Sunday, January 17, 2021

முஸ்லிம்களுக்குள் ஜாதி வேற்றுமை ஜமாத்து சண்டை, இறந்தவர் பிணம் அடக்கம் அனுமதி இல்லை

  இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை-   கோதரத்துவம், அனைவரும் சமம் எல்லாமே கப்சா  

அறந்தாங்கியில்  ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் எழுந்த பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் ஏ.அஜ்மீர் அலி, ஞாயிற்றுக்கிழமை மாலை  இறந்துவிட்டார். இறப்புக்கு முன்பு அவரது உடலை  அமைப்பின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், அவரது உறவினர்கள் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அறந்தாங்கி தலைவரை அணுகி, அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, திங்கள்கிழமை அவர்களுக்கான மயானத்தில் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.  

தொடர்ந்து, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம், இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசம் ஏற்படாததால், அந்த அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.  இதனால் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.




 06 Feb 2019, 01:02:00 PM
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் இஸ்லாமியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முன்று நாட்கள் கழித்து உடல் அடக்கம் செய்யபட்டது.
                                
அறந்தாங்கியில் இஸ்ஸலாமியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அஜ்மீர் என்பவர் இறந்தது மூன்று நாள் கழித்து உடலை அடக்கம் செய்தனர்.

அறந்தாங்கி பகுதியில் சுன்னத் இஸ்ஸலாம், தவ்ஹீத் ஜமாத் என இரு பிரிவுகளாக உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று அஜ்மீர் என்பவர் இறந்து விட்டார் இவர் தவ்ஹீதுஜமாத் பிரிவை சேர்ந்தவர். சுன்னத்ஜமாத் பிரிவை சேர்ந்தவர்களிடம் தான் மையவாடி எனும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம் தங்களது கட்டுபாட்டில் வைத்துள்ளனர்.

                             
அதில் தவ்ஹீத் ஜமாத் பிரிவை சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்ய மாட்டார்கள். இச்சூழலில் அஜ்மீர் என்பவர் இறந்துவிட்டார் அறந்தாங்கி முஹைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் சுன்னத்ஐமாத்திடம் சென்று மையவாடி சாவியை கேட்ட பொழுது சாவியை தர மறுத்து விட்டார்கள்.

அறந்தாங்கி வருவாய் கோட்டச்சியர் தலைமையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சவார்த்தையில் பெரியபள்ளி வாசலுக்கு இறந்தவரின் உடலை கொண்டு வந்து சுன்னத்ஜமாத் முறைப்படி அடக்கம் செய்ய ஒத்துகொண்டனர். ஆனால் தவ்ஹீத் முறைப்படி தான் அடக்கம் செய்வோம் என கூறி தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மறுத்து விட்டு கோட்டாச்சியர் பேச்சுவார்த்தை தோல்வியானது. தவ்ஹீத்ஐமாத் அமைப்பினர் சென்னை உயர்நீதி மன்றகிளை மதுரையில் வழக்கு தொடர்ந்தனர். அறந்தாங்கி இஸ்ஸலாம் நிர்வாக தலைவர் கூறுகையில். இப்பிரச்சனையை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுன்னத் ஐமாத் மையவாடியில் அவர்கள் மட்டும் அடக்கம் செய்து கொள்ளாம் தவ்ஹீது ஐமாத் அமைப்பினர் தனியாக இடம் வாங்கி மையவாடி அமைத்து கொள்ளவும் என தீர்ப்பளித்தனர்.

மேலும் இந்ததீர்ப்பு தமிழ்நாடு சுன்னத் ஜமாத்தார்களுக்கு முன்னுதரணமாக திகழும் என கூறினார். இந்த தீர்ப்புக்கு பின் இறந்த அஜ்மீர் என்பவர் உடல் முன்று நாட்கள் கழித்து தவ்ஹீது ஜமாத் அமைப்பினர் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யபட்டது. இந்நிகழ்வினால் அறந்தாங்கி பகுதியின் இஸ்ஸலா மியனர் இடையே சலசலப்பு ஏற்பட்டது
பட்டியல் சமூகத்தை சேர்ந்த குடும்பத்திலிருந்து முஸ்லிமாக் மதம் மாறியவர்களை நவ முஸ்லிம் எனத் தீண்டாமை பார்த்து மற்ற முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்வதில்லை, தற்கொலை செய்து கொண்ட நூர்ஜஹான் என்ற கருப்பாயி பற்றிய வரலாற்று நாவல்
இந்துவாக இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது உட்பிரிவு குறிப்பிடப்பட வேண்டும் : பி.சி சான்றிதழ் கேட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவு.
2019-09-01@ 00:06:23Dkn_Tamil_News_2019_Aug27__1212274432182
சென்னை:  இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது இஸ்லாம் மதத்தின் உட்பிரிவு குறிப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கவில்லை என்றால் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சான்றிதழ் கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் ரில்வான். இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், 24 மனை தெலுங்கு செட்டி பிரிவை சேர்ந்தவர். இவரது மனைவி ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர். இந்நிலையில், ரில்வான் கடந்த 2012ல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். புதுப்பட்டினம் ஜமாத்தில் மதம் மாற்றத்திற்கான பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தனக்கும் மனைவி, குழந்தைகளுக்கும் இஸ்லாம் மதத்தில் லெப்பை பிரிவு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. பிறகு செங்கல்பட்டு ஆர்டிஓவிடம் முறையிட்டார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கும் தனது மனைவி, குழந்தைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சான்றிதழ் வழக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரில்வான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, இஸ்லாம் மதத்தில் லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. மதம் மாறும்போது உட்பிரிவை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட ஜமாத்தில் மதமாற்ற பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், மனுதாரர் அரசிதழில் தனது மதமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்ததில் லெப்பை என்ற உட்பிரிவை குறிப்பிடவில்லை. அதனால் அவர் முற்படுத்தப்பட்டோர் பிரிவாகவே கருதப்படுவார். பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க முடியாது என்று வாதிட்டார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இதேபோன்ற வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது சம்பந்தப்பட்ட நபர் இஸ்லாம் மதத்தில் தான் சேரும் உட்பிரிவை குறிப்பிட வேண்டும். மனுதாரர் தான் சேர்ந்த இஸ்லாம் மதத்தின் உடபிரிவை  குறிப்பிடவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

 



 



  

Cannot claim BC status on converting to marry man of another

Press Trust of India  |  religion Chennai 


https://www.business-standard.com/article/pti-stories/cannot-claim-bc-status-on-converting-to-marry-man-of-another-113020800436_1.html
The Madras High Court has said a woman by virtue of conversion to marry a person of another religion cannot claim Backward Class status of her husband. Justice K Chandru gave the ruling while dismissing a writ petition from one A Fathima who prayed for a direction to the Tamil Nadu Public Service Commission to treat her as belonging to Muslim Labbai community and to appoint her as an Assistant in government service.
 A Premavathy, belonging to the Sengunthar community, which is a Backward Class, converted to Islam to get married to Mohammed Asath, belonging to Labbai community, which is also Backward Class. After marriage, she changed her name to Fathima and applied for Assistant's post in government service. 
She was not selected as TNPSC refused to confer BC status on her. Meanwhile, she obtained a community certificate from the Deputy Tahsildar in Kanchipuram to the effect that she belonged to Muslim Labbai community. 
The judge said she could not claim her community as Muslim Labbai only because of her conversion into Islam and marriage to a Muslim as per Muslim rites. The community certificate was not valid as she did not belong to Muslim Labbai community.
The issue on whether the wife could become a member of her husband's caste by marriage, either inter-caste or inter religion, had been negatived by Supreme Court, the judge said. The petitioner's claim was based only upon marriage and not by birth, the judge said and dismissed the petition.

A backward class Hindu, who embraces Islam, can continue to claim Backward Class status for reservation; Madras HC Live Law News Network21 Jun 2015 9:

The Madras High Court has held in a recent judgment that a backward class (BC) Hindu, who embraces Islam, would continue to claim Backward Class statu

https://www.livelaw.in/a-backward-class-hindu-who-embraces-islam-can-continue-to-claim-backward-class-status-for-reservation-madras-hc/

ஈ.வெ.ரா - மைநாரிட்டி முஸ்லிம்கள் மலம் - ராமசாமி நாயக்கர் கருத்து

https://www.facebook.com/vedagiri.venkatraman/posts/2639176399446633

"எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால்- அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்."
உடனே இதை, பார்ப்பனரைத் தான் ஈ வே ரா சொல்கிறார். மற்றவர்களை இல்லை என்று நாம் நினைத்து விடுவோமோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டதோ என்னவோ, அடுத்து இன்னும் தெளிவாக சொல்கிறார்.
" இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லிம் ஆகியவர்களுக்கு தனிச்சலுகைகளை ஆட்சிகள் காட்டி வந்த காரணத்தால், நாடு வளர்ச்சியடையாமலும் மெஜாரிட்டி மக்கள் மனிதத்தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்"
இப்படி அவர் தெளிவாக சொல்லியும் கேட்காமல் போனால், என்ன நடக்கும் என்றும் அவரே எச்சரித்து இருக்கிறார்.
மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும் துரோகம் - பச்சைத் துரோகம் என்கின்ற குழந்தைகளைத்தான் ஈனும்; ஈன்று வருகிறது"
ஒரே போடாக போட்டு விட்டார்.இதையும் மீறி சிறுபான்மை மக்களுக்கு சலுகை செய்ய யாராவது முயன்றால், அவர்களை எப்படி அழைக்க வேண்டும்?
இதோ,
"நாட்டிலுள்ள யோக்கிய பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாய கேடான காரியங்களுக்கு, இப்படிபட்ட மைனாரிட்டிகளின் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணி்கிறார்கள்."
"இந்த துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூக துரோகிகளுக்கு பயன் பட்டு வாழக் காத்து கிடக்கிறார்கள்"
அதாவது இஸ்லாமியர், மற்றும் அவருக்கு சலுகை தருபவர்களை அயோக்கியர்கள், துரோகிகள் என்று தெளிவாக சொல்கிறார்.
இல்லை இல்லை.... அவர் இஸ்லாமியர் மீது பெரிய மரியாதை வைத்து இருக்கிறார். பார்ப்பனர் மட்டும் தான் அவர் எதிரி, என்று யாரும் எதிர் காலத்தில் சொல்லி விட கூடாதே என்ற எச்சரிக்கையில் அடுத்து இன்னும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
"பார்ப்பானுக்கு பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம்.அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப் பட்டு, மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது"
அதாவது பார்ப்பனர் கூட சாணிதானாம். இஸ்லாமியர் மலமாம்.
எவ்வளவு அழகான வார்த்தை பிரயோகம்?
முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.
"இவ்வளவும் எழுதப்பட்டதன் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும், அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு- நாட்டுப் பெரு வாரி மக்கள் சமுதாயத்துக்கும் கேடு என்பதை விளக்கவேயாகும்"
இவ்வளவு தெளிவாக "பகுத்தறிவு பகலவன்" ஆழமாக சிந்தித்து தெளிவாக எடுத்து கூறி இருப்பதை ஏற்கவோ, ஏற்காவிட்டால் கண்டிக்கவோ மனமில்லாமல் ஓடி ஒளிபவர்களை எப்படி அழைக்கலாம்?
பின் குறிப்புகள்
1) வழக்கம் போல பதில் சொல்ல தெரியாத பகூத்துகள் ஈ வே ரா சொன்னதை, நான் திரித்து எழுதி இருப்பதாக சொல்வதற்கு முன், முதல் பின்னூட்டத்தில் இருக்கும் புத்தக ஆதாரத்தை பார்த்து விட்டு, வேறு ஏதாவது யோசிக்கவும்.
2) பதில் சொல்ல இயலாத பகூத்துகள் வழக்கம் போல் பார்ப்பான், அரை பார்ப்பான் என்று ஏதாவது உளறி விட்டு போகலாம்.

2 comments:

  1. அது ஜாதி வேற்றுமை அல்ல சகோதரி அது கருத்து வேறுபாடுகள்.. இஸ்லாத்தின் பிரிவுகள் எல்லாம் ஜாதி வேற்றுமை அல்ல அது கருத்து வேறுபாடுகளே!
    உதாரணமாக நீங்கள் கூறிய தவ்ஹீது மற்றும் சுன்னத்து ஜமாஅத்தினர் இரு வேறு பட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் அல்ல சில குடும்பத்தில் தகப்பன் சுன்னத் ஜமாஅத்தாக இருக்க மகன் தவ்ஹீது கருத்துகளில் இருப்பார் இன்னும் தர்கா வாதிகள் ஷியாக்கள் என்று பல கருத்து வேறுபாடுகள் இஸ்லாத்தின் உண்டு...
    இவர்கள் யாவரும் வணங்குவது அல்லாஹ்வையே அனைவரும் முஹம்மது நபி அவர்களையே தீர்க்கதரிசி யாகவும் குர்ஆனை மட்டுமே வேகமாகவும் ஏற்கின்றனர்.. யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர்கள் என்றோ கூறுவதில்லை..

    பிரச்சினை என்னவெனில் தவ்ஹீது கொள்கையுடைய வர்கள் கொஞ்சம் ஸ்டிரிக்டானவர்கள் அவர்கள் நபிகள் நாயகம் காட்டித் தராத வகையில் இன்று சுன்னத்து ஜமாஅத்தினர் நன்மை என்று செய்து கொண்டிருக்கும் எந்த விஷயத்தையும் நபிகள் நாயகம் காட்டித் தராததை புதிதாக உருவாக்க எவனுக்கும் உரிமை இல்லை என்பார்கள்..
    அதுதான் பிரச்சினை!

    ReplyDelete
  2. உலகில் மனிதன் செய்யும் தொழிலால் பிரிவினைகள் வந்தது. உலக வாழ்விற்கு தான் படைத்த சட்டங்களை கதைகளை எல்லாம் கடவுள் கதைகள் என புனைந்தது போதே கடவுள் உருவாக்கியதே பிரிவு வர்ணம் என் எல்லா மதங்களும் கூறுகின்றன. நீங்கள் நம்பும் அரேபிய குர்ஆன் கதையை மட்டும் புனிதம் என்று சொல்லி நீங்கள் செய்யும் மழுப்பல் அறிவு சார் நடுநிலையாளர்கள் ஏற்க இயலாது

    ReplyDelete