Monday, May 16, 2022

தெய்வத் தமிழர் கிருபானந்த வாரியாரை த் தாக்கிய திமுக குண்டர்கள் கதை -R.S.பாரதி கிருபானந்த வாரியாருக்கு நடந்தது இது தான்.

திமுகவினர் பாரம்பரிய ரௌடித்தனம் செய்தால் தாங்க மாட்டீர்கள் என எச்சரிக்கை-  திண்டுக்கல் பொதுகூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி 

"தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். பழைய திமுக காரன் மீண்டும் வந்து விடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கின்றேன்.
 அண்ணாவைப் பற்றி தவறுதலாக பேசிய கிருபானந்த வாரியார் பேசினார். அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது.  இதே நிலைமை தான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்” 

கடந்த கால வரலாறை பார்ப்போம் :
அண்ணா இறந்த புதிது. அவர் இறப்புக்கு கூடிய மக்கள் வெள்ளம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.  அவரை பார்க்க முண்டியடித்த மக்களின் அறுந்த ரப்பர் செறுப்புகள் மூன்று லாரி லோடு தேறிற்று என கார்பொரேஷனின் அப்போதைய செய்தி. நிற்க. 
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (பிராமணர் அல்ல) சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர். அவ்வப்போது தமாஷாக ஜோக் அடித்து அவையினரை சிரிக்கவும் வைப்பார், சிந்திக்கவும் வைப்பார்.
அண்ணா இறந்த புதிதில், சொற்பொழிவு ஆற்றும்போது நடுவில், 
"கடவுளை பழிப்பவர்களுக்கு நல்ல சாவே வராது. வெளிநாட்டிலிருந்து டாக்டர் மில்லர் வந்தாலும் காப்பாற்ற முடியாது" என்றும், மேலும் "கொடுத்த விபூதியை கீழே சிந்தி அலட்சிய படுத்தியதால் நெடுஞ்செழியனுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை" என்றும் பேசி விட்டார்.
அதற்காக கழகத்தினர் அவர் நெய்வேலி வீட்டிற்கு போய் அவரிடமிருந்த லிங்கம், பிள்ளையார், முருகன் விக்கிரங்களை உடைத்தெறிந்தனர். அவரையும் தாக்கினர். அவருடைய வயதான தாயாரையும் மிரட்டினர். அவரிடம் மன்னிப்பு கடிதம் அவர்கைபட எழுதி வாங்கினார்கள். 

தி.க.வை தோலுரித்த வாரியார் சுவாமிகள்..!


அண்ணாதுரை எழுதியது போல் சுமார் 20 வருடத்திற்கும் மேல் இந்துக்களின் கடவுளை நிந்தனை செய்து பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஈ.வே.ரா. கடவுளை நம்பினோரை “முட்டாள், காட்டுமிராண்டி, அயோக்கியன்” என்று கடும் சொற்களால் திட்டினார்.


பொறுமை இழந்த வாரியார் சுவாமிகள் “தமிழ்நாட்டில் பெரியார் என்றொரு நச்சு ஆறு ஓடுகிறது” ராமர் படத்தைச் செருப்பால் அடிப்பது, பிள்ளையார் சிலையை உடைப்பது, இராமாயணம், போன்ற நூல்களைக் கொளுத்துவது, போன்ற காரியங்களில்  ஈ.வே.ரா ஈடுபட்டுள்ளார் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் வாரியார் சுவாமிகள்.

 

இதற்கு அண்ணாதுரை சுவாமிகளை கண்டித்துக் கட்டுரை ஒன்றை எழுதினார்..

உம்முடைய ஓட்டைப் படகிலேறி அந்த ஆற்றைக் கடக்க நினைக்காதீர்…. ஜாக்கிரதை….. ஆபத்தை அணைத்துக் கொள்ளாதீர், பின்னர் போச்சே பிழைப்பு என்று மனம் கரையாதீர்! சுயமரியாதை சக்தியோடு மோதிக் கொள்ள வேண்டாம் என்று எழுதிருந்தார்.

அக்கட்டுரையில் நான் “அதை தடுக்க முடியாது” என்ற வரிக்கு “தாக்குதல் நடத்த ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்” என்பது தான் அர்தம்! இப்படி வன்முறையைத் தூண்டும் கட்டுரைகள் அந்தக் கால திராவிட இயக்கத்தின் இதழ்களில் சர்வ சாதாரணமாக வெளி வரும், அண்ணாதுரை 1969-ல் காலமாகி விட்டார்.

நெய்வேலியில் ஒரு ஆன்மீகக் கூட்டம். எப்போதும் “வாழ்கை நிலையில்லாதது” என்பதை மையமாக வைத்து வாரியார் சுவாமிகள் பேச்சு அமையும். அன்றும் அப்படியே பேசினார்.”விதி வலிமையுடையது ஊழ்வினையை வெல்ல முடியாது”! என்று குறிப்பிட்டார். “கில்லர் வந்து விட்டால் மில்லரே வந்தாலும் பயன்படாது” என்று பேசி இருந்தார் சுவாமிகள்.

“மில்லர்” என்பவர் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர். அண்ணாதுரைக்குச் சிகிச்சை அளித்தவர். அண்ணாதுரையை தான் வாரியார் கிண்டல் செய்துள்ளார் என்று வதந்திகள் பரவின. இதனை அடுத்து வன்முறைக் கும்பல் ஒன்று வாரியாரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கியது. வாரியார் வழிபடும் விக்ரகங்கள் வீசி எறியப்பட்டன. காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வாரியார் சுவாமிகள் காப்பாற்றப்பட்டார்.

ஒரு சொல்லுக்கு ஒரு மணி நேரம் விளக்கம் சொல்லும் ஆற்றலுடையவர். வேதாந்தம், சித்தாந்தம், போன்ற நூல்களிலிருந்து பல்லாயிரம் பாடல்களை மனப்பாடமாகச் சொல்ல வல்லவர் சுவாமிகள். ஐந்தெழுத்தும், திருநீறும், கண்டிகையும் பொருளாகக் கொண்ட பெரியவர்.

பொருள் பற்றைத் துறந்து அருள் பற்றை மட்டுமே பற்றி. வந்த பொருளையெல்லாம் வறியவர்களுக்கும், திருப்பணிக்களுக்கும், வாரி வாரி வழங்கியவர். கம்பரும், கச்சியப்பரும், ஒருங்கே வந்தவர் போல் அருளுருவாய் நடமாடிக்கொண்டிருந்த தமிழ் முனிவர்.

வாரியார் சுவாமிகள் தாக்கப்பட்டதால் நல்லோர் பலரும் கண்ணீர் சிந்தினர். ராஜாஜி மனம் வருந்தினார், பக்தவச்சலம் கண்டித்தார், கி.வா.ஜகந்நாதன், குமரி அனந்தன், ஆகியோர் சுவாமிகளை நேரில் சந்தித்து பேசினர். சட்டமன்றத்தில் உறுப்பினர் விநாயகம் கடும் கண்டனம் தெரிவித்தார். ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டுவந்தார்.

மா.பொ.சி, எம்.ஜி.ஆர், வருத்தம் தெரிவித்தனர். ஒருவர் மட்டும் வாரியார் தாக்கப்பட்டது சரிதான் என்று எழுதினார், ஈ.வே.ரா. “யோகியமற்ற கூப்பாடுகள்” என்ற தலையங்கத்தில் வாரியார் சுவாமிகளைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்…..

– ஆக்கம்  ஜீ. சிவக்கலை 

அண்ணாவை கொன்றது கருணாநிதி தான் தியாகி நெல்லை ஜெபமணி  


சி.என்.அண்ணாதுரையை கொன்றது- மு.கருணாநிதி தான்.
தியாகி நெல்லை ஜெபமணி பல கூட்டங்களில் உண்மைகளை எடுத்து போட கருணாநிதி வழக்குப் போட்டார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்கிறேன் என தியாகி கூறியதனால்  மு.கருணாநிதி வழக்கை வாபஸ் பெற்றார். விபரங்கள் கீழே

 
 
திமுக கட்சி ஆரம்பித்த போது இருந்த முக்கிய தலைவர்கள் ஐம்பெரும் குழுவில் கருணாநிதி கிடையாது. அண்ணாதுரை அமைச்சரவையில் நம்பர் 2 என இருந்தவர் நெடுஞ்செழியன் அவருக்குப் பின்பு மேலும் பல சீனியர்கள் கீழே அடுத்த மட்டத்தில் தான் கருணாநிதி. அண்ணாதுரை மரணத்திற்கு பிறகு நடிகர் எம் ஜி ஆர் அவரின் ஆதரவு அவர் செய்த பல்வேறு விதமான திரை பின் விவகாரங்களால் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார் பின் வழியாக.

 
 
புகைப்படத்தில் பேச்சாளர் பேசும்பொழுது கருணாநிதி தரையில் அமர்ந்து இருப்பாரா,  அவருக்கு சேர் கூட கிடையாது. முரசொலி பத்திரிகையை நடத்தி அருவருப்பாக கீழ்த்தரமாக காமராஜர், ஈவே ராமசாமி அனைவரையும் தாக்கி எழுதி கீழ்த்தரமான ரசனை உள்ள மக்களைக் கூட்டி இருந்ததினாலும் எம்ஜிஆர் உடைய நட்பினால் மட்டுமே  அவர் அந்த இடத்தில் அமர முடிந்தது.
 
மு க ஸ்டாலின் இன்றும் அவரால் ஒரு துண்டுச் சீட்டில் உள்ளதை முறையாகப் படிக்க முடியவில்லை. ஆங்கிலம் பற்றி சொல்லவே வேண்டாம். ஸ்டாலினை வளர்க்க சமமாக இருந்த தலைவர்களை எல்லாம் வெளியேற்றி கட்சியை சர்ச் போலாக்கி  தலைமைப் பரம்பரை பேராயர் என ஆக்கி ஸ்டாலினை கொண்டுவர அதன் பின்பு அவர் மகன் வந்துள்ளார்,
   
திமுக சர்ச்சின் பரம்பரை பேராயர் குடும்பமாக உதயநிதி அந்தப் பதவியைப் எடுத்துக் கொண்டார்.   நெல்லை தியாகி நெல்லை ஜெபமணி மகன் மோகன்ராஜ் அவர்கள் தந்தமைக்கு நன்றி.
    
 சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது கேன்சர் நோய் வந்தது. அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை பெற்றார். அங்கிருந்து இங்கு திரும்பி வந்த பொழுது அவர் மீது வெளிச்சம் படக்கூடாது சூரிய ஒளியை கூட தவிர்ப்பது நல்லது. மலைப் பிரதேசத்தில் ஒளி படாதபடி  ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்தனர்.   
        
எதிர்க் கட்சி காங்கிரஸ்  தலைவராக இருந்த திரு.காமராஜர் அவர்கள் பிரதம மந்திரி இந்திரா காந்தியுடன் பேசி பெங்களூர் அருகே நந்தி மலையில் அவருக்கு ஒரு ஓய்வு பங்களா ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஆனால் கருணாநிதி நாங்கள் அவரை பார்த்துக் கொள்வோம் என்று வைத்துக் கொணடார்.  ஒரு பெரிய விழாவில் பங்கெடுக்க வைத்து பல ப்ளாஷ்  லைட் அவர் மீது விழும்படி ஆனது.த அது அண்ணாதுரை உடல் நிலையை மிக வேகமாக மோசமாக்கியது. அவர் அடுத்த சில நாட்களில் உயிரிழந்தார்
 
தியாகி ஜெபமணி அவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பர். அவர் பின்னணி முழுமையாக அறிந்திட அண்ணாதுரையின் மரணத்திற்கு காரணம் கருணாநிதிதான். கருணாநிதி தான் அண்ணாதுரையை கொன்றார்  என்று கூட்டத்தில்  பேசினார்.

முதலமைச்சரான கருணாநிதி நெல்லை ஜெபமணி மீது வழக்குத் தொடர்ந்தார்.  தியாகி நெல்லை ஜெபமணி நான் நீதிமன்றமத்தில் சந்திக்க தயார் என்றார். நிச்சயமாக தான் செய்த  பல உண்மைகளைக் வெளிக் கொண்டு வந்துவிடும் என கருணாநிதி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டார். இதுதான் வரலாறு

நெய்வேலி ஸத்-ஸங்கத்தில் வாரியார் ஸ்வாமிகளின் உபன்யாசம். அன்று ஸ்வாமிகளுக்குக் கடும் ஜூரம். சொற்பொழிவை ஓரிரு நாட்களுக்கு ரத்து செய்துவிடலாமா என்று ஸத்-ஸங்கம் மணித்வீபம் கமிட்டி தலைவர் சந்திரசேகரன் கேட்டார். ( அடியேனின் ‘பழைய கணக்கு’ நூலில் ‘தரிசனம்’ கதையில் வரும் டி.ஆர்.சி. மாமா இவரே) வாரியார் ஒப்புக்கொள்ளவில்லை. ‘முடிந்தவரை சொல்கிறேன். முருகன் பார்த்துக்கொள்வான்’ என்று, அன்று மாலை உபன்யாசம் நடந்தது.
அன்றிரவு ஸ்வாமிகளுக்குக் கடும் காய்ச்சல். விடியற்காலை 2 மணி சுமாருக்கு, பல காலிகளை உள்ளடக்கிய தி.க.கும்பல் ஸத்-ஸங்கம் மணித்வீபம் வீட்டில் ஜூரத்துடன் உறங்கிக்கொண்டிருந்த வாரியார் ஸ்வாமிகளை, வீடு புகுந்து தாக்கி, அவர் வழிபடும் லிங்கம், மற்றும் அவர் கழுத்தில் இருந்த லிங்கம் இரண்டையும் கீழே போட்டுத் தாக்கி அவமதித்தனர்.
தாக்குதலினால் மேலும் உடல் உபாதைக்கு உள்ளானார் ஸ்வாமிகள்.
கூச்சல் கேட்டு பிளாக்-2ல் இருந்து, அக்கம் பக்கம் வீட்டு மக்கள் ஓடி வர, கும்பல் கலைந்தது. சுமார் 20 ஊழியர்கள் போலீசில் புகார் பதிந்தனர் ( என் தந்தையார் உட்பட).
கடலூரில் இருந்து கலெக்டர் வந்திருந்தார் என்று என் தந்தையார் தெரிவிக்கிறார்.
ஸ்வாமிகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நெய்வேலி நிறுவனத்தின் சைனிக் பிரிவினர் காவல் இருந்தனர்.
தன் வாழ் நாளின் இறுதி வரை ஸத்-ஸங்கம் மணித்வீபத்திற்கு அவர் எழுந்தருளவே இல்லை. ஆனால் பல முறை ஸத்-ஸங்கம் தபோவனம் வந்தார். சிறுவனாக அவரது சொற்பொழிவுகளை முதல் வரிசையில் இருந்து கேட்டுள்ளேன். தேரழுந்தூர் கம்பன் விழாவிற்கும் வந்திருந்தார். புலவர் கிரன். ஸ்வாமிகள் மற்றும் என் பெரியப்பா முதலானோர் பங்குபெற்ற கம்ப ராமாயணப் பட்டிமன்றங்கள் தற்போதும் நினைவில் உள்ளன.
தாக்குதலுக்குப் பல ஆண்டுகள் கழித்து வாரியார் ஸ்வாமிகளிடம் ஒரு பெண்மணி ‘என் கணவருக்கு சிறுநீர் பிரிவதில் பிரச்னை உள்ளது. காப்பாற்றுங்கள்’ என்று வேண்ட, ‘நீ யாரம்மா?’ என்ற ஸ்வாமிகளிடம் கண்ணீர் விட்டபடி அந்தப் பெண்மணி ‘தங்களைத் தாக்கிய கூட்டத்தில் முக்கிய பங்காளி என் கணவரே’ என்ற அழுதார். ‘முருகா’என்று வேண்டியபடி ஸ்வாமிகள் விபூதிப் பிரசாதம் அளிக்க, அதை சுத்தமான நீரில் கலந்து உட்கொண்ட குற்றவாளிக்குக் குணமானது என்று அறிந்தோம். வாரியார் ஸ்வாமிகளும் தனது சுயசரிதையில் இவற்றைச் சுட்டியுள்ளார்.
ஆக, வாரியார்க்கு நடந்தது இது தான்.
வாழ்நாளின் இறுதி முச்சு வரை, தமிழையும், முருகப்பெருமானையும் மட்டுமே பேசி வந்த ஆன்மீகச் செம்மல் வாரியார் ஸ்வாமிகளை, தமிழை வாழ வைத்ததாகச் சொல்லிக் கொள்ளும் திக சமூக விரோதக் கும்பல்கள் நடத்திய விதம் இது தான்.

https://twtext.com/article/1299741402981490688

வாரியாரின் பயோ முன்னமே எழுதியதால் சங்கம் நேராக தலைப்புக்குள் செல்கிறது.

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை சூட்டினார்.
வாரியாரால் வீழ்ந்த திமுக:-வாரியாரின் பயோ முன்னமே எழுதியதால் சங்கம் நேராக தலைப்புக்குள் செல்கிறது.இசை மற்றும் புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை சூட்டினார்.
"கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும்,
"வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள்.

தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார்
செல்கிறார்.
"கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும்,"வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள்.தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் செல்கிறார்.
சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக்கொண்டு தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே என்று வருத்தப்பட்டனர்.

வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர் மகிழ்ந்து போனார்கள்.
அப்படித்தான் தனது பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கினார் வாரியார்,

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
அப்படித்தான் தனது பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கினார் வாரியார்,தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.அப்படித்தான் தனது பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கினார் வாரியார்,தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான்

இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும்
எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும்
சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார்

பண்டைய ஞானிகள் ரிஷிகள் வரிசையின் மீட்சியாக நம்மிடம் வாழ்ந்த மகான் வாரியார் சாமிகள் முருகனின் ஏழாம் நட்சத்திரம் அவர்
ஆறுமுகத்தானின் ஏழாம் முகம் அவர்
நடமாடிய ஏழாம் படை வீடு அவர்.
முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர், நக்கீரர், குமரகுருபரர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை
ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.
முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர், நக்கீரர், குமரகுருபரர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லைஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர், நக்கீரர், குமரகுருபரர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லைஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.
முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர், நக்கீரர், குமரகுருபரர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லைஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர், நக்கீரர், குமரகுருபரர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லைஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.
1944ல் பெரியபுராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என #திக ஆட்டம் போட்ட காலம் தமிழ்நாட்டில் நாத்திக அலை சுனாமியாய் பொங்கிய காலம் #திககூட்டம் ஒரு மதவாதியை விடாமல் கரித்து கொட்டி கருப்பு சட்டை கொடியுமாக வலம் வந்தகாலம் தனி ஒரு மகானாக அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார் வாரியார்
“நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது” என பொதுவாக சொன்னார் வாரியார். அதை சவாலாக ஏற்று கொண்ட #திக தரப்பு பொங்கி எழுந்தது,

அண்ணா “கீலாசேபம்” என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார்.

பெரியார் விடுதலையில் தலையங்கம் எழுதினார்.
‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி
தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.

வாரியாருக்கு எதிரான நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார் அண்ணாவுக்கும் கிருபானந்தவாரிக்கும் எழுத்துபோர் நடந்தது தீவிரமாகவும் நடந்தது வாரியாரின் தாக்குதல் முன் அண்ணா பதுங்கினார்
அதே நேரம் பெரியார் மகள் மணியம்மையுடன் திருமணம் என மனக்கசப்பு வந்ததால் தனது நிலையை மாற்றினார் அண்ணா.

வாரியார் அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார்.

திமுக vs வாரியார் மோதல் வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்க வக்கு திரணி இல்லாமல்,
அதே நேரம் பெரியார் மகள் மணியம்மையுடன் திருமணம் என மனக்கசப்பு வந்ததால் தனது நிலையை மாற்றினார் அண்ணா.வாரியார் அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார்.திமுக vs வாரியார் மோதல் வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்க வக்கு திரணி இல்லாமல்,
தன் பத்திரிக்கை கும்பலுடன் சேர்ந்து
எழுதி தாக்கி கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக கருணாநிதியே
‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்கள் நகர்ந்தது 1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார் ,
அப்பொழுது அண்ணாவுக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார் .

அப்போது ஒரு கூட்டத்தில், பேசும் போது மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால்
அப்பொழுது அண்ணாவுக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார்.அந்த சமயத்தில் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார் . அப்போது ஒரு கூட்டத்தில், பேசும் போது மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால்
ஆனானப்பட்ட மில்லர் ஆலும் அவனை வெற்றி கொள்ள முடியாது (கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது) என்றார் தமக்கே உரிய பாணியில்,

அவ்வளவு தான் அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர்கள்.
தொடர்ச்சியாக வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

மக்கள் பாதுகாப்பில் காவல்துறை அவரை பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்கப்பட்டார் வாரியார்

காயமின்றி தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌ அவர் பூஜை அறையில் புகுந்து உடைத்தார்கள்.
விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையெல்லொம் உடைத்தார்கள் ஆனால் அன்று ஊடகம் என்பது செய்திதாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கபட்டது.

வாரியார் தாக்கப்பட்டபோது கருணாநிதி அண்ணா மீது தமிழக மக்கள் கொண்ட அன்பினை காட்டுகின்றது என்று தாக்குதலை நியாயப்படுத்தினார்
அதை செய்தது திமுக அரசு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல‌ வாரியார் தாக்கபடும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்து கொண்டிருந்த பெயர் திராவிட பகுத்தறிவு.

வாரியார் தாக்கப்பட்ட செய்தி சட்டமன்றத்தில் எதிரொலித்தது.
வாரியாரைத் தாக்கியது தவறு என்று ஆவேசமாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் கொறடாவான சட்டமன்ற உறுப்பினர் விநாயகம். அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் வாரியார் பேசியது தவறுதானே என்று எதிர்க்கேள்வி எழுப்பினர் திமுகவினர்

ராஜாஜி மனம் வருந்தினார், தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர்
முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரிஅனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள் ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.

நிலமை எல்லை மீறி சென்றதை உணர்ந்த கில்லாடி கருணாநிதி திட்டம் போட்டர்
முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரிஅனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள் ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.நிலமை எல்லை மீறி சென்றதை உணர்ந்த கில்லாடி கருணாநிதி திட்டம் போட்டர்
அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கியிருந்த எம்.ஜி.ஆரை சரியாக பழிவாங்கினார்

ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்

வாரியாரைத் தாக்கியது மோசமான காரியம். அந்தப் பெரியவரின் மனம் புண்பட்டிருக்கும். அவரைச் சமாதானம் செய்யும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும்
என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டு பேசினார் எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி.

எம்.ஜி.ஆர் அவர்கள் தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்தார்.
என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டு பேசினார் எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி.எம்.ஜி.ஆர் அவர்கள் தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்தார்.என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டு பேசினார் எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி.எம்.ஜி.ஆர் அவர்கள் தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்தார்.
அப்பொழுது உண்மையினை விளக்கினார் எம்.ஜி.ஆர் பொன்மனச் செம்மல்’ என்னும் பட்டத்தைத் கொடுத்தார் அவரை வாழ்த்தி அனுப்பினார் கிருபானந்த வாரியார்.

வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக‌ர் அவர் தான் அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் எம்.ஜி.ஆர்.
அப்பொழுது உண்மையினை விளக்கினார் எம்.ஜி.ஆர் பொன்மனச் செம்மல்’ என்னும் பட்டத்தைத் கொடுத்தார் அவரை வாழ்த்தி அனுப்பினார் கிருபானந்த வாரியார்.வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக‌ர் அவர் தான் அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் எம்.ஜி.ஆர்.
அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது

வாரியாரால் ஆசீர்வதிக்கபடும் காட்சியே எம்.ஜி.ஆர்க்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது பொன்மன செம்மல் என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே அடையாளமாகி மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது
சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு எம்.ஜி.ஆர் மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது அத்தோடு போலி நாத்திக அடையாளம் ஒழிய ஆரம்பித்தது
அதன்பின் அம்மா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார் வாரியாருடன் மோதியதில் திமுகவின் அழிவு தொடங்கிற்று,
முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த அரக்க கூட்டத்தை சரித்து போட்டார்
வாரியார் தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை முருகபெருமானின் அடி அப்படி இருந்தது வரலாற்றின் மிக பெரிய சான்று ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட வரலாறு
அது அந்த தோல்விதான் கந்த சஷ்டி கவசம் வரை #திருட்டு_திமுக வின் முதுகில் சாத்தி கொண்டிருக்கின்றது, இன்னும் சாத்தும் இதெல்லாம் முருகபெருமானின் விளையாட்டு தன் கடைசி மூச்சு வரை திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் வாரியார்.
சாந்தமான முகம் பார்த்தால் வணங்கதக்க தோற்றம், அமைதியான மொழி, அழகு தமிழ், வாய்திறந்தால் எம்பெருமான் என தொடங்கும் அந்த கீர்த்தி எல்லாம் இனி யாருக்கும் வாய்க்காதவை எந்த வாதத்திலும் அவரை வெல்ல முடியாது எந்த சபையிலும் அவர் தோற்றதுமில்லை,

சங்க காலத்திலிருந்து வந்த ஆழ்வார்கள், புலவர்கள் வரிசையில் நாம் கண்ட மாபெரும் மனிதர் வாரியார் முருகபெருமான் அவர் நாவில் இருந்து தமிழ் கொடுத்தான் என்பதை பல இடங்களில் காண முடிந்தது.

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் கண்ணில் ஒற்ற கூடிய அழகு தமிழ் அது, பண்டைய தமிழ் முருக அடியார்கள் எப்படி இருந்தார்கள்?
எப்படி எழுதினார்கள்? எப்படி போதித்தார்கள்?என்பதை அவராலே தமிழகம் கண்டு கொண்டது ஆனால் தமிழ் என்பது தமிழக நாத்திகர்களின் சொத்து அவர்கள் வளர்த்ததே தமிழ் எனும் ஒருவித குருட்டு நம்பிக்கையில் ஆன்மீகவாதியான வாரியாரின் அழகு தமிழ் மறைக்கபட்டாலும் அது சூரியன் போல் மீண்டெழுந்து ஒளிவீசும்.
வாரியார் சுவாமிகள், சித்தியடையும் வரை பூரண நலத்துடன் விளங்கி வெளிநாடு சென்று சொற்பொழிவு ஆற்றிவிட்டு திரும்புகையில் விண்ணில் பறந்த விமானத்தில் அப்படியே முருகன் அவரது ஆன்மாவை அழைத்துக்கொண்டான்.
ஆனால் தாக்கியவர்கள் கதி நடை பிணமாய் தொண்டையில் ஓட்டை போட்டு மூத்திர சட்டியை சுமந்து ஆறடி நிலத்துக்கு கூட பிச்சை எடுத்து நரகத்தை இங்கேயே ட்ரைலர் பார்த்து விட்டு நோயோடு போராடி நொந்து செத்தார்கள்,

இந்துக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த மகான் திருமுருக கிருபானந்த வாரியார்.
வாரியார் சுவாமிகள் யாரையும் எதிரியாக நினைத்ததில்லை அவரை எதிர்த்து பேசியவர்கள் அழிந்து போனார்கள் என்பது கண்முன்னே நடந்த வரலாற்று,
அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால்தலையை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்தது.
சிங்கபுரி நடராஐர் சன்னதி பிரகாரத்தில் வடகிழக்கே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி திருமேனி நிருவப்பட்டுள்ளது.
அருள்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள்
வாழ்க வளமுடன் 🙏#SSRThreads
வாழ்க வாரியார் புகழ் ஓங்குக முருகன் அருள்

No comments:

Post a Comment