Wednesday, October 1, 2025

சங்க இலக்கியத்தில் ராமாயண செய்திகள்- கொடூர அரக்கன் ராவணன்

பாட்டுத் தொகை நூல்கள் அகம் - புறம் எனக் காதல் மற்றும் வீரம் முக்கியப்படுத்தி இயற்றப்பட்டவை. அதில் புலவர் உவமையாக ஒரு விஷ்யத்தைக் கூறினார் எனில் அது மக்களுக்கு பரவலாக அறிந்துள்ள விஷயத்தை எடுத்து தன் கருப்பொர்ளைக் கூறினர். பண்டைத் தமிழர்கள் வாழ்க்கை, இறை நம்பிக்கை - வழிபாடு மெய்யியல் போன்ற விஷயங்களை சங்க இலக்கியம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. 

அவற்றில் ராமாயணச் செய்திகள் பற்றிக் காண்போம்.
புலவர்க்கு சோழ அரசன் தந்த தங்க நகைகளை தன் குழந்தைகள் மாற்றி அணிந்ததை அரக்கன் ராவணன் கடத்திச் சென்றபோது- சீதாப் பிராட்டி ராமபிரான் தேடி வரும்போது வழி காட்டத் தான் அணிந்த நகைகளை தூக்கிப் போட, அதை சுக்ரீவனோடு இருந்த வானரங்கள் மாற்றி அணிந்ததோடு பொருத்தி பாடினார் புலவர் 
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது. புறநானூறு_378
“அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே” -
புறநானூறு 378
கடும் போர்த்திறம் கொண்ட ராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை கொடூர அரக்கன் ராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டு கொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது என்று உவமை கூறுகிறார்.

சீதையை ராவணன் தூக்கிச் செல்லும் காட்சி பொமு.1ம் நூற்றாண்டு சுடுமண் சிற்பம்

A terracotta plaque with scene of abduction from the Ramayana, Chandraketugarh, 1st century BCE – 1st centuryCE

சோழ வேந்தன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி நாட்டை விரிவாக்கும் நோக்கத்தில் வஞ்சிப் பூச் சூடி, செருப்பாழி என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக் கொண்டான். அந்த வஞ்சிப் போரைப் புலவர் பாடினார். அது கேட்ட வேந்தன் புலவர்க்கு அவர் அறிந்திராத அரிய அணிகலன்களை வழங்கிச் சிறப்பித்தான். அதனைப் பார்த்த புலவரின் பெருஞ் சுற்றத்தார் விரலில் அணிய வேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில் அணியவேண்டியவற்றை விரலில் மாட்டிக் கொண்டனர்.
இடுப்பில் அணியவேண்டியவற்றைக் கழுத்தில் மாட்டிக் கொண்டனர். கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டியனவற்றை இடுப்பில் கட்டிக்கொண்டனர். கடும் போர்த்திறம் கொண்ட ராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை கொடூர அரக்கன் ராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டு கொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது என்று உவமை கூறுகிறார்.
பொருள்: போர்க்குணம் கொண்ட ராமன் உடன் வந்த அவன் மனைவி சீதையை, தன் வலிமை மிகுந்த கரங்களை கொண்ட அரக்கன் கவர்ந்து சென்றான் என #ஊன்பொதி_பசுங்குடையார் ராமாயண கதையை நமக்கு விளக்குகிறார் புறப்பாடலில். அன்றே இராவணனை அரக்கனாகத்தான் சுட்டியுள்ளனர்.

#கலித்தொகை - [பாடல் 38 வரிகள் 15]

|| இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிருதலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன்போல ||

பொருள்: இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன், உமையவளுடன் வீற்றிருந்தான். அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன், காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை, மலையின் கீழே புகுத்தி, அதை தூக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான். என அரக்கன் இராவணன், எம்பெருமான் வீற்றிருந்து அருளும் கைலாயத்தை அசைக்கக் கூட முடியவில்லை; ஆனால் தன் ஆணவத்தால் முயன்றான் என்பதை, கலித்தொகை சொல்கிறது.

 இராவண அனுக்கிரக மூர்த்தி; கலித்தொகை- 38 காட்டும் உவமை செழிப்பான நாட்டைக் காட்ட உவமையாக கூறப்பட்டு உள்ளது.
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5
இமய மலையை வில்லாக வளைத்த சிவபெருமான், ராமபிரான் முன்னோர் மோட்சத்திற்காக  கங்கை ஆறு பூமிக்கு  பாய தன் தலை மேல் ஏற்றதால் ஈரமான சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை அரக்கர் தலைவன் இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அம்மலையை எடுக்க முயல; முடியாமல் துன்புற்றான். அதுபோல ஒரு நிகழ்வு. வேங்கை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை. மலையின் குகைகளில் எதிரொலி கேட்கும்படி முழங்கியது. இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன் நீ. நாட! கேள்.  
ராமாயண உத்திர காண்டத்தில் இந்த கதை உண்டு. தன் கை சிக்கிய போது தசக்ரீவன் பெருத்த கூச்சல் எழுப்பியதால் ராவணன்( உயர் குரலோன்) எனப் பெயர் வந்தது
திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்- இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,
“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே” 
ராவணன் கைலாய மலை மீது தன் புஷ்பக விமான பரக்க இயலாமல் போக அங்கு இருந்த நந்தியிடம் காரணம் கேட்க சிவபெருமான் - உமை அம்மையோடு உள்ளதைக் கூற - ராவணன் கேலி செய்ய நந்தி குரங்குகளால் அழிவாய் எனச் சாபம் கொடுத்தார், ராவணன் கைலாயத்தையே தூக்க முயல அங்கு இருந்த உயிர்கள், குலுங உமை அம்மையும் கலங்க சிவபெருமான் தன் விரலால் அழுத்த - ராவணன் உண்மை உணர்ந்து வருந்து சிவபெருமானை வணங்கி சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடிட, சிவபெருமானிடம் தன் நித்திய வணக்கத்திற்கு ஆதம லிங்கம் தர - அதை எடுத்துச் செல்லும் வழியில் கோகர்ணத்தில் கீழே வைக்க அங்கேயே அந்த லிங்கம் உள்ளதாம்.
1. கம்போடியாவில் பந்தியாய் சிரே 10ம்  நூற்றாண்டு  சிவாலய சிற்பம்
2.ராவன அனுக்கிரக மூர்த்தி
3 எல்லொரா சிற்பம்
4.  திருவண்ணாமலை
5. ஹொய்சாளர் அளபேடு




(அரக்கன் ராவணன் தன்னைத் தேரில் தூக்கிச் சென்ற போது தேடி வரும் ராமர் வழி தெரிய தான் அணிந்த மாலைகளை வீசி எரிந்திட அந்த நகைகளை எங்கே அணிவது தெரியாமல் மாற்றி அணிந்தமையால் அக்கோவில் குரங்கணி அம்மன் கோவில் எனப்படும்)


பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் 
இராவண அனுக்கிரக மூர்த்தி /Ravananugraha-murti

 தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோயில் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்[1]. இத்தலம் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றென சிவபெருமான் திரிபுரம் எரித்த தலமாகக் கருதப்படுகிறது.

⚜️இலங்கை அரசனான இராவணன், தீவிர சிவபக்தன் ஆவார். இவர் தேரில் செல்லும் போது இமயம் எதிர்பட அதனை பெயர்க்க அசைத்தார். சிவபெருமானின் அருகில் இருந்த உமையம்மை, அஞ்சினாள்.



2. ‘வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே’
- கடுவன் மள்ளனார் (அகம் 70 - வரிகள் 13 முதல் 17 வரை)

உவமை: தோழி சொன்னாள், “ஆம் தலைவி. பாண்டியரின் தொல்முது கோடியான கடற்கரை ஊரில் பல விழுதுகளை உடைய ஆலமரம் ஒன்று இருந்தது. காலம் காலமாய் அதில் வாழ்ந்து வந்த பறவைகளின் அடங்காத கீச்சொலியால் அந்த ஊரே அமைதியின்றி இருந்தது. சீதையைத் தேடி அந்த ஊருக்கு வந்த போரில் வெற்றி கொள்ளும் பண்பினரான ராமன், தம் நண்பர்களுடன் கூடிச் சீதையைத் தேடும் வழிமுறைகளை ஆராய முயன்ற போது பறவைகளின் அடங்காத ஒலி இடையூறாய் விளைந்தது. பார்வையாலோ, இதழ் விரித்து எழுப்பிய ஓசையாலோ ராமர் அந்தப் பேரொலியை ஒரு நொடியில் அடங்கச் செய்தாராம். அதைப் போலத்தான் நம் பெற்றோர் உனக்கும் அவருக்கும் திருமணம் என்றதும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த ஊர் வாயும் அடக்கிவிட்டது”.
(கோடி = தனுஷ்கோடி - தொன் முது கோடி, கவுரியர் = பாண்டியர்).

(கிருஷ்ண-பலராமர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன்)
3. “இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல”
- கபிலர் / திணை - குறிஞ்சி
இமய மலையை வில்லாக்கி வளைத்தவர் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு
சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன் ராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான்.


அடுத்து தேவாரம் சொல்வதை பாருங்கள்👇

_____________

#அப்பர்தேவாரம்

|| அரக்க னார்தலை பத்து மழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே ||

இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.

#திருஞானசம்பந்தர்தேவாரம்

|| பெருக்குஎண்ணாத பேதைஅரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத் தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்துஏத்த
முருக்குண்ணாது ஓர் மொய்கதிர்வாள்தேர் முன்ஈந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே ||

பொருள்: அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய அரக்கன் இராவணன், கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று, விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில், அவனுக்கு அழிக்கமுடியாத,ஒளியினை உடையவாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற் றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.

இதிலும் சம்பந்தர் 'அறிவிலி, அரக்கன்' இராவணன் என்றே சொல்கிறார். சிவபெருமான் அவனுக்கு வழங்கிய சந்திரஹாசம் எனும் வாளினைத்தான் குறிக்கிறார்...!

மீண்டும் அப்பர் தேவாரம்👇

|| கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே ||

பொருள்: பொன்னும், வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஓடிவந்து, அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவ மில்லாதவனாய் நிலைபெற்று, எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான், விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான். எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின், மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.


மேற்கண்டபடி சைவ, தமிழ் சங்க இலக்கியங்களின் தடத்தின் வழியேயும் இராவணன் அரக்கனே. கயிலாயத்தை ஆணவத்தால் அசைக்கப் முற்பட்டு சிவனால் அழுத்தப்பட்டு அலறி வீழ்ந்தவன். இதுதான் அவனது பிம்பம்.



(ஹேலியோடோரஸ் தூண் (Heliodorus pillar) சாஞ்சிக்கு அருகில் விதிஷா நகரம்,
இத்தூண், இந்து சமயத்திற்கு மதம் மாறியவரும், சுங்கப் பேரரசில், இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவரும், கிருஷ்ண பக்தருமான ஹேலியோடோரஸ் (Heliodorus (votive erector) என்பவரால், பொமு 113இல் பகவான் கிருஷ்ணருக்காக நிறுவப்பட்டது. கிருஷ்ணர் கோயில் முன் அமைந்த இத்தூணின் உச்சியில் கருடச் சிற்பம் அமைந்துள்ளது.)4. திருப்பரங்குன்றத்து குகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஓவியக் கலைகளில் அகலிகை பற்றிய குறிப்பு:

“என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
இரதி காமன், இவள் இவன்’ எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
‘இந்திரன், பூசை: இவள் அகலிகை;
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது’ என்று உரைசெய்வோரும்”

திருப்பரங்குன்றத்து முருகப் பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்த ஓவிய மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்றும், வரையப்பட்டிருந்த ஓவியங்களில் காமன், ரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதம முனிவன், அவனைக் கண்ட இந்திரன் பூனையுருவங் கொண்டோடியது முதலிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன என்றும், அவற்றைக் கண்டவர் ‘இது என்ன, இது என்ன’ என்று அறிந்தவர்களைக் கேட்க, அவர்கள் இது இது இன்னின்ன ஓவியம் என்று விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் கூறுகிறார்:
-நப்பண்ணனார்

5. “ பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் ’’
பழமொழி நானூறு - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இலங்கை அரசன் ராவணனின் தம்பி வீடணன். இவன் ராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
6. சிலப்பதிகாரத்தில் திருமால் அவதாரங்களில் ராமரும் துதிக்கப்படுகின்றார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரமும் ராமனைக் கடவுளாகவே கூறுகிறது

“மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!”
- ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்,

7. “தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ” - ஊர்காண்காதை

என, கவுந்தியடிகள் ராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, ராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல; நெடுமொழி. அதாவது; நீண்ட லமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்

No comments:

Post a Comment

ஐ.எஸ்.,ஐ.எஸ்., ஆட்சேர்ப்பு செய்த கோவை அசாருதீன், ஷேக் ஹிதயதுல்லா( இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில்) 8 ஆண்டுகள் கடுங்காவல்

பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை; கோவையை சேர்ந்த இருவருக்கு 8 ஆண்டு சிறை நமது நிருபர்   UPDATED : செப் 30, 2025    https://www.dina...