Saturday, January 17, 2026

திருவள்ளுவா் தினம் -வைகாசி அனுஷம்; 1963 ஏப்ரல் 14- திருவள்ளுவா் மன்ற மாநாட்டில் M.பக்தவத்சலம் , C.N.அண்ணாதுரை

 திருவள்ளுவா் தினம் -வைகாசி அனுஷம் என மாற்ற வேண்டும்

1963 ஏப்ரல் 14-இல் சென்னை ராயப்பேட்டை திருவள்ளுவா் மன்றம் நடத்திய மாநாட்டில் அன்றைய நிதி அமைச்சா் பக்தவத்சலம், திமுக தலைவா் அண்ணாதுரை கலந்து கொண்டனா். மாநாட்டில் ஆண்டு தோறும் திருவள்ளுவா் திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றினாா்கள்.

வைகாசி அனுஷ நட்சத்திரத்தின் தேதி, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் என்பதால், 1966-இல் ஜூன் 2-ஆம் தேதியை திருவள்ளுவா் திருநாளாகக் கொண்டாடலாம் என முடிவானது. பக்தவத்சலம் முதலமைச்சா் ஆன பிறகு 1966-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் நாளை ‘வள்ளுவா் நாளாக’ கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்ட அரசாணை கீழே.

1971-இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கி.ஆ.பெ. விசுவநாதம் எந்த ஆதாரமும் இல்லாமல் தை 1- திருவள்ளுவா் தினம் விடுமுறை என வேண்டுகோள் இணங்க திருவள்ளுவா் திருநாளை வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் இருந்து மாற்றி, தை 2-ஆம் நாளை (மாட்டுப் பொங்கல்) திருவள்ளுவா் தினமாக அறிவித்தாா்.
இந்திய ஞான மரபில் சூரியன் மகர நட்சத்திரத்தில் வரும் தை-1 பொங்கல்; தை-2 மாட்டுப் பொங்கல் என்றும், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் தினம் என மாற்ற வேண்டும்
படம் உதவி கல்வெட்டு பேரறிஞர் திரு.இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

TVK pulls 3 ADMK MLAs, reign and join