Wednesday, December 10, 2025

கோத்தகிரி நகராட்சி தலைவர் ஜெயகுமாரி -சாதிய வன்கொடுமை புகாரில் நகராட்சியின் துணை தலைவர் திமுக உமாநாத் மீது PCR தலைமறைவு

 திமுக: `கட்சிக்காகதான் பொறுமையா இருந்தேன்’ - நகராட்சி துணை தலைவர் மீது சாதிய வன்கொடுமை புகார் சதீஸ் ராமசாமி Published:


பட்டியல் சமுதாய பெண்ணான‌ தலைவர் ஜெயகுமாரியை துணை தலைவர்  திமுக உமாநாத் பொது வெளிகளில் சாதி பெயரைச் சொல்லி இழிவாகவும் ஆபாசமான வார்த்தைகளிலும் அவ்வப்போது பேசி வந்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், கோத்தகிரியில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் தலைவர் ஜெயகுமாரியை சாதி பெயரைச் சொல்லி ஆபாசமாக இழிவு படுத்தியிருக்கிறார் உமாநாத்.‌

இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஜெயகுமாரி கோத்தகிரி காவல்நிலையத்தில் நேற்று மாலையே புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உமாநாத் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள உமாநாத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர் ‌.

பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண் ஜெயகுமாரி, "பட்டியல் சமுதாயத்தைச்‌ சேர்ந்த நான் தலைவராக பதவியேற்றதே இவருக்கு பிடிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அவர் தொடர்ந்து என்னை சாதியின் பெயரைச் சொல்லி இழிவு படுத்துவது, பெண் என்றும் பார்க்காமல் மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவது என மிகவும் மோசமாக நடந்து வந்தார். ஒரே திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்ற மரியாதைக்காக இத்தனை நாளாக பொறுத்து வந்தேன். மிகவும் எல்லை மீறிய பேச்சால் தற்போது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யச் சொன்னேன் " என்றார்.

No comments:

Post a Comment

தமிழகத்தின் தேர்தல் வரலாறு 1998 & 1999

  Constituency year Winner Candidate Winner Party Winner Vot...