Wednesday, February 11, 2026

கேன்சர் நோய் - பைபிள் ஏசப்பா காபாற்றவில்லை - பெரம்​பூரில் சகாய செபஸ்​டின் குடும்பத்தோடு தற்கொலை

புற்றுநோய் பாதிப்பால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: பெரம்பூரில் தந்தை, மகன் பரிதாப உயிரிழப்பு

தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை

சென்னை: பெரம்​பூரில் தனி​யார் ஊழியர் குடும்​பத்​துடன் தற்கொலைக்கு முயன்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தந்​தை​யும், 4 வயது மகனும் உயி​ரிழந்த நிலை​யில், தாயும் மகளும் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். 

சென்னை பெரம்​பூர் சங்கர மடம் பகு​தி​யில் வசித்து வந்​தவர் சகாய செபஸ்​டின் (43). கடலூர் மாவட்​டம் விருத்​தாசலத்​தைச் சேர்ந்த இவர், மாதவரத்​தில் உள்ள தனி​யார் நிறுவன கிடங்​கில் கணக்​காள​ராகப் பணியாற்றி வந்​தார்.

இவரது மனைவி ரெக்சி பியூலா (38). மகள் இவாஞ்​சலின் அல்​வினா (8), மகன் யுவான் அண்டோ (4). சில மாதங்​களுக்கு முன்பு பியூலா​வுக்கு புற்​று​நோய் இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

இதனால், செபஸ்​டின் கடந்த சில நாட்​களாக கடும் மன உளைச்​சலில் இருந்​துள்​ளார். நேற்று முன்​தினம் மாலை அருகே உள்ள பேக்​கரி​யில் இருந்து கேக் வாங்​கிய செபஸ்​டின், வீட்​டில் யாருக்​கும் தெரி​யாமல் அதில் பூச்​சிக்​கொல்லி மருந்​தைக் கலந்​து, அதன் மேல் ‘ஹேப்பி ஃபேமிலி டே’ என எழு​தி​வைத்து குடும்​பத்​தினருடன் கேக் வெட்டி சாப்​பிட்​டுள்​ளார்.

சிறிது நேரத்​தில், மகன் யுவான் அண்டோ மயங்கி விழுந்து உயி​ரிழந்​தார். மனைவி பியூலா​வும், மகள் இவாஞ்​சலினும் அடுத்​தடுத்து மயங்கி விழுந்​தனர். அவர்​களும் உயி​ரிழந்​து​விட்​ட​தாக நினைத்த செபஸ்​டின், மின்​விசிறி​யில் தூக்​கிட்டு தற்கொலை செய்து கொண்​டார்.

நேற்று காலை 8 மணி அளவில் மயக்​கம் தெளிந்த சிறுமி, காவல் கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். செம்​பி​யம் காவல் ஆய்​வாளர் சிரஞ்​சீவி தலை​மையி​லான போலீ​ஸார் விரைந்து வந்​து, இருவரையும் மீட்டு பெரி​யார் நகர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர்.

பியூலா உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார். இவாஞ்​சலின் அபாய நிலை​யைத் தாண்​டி​யுள்​ள​தாக மருத்​து​வர்​கள் கூறினர். செம்​பி​யம் போலீ​ஸார் தொடர்ந்​து விசா​ரித்து வருகின்​றனர்​.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


 

No comments:

Post a Comment