Monday, February 16, 2026

பொன்னியின் செல்வன் - "வீரா ராஜ வீரா " பாடல் சிவஸ்துதியின் திருட்டு தழுவலே - AR.ரஹ்மான் 2 கோடி தரவேண்டும் Supreme Court

பொன்னியின் செல்வன் படத்திற்காக ரஹ்மான் இசையில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டான பாடலான "வீரா ராஜ வீரா " பாடல் தனது முன்னோர்கள் இசையமைத்த பாடல் என டாகர் குடும்பம் வழக்கு போட்டது. 
 இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வருகிறது. 1970 களில் கம்போஸ் செய்யப்பட்ட இந்த பாடலை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் ரஹ்மான், மேலும் அதற்கு உரிய அனுமதியோ, உரிய அங்கீகாரமோ கொடுக்கவில்லை என வழக்கு போடப்பட்டு, வீரா ராஜ வீரா பாடல் காப்பிரைட் வயலேஷன் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் டெல்லி டிவிஷன் பென்ச் அந்த தீர்ப்புக்கு தடை விதித்தது.

அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு வந்த போது, நீதிமன்றம் டெல்லி ஹைகோர்ட்டில் தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது. 2 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சொன்னதுடன், அந்த பாடலுக்கு உரிய அங்கீகாரத்தை டாகர் சகோதரர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ரஹ்மானுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்திருக்கலாம். இதற்காக பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ரஹ்மானுக்கு போன் செய்த டாகர் தரப்பை காக்க வைத்ததாகவும், அதன் பிறகும் வெறும் 30 நொடிகள் மட்டுமே பேசியதாகவும், இதனால் ஏற்பட்ட ஈகோ தான் இந்த வழக்கிற்கு காரணம் என்றும் செய்திகள் சொல்கிறன்றன.



No comments:

Post a Comment

Madyapradesh BJP CM family Real Estate firms have bought lands says Indian Express

https://x.com/IndianExpress/status/2069360027379347911?s=20 𝐄𝐱𝐩𝐫𝐞𝐬𝐬𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐢𝐠𝐚𝐭𝐢𝐨𝐧 | Our investigation found that Madhya ...