முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், புதிதாக இரண்டு மின்தூக்கிகள் அமைக்கும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து, ₹3.55 கோடி பணம், இதற்காகச் செலவிட்டுள்ளதாக, திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறது.
சுமார் 60 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு, தலா 20 பேர் பயணம் செய்யும் இரண்டு மின்தூக்கிகள் அமைக்க, உண்மையில் ₹3.55 கோடி செலவு ஆகுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.(Historical & Theological view based on International University researches)
Monday, March 9, 2026
சுவாமிமலை முருகன் கோவில் ₹3.55 கோடி புதிய மின்தூக்கிகள் சரியாக இயங்கவில்லை
உயில்கள் கட்டாய நீதிமன்றத்தில் பதிவு -சோதனை நாடு முழுவதும் நீக்கம்
நாடு முழுவதும் உயில்கள் கட்டாய நீதிமன்றத்தில் பதிவு -சோதனைக்கான தேவை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது இதனை உடனடியாக அமல்படுத்த தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
Sunday, March 8, 2026
காட்பாடியில் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடியில் கோயில்: கும்பாபிஷேக விழா நடத்திய திராவிட முரட்டு பக்தர்
காட்பாடியில் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடியில் கோயில்: கும்பாபிஷேக விழா நடத்திய திராவிட முரட்டு பக்தர்
ராமச்சந்திரா அறக்கட்டளையின் நிர்வாகி டி.ஆர்.முரளி சார்பில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரங்கள் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயிலுக்குள் ரூ.17 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னாலான எம்ஜிஆரின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக யாக சாலைகள் அமைத்து விக்னேஷ்வர பூஜை, வருண பகவான் பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் கோபுரத்துக்கும், எம்ஜிஆர் சிலைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து,
எம்ஜிஆர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் சேகர் ரெட்டி, பொதுமக்கள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் பலர் பங்கேற்றனர்.
உள் ஒதுக்கீட்டால் எஸ்சி பட்டியல் ஜாதியினர் பாதிப்பு: கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்
கர்நாடகாவில் உள் ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்கள் பாதிப்பு: 10 இடங்களில் போராட்டம்
பெங்களூரு: பட்டியலின உள் ஒதுக்கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு பட்டியலில் உள்ள 101 சாதிகளை எஸ்சி-ஏ, எஸ்சி -பி, எஸ்சி - சி ஆகிய 3 பிரிவுகளாக பிரித்துள்ளது. மொத்தமுள்ள 17 சதவீத இட ஒதுக்கீட்டில் எஸ்சி - ஏ 6 சதவீதம், எஸ்சி - பி 6 சதவீதம், எஸ்சி - சி 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200 புள்ளிகளைக் கொண்ட இன சுழற்சி முறையும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்சி - ஏ பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் முதல் இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்சி - பி பிரிவுக்கு 14 இடமும், எஸ்சி - சி பிரிவுக்கு 21 இடமும் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசின் இந்த முடிவால் எஸ்சி பி மற்றும் எஸ்சி சி பிரிவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சாதியினருக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு இடங்கள் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்சி பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் பேசும் ஆதி திராவிடர், பறையர், வள்ளுவர், சாம்பவர் உள்ளிட்ட சாதியினர் பாதிக்கப்படுவதால், அம்மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
கர்நாடக அரசின் முடிவை கண்டித்து மைசூருவில் பல்கலைக்கழக பாபாசாகேப் அம்பேத்கர் மாணவ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷிமோகாவில் உள்ள ஆதி திராவிடர் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஆதி திராவிட மகாஜன சபையின் மூத்த தலைவர் கோ.தேசிகன்பிள்ளை கூறுகையில், "தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையுடன் கூடிய 3 சதவீத உள் ஒதுக்கீட்டால் அங்குள்ள பறையர் உள்ளிட்ட 76 சாதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கர்நாடக அரசு முடிவால் இங்குள்ள எஸ்சி- பி பிரிவில் உள்ள சுமார் 1.5 கோடியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பாதகம் ஏற்படும்.
அதிலும் குறிப்பாக தமிழ் ஆதி திராவிடர்கள் கர்நாடகா முழுவதும் சுமார் 60 லட்சம் பேருக்கு உயர் கல்வி நிலையங்களில் கற்கும் உரிமையும், ஊக்க தொகையும், அரசு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போகும். கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இதனை திரும்ப பெறாவிட்டால், வருகிற தேர்தலில் கடும் பின் விளைவை சந்திக்க நேரிடும்" என்றார்.
முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூருவில் போராட்டம் நடப்பதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான பாஜகவும், எஸ்சி பி பிரிவில் உள்ள சாதி அமைப்பினரும் காங்கிரஸுக்கு எதிராக திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மைசூருவில் நேற்று கண்டனப் பேரணி நடைபெற்றது.
மானாமதுரையில் போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பா? - நடந்தது என்ன?
மானாமதுரை: மானாமதுரையில் 2 தொழிலாளர்களை வெட்டிய வழக்கில் கைதாகி, கால் முறிவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.
போலீஸார் தாக்கியதில் இறந்ததாகக் கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கோழிக்கடையில் வேலை செய்கிறார். இவரது நண்பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 5-ம் தேதி இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்றபோது, அவர்கள் மீது அதே பகுதியைச் சேர்ந் பொறியியல் பட்டதாரி ஆகாஷ்டெல்சன், குணா ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர், கிருஷ்ணராஜபுரம் மயானம் அருகே ஜெயக்குமார், அழகர் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆகாஷ் டெல்சன், குணா ஆகியோர் இருவரையும் வாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி மேலப்பசலையில் இருந்த ஆகாஷ் டெல்சன், குணா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெல்சன் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.
கைதான இருவரையும் மார்ச் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆகாஷ் டெல்சன் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை போலீஸார் விசாரிக்கின்றனர். இதனிடையே, போலீஸார் தாக்கியதால்தான் ஆகாஷ் டெல்சன் உயிரிழந்ததாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே மதுரை- ராமேசுவரம் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்என வலியுறுத்தினர். அவர்களிடம் நகாட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்து முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியல் தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.
இதையடுத்து, மதுரை, ராமேசுவரம் வழித்தடத்தில் சென்ற வாகனங்கள் அனைத்தையும் போலீஸார் சிவகங்கை, கமுதி உள்ளிட்ட வேறு வழித்தடங்களில் மாற்றிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஆகாஷ்டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன், தாயார் ஆனந்தி ஆகியோர் கூறியதாவது: எங்களது மகனை ஒரு வழக்கில் தேடுவதாகக் கூறி போலீஸார் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போதே உங்களது மகன் கையில் கிடைத்தால் கொன்றுவிடுவோம் என்றனர்.
சிறிது நேரத்தில் எங்களது மகனை கைது செய்துவிட்டதாகக் கூறி, எங்களை விடுவித்தனர். தொடர்ந்து எங்கள் மகனுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதாகக் கூறினர். அவனை சென்று பார்த்தபோது போலீஸார் தன்னை அடித்ததாகக் கூறினான்.
இந்நிலையில் திடீரென எங்களது மகன் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று, எங்களது மகனின் காலை உடைத்துவிட்டனர். அதனால் தான் உயிரிழந்துவிட்டான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே இந்த மறியல் போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவமனையிலும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரத்தில் ரூ.30 கோடி போதைப் பொருள் இலங்கைக்கு கடத்த முயன்ற இப்ராகிம் பாதுஷா (29), முகைதீன் பயாஸ் (27) கைது
ராமநாதபுரத்தில் ரூ.30 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். 2 இளைஞர்களை கைது செய்தனர்.
இலங்கைக்கு கடத்துவதற் காக ராமநாதபுரம் வழியாக மண்டபம் நோக்கி போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸாரும், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் இணைந்து நேற்று அதிகாலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் காரிக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னையில் இருந்து மண்டபம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார், வாகனத்தின் இருக்கைகளைத் தூக்கி சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
ஆந்திராவில் இருந்து போதைப் பொருட்களை சென்னை வழியாக காரில் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் வந்து, அங்கிருந்து மண்டபம் தெற்கு கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப் படகில் கடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. வாகனத்தில் இருந்த போதைப் பொருட்களை எடையிட்டு பார்த்தபோது, அதில் 18 கிலோ மெத்தம்பெட்டமைன், 10 கிலோ ஹெராயின், 218 கிலோ கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.
போதைப் பொருட்களை காரில் கடத்தி வந்த மண்டபத்தைச் சேர்ந்த இப்ராகிம் பாதுஷா (29), முகைதீன் பயாஸ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் கியூ பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மண்டபத்தைச் சேர்ந்த ஷேக் ரஹ்மான் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிறிஸ்துவராக மதம் மாறி ஏழை பட்டியல் ஜாதியினர் இடஒதுக்கிட்டைப் பிடுங்குவது அம்பேத்கர் அரசியல் சாசனத்திற்கு மோசடி- சுப்ரீம் கோர்ட்
Highly troubling order by Nagpur Bench of Bombay High Court
Akola District Caste Scrutiny Committee found that a family had converted to Christianity two generations ago. Committee therefore denied the family Scheduled Caste quota as under the Constitution, SC quota benefits apply only to practicing Hindus, Buddhists and Sikhs
But High Court has rejected the committee’s findings. Court held that unless conversion is documented through baptism certificate or formal paperwork, it cannot be treated as conversion
Even the presence of Cross, pictures of Jesus, and clear evidence of Christian religious practice was dismissed as irrelevant!
It’s common knowledge that for decades, evangelists have deliberately converted SC families without paperwork so that converts continue to enjoy quota benefits. This tactic makes conversion easier and brings quota benefits into the evangelists’ community
Several High Courts and Supreme Court have earlier upheld district caste scrutiny committee findings and cancelled SC benefits in similar cases
We @sewanyaya, along with activist Bhupendra Jatav, have been actively fighting this fraud and have already got cancellation of SC quota benefits in multiple such cases under our Project Samvidhan
We are preparing to challenge this. If not challenged, it will open the door to large-scale conversions and systematic quota fraud
திமுக கொடுத்த வடைகள்- தேர்தல் வாக்குறுதிகள்
2021 சட்டமன்ற தேர்தல் டைமில் மைக் பிடிச்சு “நீட் தேர்வு ரத்து பண்ணிடுவோம்… அதோடு அனிதா பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மெடிக்கல் கல்லூரி… மொத்தம் 39 மெடிக்கல் கல்லூரி கொண்டு வந்து விடுவோம்” என்று சின்னவர் மேடையில் சொன்னார்.
ஸ்ரீ ராமர் கோயில் அஞ்சுநாடு காந்தலூர் பெருமலை -மூணாறு
ஸ்ரீ ராமர் கோயில் அஞ்சுநாடு காந்தலூர்பெருமலை -மூணாறு


These megalithic structures offer a rare glimpse into prehistoric life in South India, surrounded by peaceful farmlands and untouched landscapes. A perfect stop for history lovers and offbeat explorers
சேரன் செங்குட்டுவன் -(பொஆ.188- 244) சங்க கால சேர அரசர்கள் காலம்.

Tamil Nadu ranks highest in suicides among government employees in India
Tamil Nadu ranks highest in suicides among government employees
Tamil Nadu has recorded the second-highest number of suicides, according to the last published report of the National Crime Records Bureau (NCRB) for 2021. With 18,925 suicides, the State is ranked only next to Maharashtra (22,207)
Updated - July 08, 2023 08:54 pm IST Pon Vasanth B.A
This graph shows the number of suicides of “Professionals/Salaried Persons” in 2021 in the five States that recorded the highest number of suicides among government servants.
This graph shows the suicides among government employees, including those from PSUs, in Tamil Nadu and rest of the country from 2017 to 2021. The increase seen across the country in 2019 and 2020 was mainly driven by the increase in Tamil Nadu.
This graph shows the suicides among government employees in Tamil Nadu, with respect to the sector in which they worked. The sharp increase in the suicides among those in the PSUs is of particular concern.
தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஹைகோர்ட்
சென்னை வேப்பேரி செயி.கிறிஸ்டோபர் (அரசு உதவி பெறும்) கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த தூய்மைப் பணியாளரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசு ஒப்புதல் அளித்து சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து தமிழக அரசு தேவையின்றி இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏற்கெனவே தீர்வு காணப்பட்ட ஒரு விவகாரத்தில் மீண்டும் தமிழக அரசு மேல் முறையீடு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
கல் குவாரி விபத்தில் தொழிலாளி மரணம் வழக்கில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி விடுதலை ஹைகோர்ட்ரத்து
தொழிலாளர் மரணம் வழக்கு: DMK MLA விடுதலை தீர்ப்பை ரத்து செய்த மதராஸ் உயர்நீதிமன்றம் – என்ன நடந்தது?
சமீபத்தில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் பொறுப்பு குறித்து முக்கியமான தீர்ப்பை Madras High Court வழங்கியுள்ளது. ஒரு தொழிலாளியின் மரணம் தொடர்பான வழக்கில், M. Palaniyandi என்ற **Dravida Munnetra Kazhagam (DMK) கட்சியை சேர்ந்த MLA மீது வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பை நீதிமன்றம் ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்பியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி, நீதிமன்றம் கூறிய காரணங்கள், மற்றும் அதன் சட்டப்பூர்வ முக்கியத்துவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வழக்கின் பின்னணி
கரூர் மாவட்டத்தில் செயல்பட்ட ஒரு கல் நொறுக்கும் (stone crusher) தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர் M. Balasubramaniam பணியின்போது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்படாததால்தான் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த தொழிற்சாலை DMK MLA M. Palaniyandi உடையதாகக் கூறப்பட்டதால், அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கீழ்நீதிமன்றங்களில் என்ன நடந்தது?
வழக்கு முதலில் நீதித்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது:
சம்பந்தப்பட்ட நிறுவனம் Factories Act, 1948 கீழ் “factory” என்ற வரையறைக்குள் வராது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதனால் குற்றச்சாட்டு நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி MLA விடுவிக்கப்பட்டார்.
பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டபோதும், கீழ்மட்ட மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதே தீர்ப்பை உறுதி செய்தது.
அதற்கான முக்கிய காரணம்:
வழக்கு தொடுக்கப்பட்ட புகாராளரிடம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்யப்படாதது.
உயர்நீதிமன்றத்தின் முக்கியக் கருத்து
இந்த தீர்ப்புகளை சவால் செய்து தொழிலாளர் பாதுகாப்பு துறையின் துணை இயக்குநர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Justice P. Velmurugan முக்கியமான கருத்துகளை முன்வைத்தார்.
நீதிமன்றம் கூறியது:
தொழிலாளர் Balasubramaniam பணியின்போது இறந்தது உண்மை.
பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதது குறித்து சீரிய ஆய்வு செய்யப்படவில்லை.
கீழ்நீதிமன்றங்கள் ஆதாரங்களையும் சட்ட விதிகளையும் சரியாக மதிப்பீடு செய்யவில்லை.
நீதிபதி தனது உத்தரவிலில்:
“ஆதாரங்களையும் சட்டப்பிரிவுகளையும் மதிப்பீடு செய்வதில் கீழ்நீதிமன்றங்களில் தவறுகள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
இதனைத் தொடர்ந்து Madras High Court:
கீழ்நீதிமன்ற தீர்ப்புகளை ரத்து செய்தது
வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது
கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு (Additional Sessions Court) வழக்கை திருப்பி அனுப்பியது.
இதன் மூலம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
இந்த தீர்ப்பின் முக்கியத்துவம்
இந்த தீர்ப்பு சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது:
1. தொழிலாளர் பாதுகாப்பு முக்கியம்
தொழிலாளர்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படை நோக்கம்.
2. ஆதாரங்களின் சரியான மதிப்பீடு
நீதிமன்றங்கள் ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
3. நிறுவனங்களின் பொறுப்பு
பணியிடத்தில் ஏற்பட்ட விபத்துகளுக்கு நிறுவன உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
சுவாமிமலை முருகன் கோவில் ₹3.55 கோடி புதிய மின்தூக்கிகள் சரியாக இயங்கவில்லை
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், புதிதாக இரண்டு மின்தூக்கிகள் அமைக்கும் பண...



































