லோரா சாந்தகுமார். SRM பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நம் மக்களைக் கொன்ற போது இந்தியா திருப்பி தாக்கிய Operation Sindoor-ஐ விமர்சித்து WhatsApp-ல் பதிவு போட்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அதுகுறித்த The News Minute செய்தியில், லோராவின் ஜாதியையும் மதத்தையும் இழுத்திருக்கிறார் ஷபீர் அகமது. பிரச்சனைக்கு இந்த இரண்டுமே சம்பந்தமில்லாதது. ஜாதி-மதத்தை இழுத்து தானே அரசியல் செய்வார்கள். செய்யட்டும். Let’s look at the issue objectively.
போருக்கு எதிராகவும், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நண்பர்களிடம் கூட ஒரு செய்தியைப் பகிரக்கூடாது என்கிற சர்வாதிகார தொனி இதில் இருக்கிறது. சகிக்க முடியாத முட்டாள்த்தனமான கருத்தாகவே இருந்தாலும், அவரது கருத்தை நம்பவும் அதைப் பரப்பவும் ஒருவருக்கு கண்டிப்பாக உரிமை உண்டு.
Second, லோரா அவர் எழுதிய 12 பதிவுகளில் என்ன சொன்னார் என்பது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த நடவடிக்கை என்பதே மத்திய அரசின் அரசியல் லாபத்திற்காக என்று எழுதியிருக்கிறார். மற்றொரு பதிவு: “இந்தத் தாக்குதலில் இந்திய அரசு ஒரு பாகிஸ்தான் குழந்தையைக் கொன்றிருக்கிறது, இரண்டு பேர் காயமடைந்திருக்கிறார்கள். இது கோழைத்தனம்.”
நமக்கு இங்கு தான் கடுப்பாகும்.
2011-ல் ஒசாமா பின்லேடனை போட்டுத்தள்ளியது ஒபாமா அரசு. அவர் Democrat. ஆனால் 9/11 தாக்குதலுக்குப் பின் அந்தப் போரை ஆரம்பித்து வைத்த George W. Bush ஒரு Republican. பின்லேடன் கொல்லப்பட்ட போது, Republican கட்சியினர் ஒபாமாவின் நடவடிக்கையைக் கொண்டாடினார்கள். அவர்களுக்குள் எத்தனை சண்டைகள் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு என்று வருகிற போது அவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடுகிறார்கள். அது ஒபாமாவின் சாதனை என்பதையும் தாண்டி அந்நாட்டின் ராணுவத்தின் சாதனையாகப் பார்க்கப்பட்டது. Credit belongs primarily to SEAL Team Six, CIA, and the military.
ஆனால் இங்கு மட்டும் தான் பாகிஸ்தானில் ஒரு குழந்தை இறந்ததற்கு மனிதநேயத்தில் உருண்டு, ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்து, அதை ஒரு கட்சியோடு இணைத்து அரசியல் பேசுவார்கள்.
லோரா ஒரு மூளையில்லாத தற்குறி ஜாம்பி என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, ஜார்ஜ் ஆர்வெல் போருக்கு எதிரானவர் என்றது. 1930-களில் நாசிகளின் ஆதரவோடு வலதுசாரியான Francisco Franco & இடதுசாரிகளுக்கு இடையே நடந்த Spanish Civil War-ன் போது அந்த போரில் பங்கேற்றவர் ஆர்வெல். அவரது அனுபவங்களை ‘Homage to Catalonia’ என புத்தகமாகவே எழுதியிருக்கிறார். ஆர்வெல் ஒரு இடதுசாரி, ஆனால் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட்களைப் போட்டுப் பொளந்துருப்பார். இந்த லோரா அதையெல்லாம் படிக்காமல், online-ல் எதையாவது மேய்ந்து அதில் ஒரு quote-ஐ உருவி தன்னை அறிவாளியாக காண்பிக்க முயன்றிருக்கிறார். இரண்டாம் உலகப்போர் மிக அவசியமானது என்று எழுதியதும் இதே ஆர்வெல் தான்.
லோரா எழுதிய மற்றுமொரு விஷயம், போரால் இந்தியா பாதிக்கப்படும், பணவீக்கம் அதிகரிக்கும், உணவு தட்டுப்பாடு வரும்.
26 அப்பாவி பொதுமக்களைக் கொன்றிருக்கிறான், தினமும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடக்கிறது, 1947 முதல் நம்மை நோண்டிக் கொண்டிருக்கிறான், அதில் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்திருக்கிறார்கள். இது அத்தனையையும் வசதியாக மறைத்துவிட்டு, போர் நடந்தால் சோறு இருக்காது என ஒரு பேராசிரியர் பேசுவது அயோக்கியத்தனம்.
In short, Ms. Lora had every right to hold personal opinions on war. What she did not have was the right to use moments of national security crisis to push woke, moralising narratives that undermine public confidence in India’s armed forces, while being employed by a private educational institution.
Calling military action “cowardice,” selectively highlighting civilian casualties, and inserting Orwellian tropes at the peak of a conflict is not neutral “peace advocacy.” It is ideological signalling, indistinguishable from the global anti-national activist playbook that reflexively delegitimises democratic states while ignoring hostile adversaries.
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. உள்ளேயே இருந்துகொண்டு கரையான் போல் நாட்டை அரிக்கும் ஒரு முட்டாளை தூக்கியெறிந்தது சரி.
https://www.facebook.com/photo?fbid=122232638390162038&set=a.122152912574162038



No comments:
Post a Comment