சர்வே நில அளவை கல் Vs விளக்கு தூண் - Amutha Krishna Mam- Link
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 10, 1802 அன்று, பிரிட்டிஷ் சர்வேயர் கர்னல் வில்லியம் லாம்ப்டன், மெட்ராஸில் (இப்போது சென்னை) உள்ள செயிண்ட் தாமஸ் மவுண்டில் ஒரு லட்சிய, கணித ரீதியாக நுணுக்கமான தனது புவியியல்/ அறிவியல் பயணத்தைத் தொடங்கினார்.
William Lambton’s genius had conceived the idea of the Great Trigonometrical Survey (GTS) of the country with the Great Arc providing the skeletal framework for it.
இந்திய நில அளவுக்கான துவக்க புள்ளி சென்னை St.Thamos Mt ஆகும்.
இந்த திட்டம் இந்தியா முழுவதும் நிறைவடைய 60 வருடங்கள் ஆனது.
இந்த திட்டம் இமயமலையின் அடிவாரத்தில் முடிந்தது.
தீபகற்ப இந்தியாவின் நடுவில் உள்ள ஒரு தீர்க்கரேகையில் "ஒரு டிகிரி அட்சரேகையின் நீளத்தை அளவிடுவதற்கு", செயிண்ட் தாமஸ் மவுண்டிற்கும் தெற்கு திசையில் உள்ள மற்றொரு குன்றிற்கும் இடையில் 12 கிலோமீட்டர் தூரம் வரை நீண்டிருந்த அடித்தளத்தை லாம்ப்டன் கவனமாக அமைத்தார்.
Hinganghat என்னும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்வே செய்யும் போது Lambton அவரது 70 ஆவது வயதில் இறந்தார். அவருக்கு அந்த ஊரில் ஒரு சமாதி உள்ளது.
லாம்ப்டன் இறந்த பிறகு, சர் ஜார்ஜ் எவரெஸ்ட் கிரேட் ட்ரைகோனோமெட்ரிக் சர்வேயை முடிக்கும் பணியை மேற்கொண்டார்.
எனவே, அவரது நினைவாக பூமியின் மிக உயரமான இடத்திற்கு எவரெஸ்ட் சிகரம் என்று பெயர் வந்தது.
ஆக
இந்த பணியினை ஆங்கிலேயர்கள் செய்ததற்கு சாட்சி
1. சென்னை St.Thomas Mount ல் இருக்கும் ஒரு ஆதாரமும், ( 1,2 photos)
2. உத்தரகண்ட் மாநிலத்தில் Bhadraj என்னும் இடத்தில் இருக்கும் சர்வே கல்லும், (3 photo)
200 ஆண்டுகள் பழமையான சர்வே கல் (1814).
பத்ராஜ், உத்தரகண்ட்.
அந்த சர்வே கல் பத்ராஜ் கோயிலின் சுற்றளவில் அமைந்துள்ளது. ( Photo 3)
ஒரு நினைவுச் சின்னமான இந்தக் கல், அந்தக் கால சர்வேயர்கள் மற்றும் விஐபி பார்வையாளர்களின் பெயர்களால் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் அவர்கள் செய்த பணிகளுக்கு ஒரு வரலாற்றுச் சான்றாக நிற்கிறது..
3. மகாராஷ்டிரா மாநிலத்தில் Hinganghat எனும் ஊரில் இருக்கும் சர்வே கல்லும்.(4,5 photos)
4. Nagpur ல் இருக்கும் ஒரு சான்றும் ( last photos)
இப்படி இந்தியாவில் நில அளவை செய்ததற்கு ஆதாரமாக ஆங்கிலேயர்கள் 200 வருடங்கள் முன் வைத்த
எந்த சர்வே கல்லும் திருப்பரங்குன்ற மலை மேல் இப்போது சர்ச்சையில் இருக்கும் விளக்கு தூண் போல இல்லை.
மேலும், எந்த வித குறிப்பும் இல்லாமல் ( ஆங்கில எழுத்துக்கள்/ அல்லது எண்கள்) இருக்கும் அந்த திருப்பரங்குன்ற தூண் மிக பழமை ஆனது என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் இருக்க முடியும்??
ஆங்கிலேயர்களால் நடப்பட்ட கல் எனில் கட்டாயம் ஏதாவது ஒரு குறிப்பு செய்து இருப்பார்களே!!
நில அளவை செய்ய தேர்ந்து எடுத்த முதல் இடமான St.Thomas Mount ல் ஏன் விளக்கு தூண் போன்ற ஒரு சர்வே கல் இல்லை??
இந்த பதிவு எங்கேயும் காப்பி & paste பதிவு இல்லை.
நெட்டில் இந்திய நில அளவு ( சர்வே) முறை குறித்து தேடியதில் கிடைத்த செய்திகளை வைத்து எழுதி உள்ளேன். ..
Mam Thanks Amutha Krishna Mam- Link








No comments:
Post a Comment