Hindu-வின் விளக்கக் கட்டுரையின் அடிப்படையில் இதைப் புரிந்துகொள்ளலாம்.

1. எப்படி ED இந்த ஆதாரங்களைப் பெற்றது?

  • 2025 ஏப்ரல் 7 அன்று, ED அதிகாரிகள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 14 இடங்களில் சோதனை நடத்தினர்.
  • இது True Value Homes (TVH) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிரான வங்கி மோசடி வழக்குடன் தொடர்புடையது. இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் நேருவின் சகோதரர் N. ரவிச்சந்திரன்.
  • சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து WhatsApp உரையாடல்கள், புகைப்படங்கள், எக்செல் ஷீட்கள் போன்றவை கிடைத்தன.
  • இவை பணத்திற்கு வேலை (cash-for-jobs) மற்றும் டெண்டர் ஊழல் தொடர்பானவை என ED கூறுகிறது.

2. முக்கிய குற்றச்சாட்டு 1: பணத்திற்கு வேலை ஊழல் (Cash-for-Jobs Scam)

  • MAWS துறையில் 2,538 காலியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு செயல்முறையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு.
  • நேருவின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ரகசிய தேர்வு தகவல்களைப் பெற்று, வேட்பாளர்களிடம் லஞ்சம் பெற்றனர்.
  • ஒரு வேட்பாளருக்கு ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சம்.
  • உதாரணம்: 3 பேர் தேர்வுக்கு ₹1 கோடி.
  • WhatsApp-இல் "done" என்ற பதில், பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல், ஹால் டிக்கெட் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்கள்.
  • சில அரசியல்வாதிகள் (நாமக்கல் MLA P. ராமலிங்கம், ராமநாதபுரம் MLA கதர்பாட்சா முத்துராமலிங்கம்) பரிந்துரை செய்ததாக குறிப்பு.

3. முக்கிய குற்றச்சாட்டு 2: டெண்டர் மற்றும் ஒப்பந்த ஊழல்

  • MAWS துறை ஒப்பந்தங்களை வழங்குவதில் ஊழல்.
  • ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை "கட்சி நிதி" (party fund) என்ற பெயரில் லஞ்சம்.
  • மொத்தம் ₹1,020 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக ஒரு dossier-இல் குறிப்பு.
  • லஞ்சப் பணம் ஹவாலா மூலம் வெளிநாடு (டுபாய் உள்ளிட்ட) அனுப்பப்பட்டு, பின்னர் RTGS மூலம் வங்கிகளுக்கு திரும்ப அனுப்பப்பட்டது (எ.கா., Shree Basaveshwara Sugars Limited).
  • நேருவின் அறிவுடன் இவை நடந்ததாக ED கூறுகிறது.

4. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடையவர்கள்

  • சகோதரர்கள்: N. ரவிச்சந்திரன் (TVH MD), K.N. மணிவண்ணன்.
  • TVH ஊழியர்கள்: D. ரமேஷ் (பொது மேலாளர்), T. செல்வமணி (இயக்குநர்), கவி பிரசாத் (முன்னாள் இயக்குநர்).
  • கவி பிரசாத் டெண்டர் முறைகேடுகளில் முக்கிய பங்கு; டிஜிட்டல் தடயம் இல்லாமல் நேரடி சந்திப்புகளை விரும்பியவர்.

5. காலவரிசை மற்றும் தற்போதைய நிலை

  • 2024 பிப்ரவரி: MAWS துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • 2025 ஏப்ரல்: ED சோதனை.
  • 2025 ஜூலை: CBI குற்றப்பத்திரிகை ரத்து → ED ECIR முடக்கம்.
  • 2025 அக்டோபர் 27: 232 பக்க dossier (cash-for-jobs) DGP-க்கு.
  • 2025 டிசம்பர் 3: 258 பக்க dossier (தண்டர் ஊழல்).
  • 2026 பிப்ரவரி 5: Madras High Court-இல் sealed cover.
  • 2026 பிப்ரவரி 20: Madras High Court DVAC-ஐ FIR பதிவு செய்ய உத்தரவு.
  • தமிழ்நாடு அரசு ஏற்கனவே விசாரணை உத்தரவிட்டுள்ளது.

6. நேரு மற்றும் DMK-யின் பதில்

நேரு குற்றச்சாட்டுகளை மறுத்து, "அரசியல் பழிவாங்கல்" என்று கூறியுள்ளார். தன்னை நிரூபிப்பேன் என்றும், நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் விசாரணை உத்தரவிட்டுள்ளார். DMK இதை BJP-AIADMK கூட்டணியின் அரசியல் சதி என்று விமர்சிக்கிறது.

இந்த வழக்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ED-யின் ஆதாரங்கள் டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், விசாரணை எப்படி முன்னேறும் என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

he story so far: The Madras High Court, on Friday (Feb 20, 2026), directed the Directorate of Vigilance and Anti Corruption (DVAC) to register a First Information Report (FIR) regarding the cash-for-jobs scam in the Municipal Administration and Water Supply (MAWS) department.

The FIR was ordered to be booked on the basis of a 232-page dossier that the Directorate of Enforcement (ED) had shared with the Tamil Nadu Director General of Police (DGP) on October 27, 2025 and submitted before the Madras High Court in a sealed cover on February 5, 2026. The Hindu has accessed the 232-page dossier as well as another 258-page dossier to find out what exactly had the ED unearthed.



26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் கைது தஹாவூர் ஹுசைன் ராணாவின் குடியுரிமை கனடா ரத்து?

  தஹாவூர் ஹுசைன் ராணா தற்போது இந்தியாவில் காவலில் உள்ளான், ...... 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப் பட்டு, அமெரிக்க சிறையில்...