Monday, March 30, 2026

தேர்தல் முறை சாதியத்தை இவ்வளவு கெட்டியாக உருவாக்கி வளர்த்து கட்டிக் காக்கிறது.

 இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் உருவாக்கும் இந்த தேர்தல் முறை சாதியத்தை இவ்வளவு கெட்டியாக உருவாக்கி வளர்த்து கட்டிக் காக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

தேர்தல் வந்தவுடன்தான் அது எந்த தேர்தலாக இருந்தாலும் சரி எந்தெந்த தொகுதியில் என்ன ஜாதி ஓட்டு அதிகம் என்ற துல்லியமான புள்ளி விவரங்களுடன் வேட்பாளர்கள் தேர்வு நடக்கிறது.ஆக ஜாதியை வளர்ப்பதிலும் கட்டிக்காப்பதிலும் இந்த தேர்தல் முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதானே உண்மை.
ஒரு நண்பர் இதற்கு மாற்றாக ஒரு தேர்தல் முறையை சொன்னார்.
1.கூட்டணிகள் என்பது கிடையாது.
2.வேட்பாளர் யாரென்றும் தெரியாது.
3.அவரவர் கட்சி சின்னங்கள் மட்டுமே தேர்தலில் பகிரங்கப்படுத்தப்ப டும்.
4.அனைத்து தொகுதிகளிலும் பதிவான செல்லத்தக்க ஓட்டுக்கள் கணக்கிடப்படும்.
5.போட்டியிட்ட சின்னங்கள் எத்தனை ஓட்டுக்கள் வாங்கியிருக்கின்றனவோ அதற்கு தக்க எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று அறிவிக்கப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே கூட்டம் போட்டு யார் யாரை நம் கட்சியிலிருந்து சட்டசபைக்கோ பாராளுமன்றத்திற்கோ அனுப்பலாம் என்று முடிவு செய்து அனுப்புவார்கள்.அப்புறமாக அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடி யார்யார் எந்த தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.
இந்த முறையில் தேர்தல் நடந்தால் சாதிகளின் மேலாதிக்கம் இருக்காது.
வேட்பாளர் யாரென்றே தெரியாது.கட்சிகள் மட்டுமே செலவு செய்யணும்.தனிநபர்களின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்படும்.கட்சி நம்மை எம்.எல்.ஏ.வாகவோ எம்.பி.யாகவோ அனுப்பும் என்ற நப்பாசையில் அனைவரும் உண்மையாக சட்டமீறல்களில் ஈடுபடாமல் உழைத்து கட்சி தலைமையிடம் நல்ல பெயர் வாங்க பாடுபடுவார்கள்.
குறிப்பு:இந்த தேர்தல் முறை அம ல்படுத்தப்பட்டால் இடதுசாரிகளுக்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து சீட்டுகளுக்கும் அதிகமான பிரதிநிதித்துவம் உறுதியாக கிடைக்கும்.ஏனெனில் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுக்கள் அவர்களுக்கு உண்டு.
பிரதிநிதித்துவம் மட்டும்தான் கிடைக்கும்.
இன்னும் இது மாதிரி பல் வேறு நாடுகளில் பல்வேறு தேர்தல் முறைகள் இருப்பதாகவும் அங்கெல்லாம் ஜனநாயகம் ஜனநாயகமாகவே இருக்கிறது என்றும் சொன்னார்.

No comments:

Post a Comment

தேர்தல் முறை சாதியத்தை இவ்வளவு கெட்டியாக உருவாக்கி வளர்த்து கட்டிக் காக்கிறது.

  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் உருவாக்கும் இந்த தேர்தல் முறை சாதியத்தை இவ்வளவு கெட்டியாக உருவாக்கி...