Wednesday, February 18, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போலியான கல்விச்சான்று கொடுத்து ஊழியர்கள்

 இந்து சமய அறநிலையத்துறை..

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் போலியான கல்விச்சான்று கொடுத்து ஊழியர்கள் பணியில் சேர்ந்ததாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், குற்றச்சாட்டிற்கு உள்ளான ஊழியர்களை பணி ஓய்வில் அனுமதித்திருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை..
படித்து வேலையில்லாமல் லட்சக்கணக்கில் இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை ஊக்குவிப்பது போல, முறையாக விரைவாக விசாரிக்காமல் அவர்களை பணி ஓய்வில் அனுமதிக்கிறது.
அவ்வாறு பணி ஓய்விற்கு அனுமதித்தால் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.
போலியான கல்விச் சான்றிதழ் கொடுத்து வேலையில் அமர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது...
https://tamil.samayam.com/latest-news/madurai/meenakshi-amman-temple-many-employees-have-joined-using-fake-documents/articleshow/79677879.cms

மீனாட்சி அம்மன் கோயிலில் பெரும்பாலானவர்கள் போலி: களையெடுக்கும் பணி தீவிரம்!

Samayam Tamil

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்து பணியிலிருந்த மேலும் ஒரு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செல்போனை திருடிய மற்றொருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் பெரும்பாலானவர்கள் போலி: களையெடுக்கும் பணி தீவிரம்!
மீனாட்சி அம்மன் கோயிலில் பெரும்பாலானவர்கள் போலி: களையெடுக்கும் பணி தீவிரம்!(புகைப்படங்கள்- Samayam Tamil)
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் கல்விச் சான்றிதழ்களை போலியாகக் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாகப் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் காமாட்சி என்ற ஊழியர் போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோயிலில் பணிபுரியும் ஊழியர்களின் கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானதா? எனச் சரிபார்ப்பதற்காக அவரவர் பயின்ற கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் கோயிலில் சேவகராக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்ற ஊழியரின் சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் வியாழக்கிழமை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மீனாட்சி கோயில் வருமானம் என்னானு தெரியுமா?: கொரோனாவால் சரிவு!

இதற்கிடையே கோயிலில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் மாயமான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் கோயிலில் ஓதுவாராக பணிபுரியும் அம்ரிஷ் ராம் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அம்ரிஷ் ராமும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கோயிலில் பணிபுரியும் ஊழியர் சிலரின் கல்விச்சான்றிதழ்கள் சந்தேகம் ஏற்பட்ட தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதனை அனுப்பி வைத்து ஊழியர்கள் சிலரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப் பள்ளிகளில் ஆவணங்கள் கேட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

மாற்றுத் திறனாளிகளை தாக்கிய திமுக அரசு காவல் துறை -மார்க்சிஸ்ட் கண்டனம்

  மாற்றுத் திறனாளிகளை தாக்கியது மனித உரிமை மீறல்: காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் கோப்புப் படம் வெற்றி மயிலோன்   Updated on:  18 Feb 202...