Sunday, February 15, 2026

பரிபாடல் அறிமுகமும்- காலமும்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்பே சங்க இலக்கியம். எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல், கலித்தொகை நூல்களில் பல புதிய தமிழ் சொற்கள், புதிய இலக்கண மாற்றங்கள், யாப்பு வளர்ச்சி என முந்தைய இலக்கியங்களில் இருந்து 200 ஆண்டுகள் பின்பானது 

பரிபாடல் & கலித்தொகை இரண்டும் எட்டுத்தொகை நூல் பட்டியலில் இருப்பினும் மொழிநிலை, புதிய சொற்கள், புராண செய்திகள், பாடல் கரு என மற்றவற்றோடு பெரிதும் மாறுபட்ட பிற்காலத்தினது.
பரிபாடல் 11ம் பாட்டில் வானியல் குறிப்புகளை ஆராய்ந்த பேரறிஞர். L.D.சாமிக்கண்ணு பிள்ளை பொஆ.634ம் ஆண்டு ஜுன் 17 பௌர்ணமி அன்றைய கிரகணம் போது வந்த புதுப்புனல் பற்றியது எனக் கணித்தார். எனவே பரிபாடல் 7ம் நூற்றாண்டு பிற்பகுதி என ஆகும். வடமொழி புராணச் செய்திகள் நிறைய கூறப்பட்டுள்ளது. அத்வைத தத்துவக் கருத்துக்கள் வந்துள்ளது
கலித்தொகை மொழிநிலை, யாப்பு நெகிழ்ச்சி அதற்கு பின்னர் என்றும் திருக்குறள் அதற்குப் பின்பு என்பது உறுதி ஆகும்
கலித்தொகை 1925ம் ஆண்டு பதிப்பு சங்கம் மருவிய காலம் என்றே உள் அட்டையிலே உள்ளது




சங்க காலத்தில் உலகம் வியக்கும் வானியல் அறிவு நிரூபிக்கும் பரிபாடல்

நல்லந்துவனார் பாடிய பரிபாடல் 11ம் பாட்டுடைப் பொருளாக முருகன், திருமால், வைகை ஆகியவற்றை வைத்துப் பல புலவர்கள் பாடியது நமக்குத் தெரியும். அந்த வகையில் இது வையையைப் போற்றும் பாடல். இந்தப் பாடலில் இந்திய வானியல், வானிலை இயல், சோதிடத்தின் சில கூறுகள் என அனைத்தும் கலந்துவருவதைக் காணலாம். 


விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,

எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்

உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்

புரை கெழு சையம் பொழி மழை தாழ,

நெரிதரூஉம் வையைப் புனல்.



விரிகதிர் மதியம், அதாவது நிலவு ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கிற நாளில் - பௌர்ணமியில்

எரி - கார்த்திகை நட்சத்திரம், அந்த நட்சத்திரத்தை தன்னுள்ளே கொண்ட ரிஷப ராசி

சடை - சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட நட்சத்திரமான திருவாதிரையை தன்னுள்ளே கொண்ட மிதுன  ராசி

வேழம் - யானைக்கு உரிய நாளான பரணியை தன்னுள்ளே கொண்ட மேஷ  ராசி ஆகிய மூன்று  ராசிகளைக் கொண்டு

அந்த மூன்று  ராசிகளில் தலா ஒன்பது நட்சத்திரங்கள் வீதம் இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் பன்னிரண்டு ராசி மண்டலங்களையும் கொண்ட வானில்

வெள்ளி ஏற்றியல் - தனக்குரிய ரிஷப ராசியை அடைய

வருடை - மேஷம், மேஷ ராசியை படிமகனான செவ்வாய் அடைய

புந்தி - புதன் மிதுன ராசியில் நிற்க

புலர் விடியல் - சூரியன் தன்னுடைய ராசியான சிம்மத்தின் மேலுள்ள கடகத்தில் இருக்க

அந்தணன் - வியாழன் பங்கு - சனியின் துணை இல்லங்களான மகர, கும்பத்தின் அப்பால் உள்ள மீனத்தை அடைய 

யமனைப் போன்ற சனி மகரத்தில் இருக்க பாம்புக்கிரகங்களில் ஒன்றான ராகு நிலைவை மறைக்க - அதாவது அன்று சந்திரக் கிரகணம்                                     அப்படிப்பட்ட ஒரு நாளில் பொதியில் முனிவன் - அகத்தியனுக்கு உரிய நட்சத்திரமான அகத்திய நட்சத்திரம் (Canopus) மிதுன ராசியை அடைந்தது

அன்று வேனில் காலம் தந்த வெம்மை அகல சைய மலையில் பருவ மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழையின் காரணமாக வையையில் புதுப்புனல் வந்தது.

ஒரே பாடலில் எவ்வளவு செய்திகளைத் தந்திருக்கிறார் பாருங்கள். முதலில் பால்வீதி என்று இன்று அழைக்கப்படும் நமது வான்வெளியை மூன்று தெருக்களாகச் சமைத்து அதில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கொண்டு பன்னிரண்டு ராசி மண்டலங்களைத் தொகுத்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து கோள்களின் நிலையை விளக்குகிறார் நல்லந்துவனார். 

கோள்களின் தலைவனான சூரியன் கடக ராசியில் இருக்கிறான். இதைக்கொண்டு அது ஆடி மாதம் என்று தெரிந்து கொள்ளலாம். அதுனுடனே பயணிக்கும் புதன் மிதுன ராசியிலும், சுக்கிரன் இடபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், வியாழன் மீனத்திலும், சனி மகரத்திலும் இருக்கிறார்கள். ஆக, சூரியனைத் தவிர மற்ற எல்லாக் கிரகங்களும் அதன் சொந்த வீடுகளிலேயே இருக்கின்றன (அதனால்தானோ என்னவோ புலவர் ராசிகளுக்கு இருக்கை என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்). சந்திரன் கடகத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில் இருக்கிறார். அதனால் தான் அன்று பௌர்ணமி. போதாக்குறைக்கு ராகு அதனை மறைப்பதால் அன்று சந்திரக் கிரகணம். 

தவிர அகத்திய நட்சத்திரம் மிதுனத்தில், அதாவது சூரிய உதயத்திற்குச் சற்று முன்னால் தென் திசையில் உதிக்கிறது. இன்றும் ஆடி மாதத்தன்று அகத்திய நட்சத்திரத்தைத் தென் திசையில் காணலாம். அப்படிப்பட்ட நாளில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியிருக்கிறது. அதனால் வையையிலும் புனல் வந்திருக்கிறது. 

L.D.சாமிக்கண்ணு பிள்ளை தன் Panchang And Horoscope நூலில் பரிபாடல் -11ம் பாடலில் உள்ள வானியல் தோற்றக் குறிப்புகள் பொஆ.634ம் ஆண்டு ஜுன்-17 நாளினைக் குறிக்கிறது என விளக்கம் கீழே.

நவீன விஞ்ஞான அல்மனாக் கூறுவதும் பஞ்சாங்கக் கணக்கோடு பொருந்துகிறது

2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ.  வாராந்தர நிகழ்சில்;  இந்திய விண்வெளி ஆய்வு மைய (ISRO) விஞ்ஞானி  நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார். இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.

பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். 




இராவண அனுக்கிரக மூர்த்தி; அரக்கர் தலைவன் 10 தலை இராவணன் கலித்தொகை.38 உவமை
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5
இமய மலையை வில்லாக வளைத்த சிவபெருமான், ராமபிரான் முன்னோர் மோட்சத்திற்காக கங்கை ஆறு பூமிக்கு பாய தன் தலை மேல் ஏற்றதால் ஈரமான சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்து இருந்தான். அரக்கர் தலைவன் 10 தலை இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அம்மலையை எடுக்க முயல; முடியாமல் துன்புற்றான். அதுபோல ஒரு நிகழ்வு. வேங்கை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை. மலையின் குகைகளில் எதிரொலி கேட்கும்படி முழங்கியது. இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன் நீ. நாட! கேள்.




No comments:

Post a Comment

சென்ட் & பாடி ஸ்ப்ரே - ஹராம், அரேபிய குரான் அல்லாஹ் தெய்வம் தண்டிப்பாராம்

வாசனை திரவியம் அணியும் பெண்கள் ஹராம் என்று இஸ்லாமிய அறிஞர் கூறுகிறார், ஏனென்றால் அவர்கள் வெளியே சென்று ஒரு ஆண் அதை மணத்தால், அது அவள் சட்டவி...