Thursday, February 5, 2026

ஜெயலலிதா வரி பாக்கி செலுத்தா விட்டால் சொத்துகள் ஏலம் விடப் படும்: IT துறை

ஜெயலலிதா வரி பாக்கி செலுத்தா விட்டால் சொத்துகள் ஏலம் விடப் படும்: வருமான வரித் துறை  05 Feb 2026

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து, ரூ.20 கோடி செலுத்த வேண்டி உள்ளதாகவும், வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி, 13 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2026 ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கி 11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் 6 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாகக் கூறி, ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் வருமான வரித் துறை பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வரி பாக்கிக்காக, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே சில சொத்துகள் முடக்கப்பட்டன. வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பிப்ரவரி 18-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தகவல்

No comments:

Post a Comment

தமிழக தேர்தல் 2026= திமுக கூட்டணி பலமாந்தா? உண்மை என்ன?

 தமிழக தேர்தல் 2026= திமுக கூட்டணி பலமாந்தா? உண்மை என்ன?  2019 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி- 2,27,89,020 - 53.15%        2021 சட்ட மன்றத் ...