Thursday, June 19, 2014

தாவீது- எதிரி சவுல் மகன்களைக் கொலை செய்து நரபலி தந்தால் கர்த்தர் மழை தருவார்.

 பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை 
நாடு போருக்கு செல்ல,  போரில் ஈடுபடாதவன் மனைவி  பெத்சபாளை போகித்து பின்னர் அந்த வீரன் உரியாவைக் கொன்றவர் தாவீது 2சாமுவேல்11:1 -17

உபாகமம் 22:22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.

Photo: யாத்திராகமம் 28:42 அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.

- வசனம் இப்படி சொல்லியிருக்க தேவனுடைய பயங்கரம் விளங்கும் பெட்டிக்கு முன்பதாக பைபிளின் மதிப்பிற்குரிய தலைவனாகிய தாவீது நிர்வாண நடனம் ஆடியதுபோல சிலர் சித்தரிப்பது அவர்களுடைய அறிவீனத்தை மாத்திரமல்ல, அவர்களுடைய துணிகரத்தையும் காட்டுகிறது.அவர்கள் யாரோ மனிதனைக் குற்றப்படுத்த அல்லது இந்த சமுதாயத்தை சீர்திருத்துவதாக நினைத்துக்கொண்டு தங்கள் தேவனாகிய கர்த்தருக்கே அபகீர்த்தியை உண்டுபண்ணுகிறார்கள். இந்த படமானது ஆரோக்கிய கிறிஸ்தவத்துக்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் இது வேதப்புரட்டுகளை அரங்கேற்றுவோரின் முயற்சி என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் அறியட்டும்.

***ஆதிபாவத்தின் துக்கமே நிர்வாணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நிர்வாணமானது வேதம் முழுவதிலும் எந்த நிலையிலும் ஊக்குவிக்கப்படவில்லை.

**சித்திரத்தின் மூலத் தொடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் பின்வரும் வாசகம் சூழ்ச்சியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

/// Hey, if dancing in his birthday suit was good enough for King David… (2 Sam 6:14-22) /// 
தாவீது - வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன்.  தாவீது - தன் காரியங்களுக்கு கர்த்தரிடம் மன்னிப்பு பெற நடுத்தெருவில் பிற பெண்கள் முன் நிர்வாணமாக நடனமாடி கர்த்தரை மகிழ்வித்தார்.தன் சட்டத்தை நிறைவேற்ற முடியாத கர்த்தர்-பெரும் அறிவாளியை இந்த தம்பதிக்கு மகனாய் தந்தார்.
மத்தேயுவின் இயேசு, பெத்லகேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப், இந்த சாலமன் வரிசை. மத்தேயுவின் ஏசு, தாவீது சாலமன் வரிசையில்- ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறை.
லூக்காவின் இயேசு, நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப், வேறு நாத்தன் வரிசை. லூக்காவின் ஏசு, தாவீது நாத்தன் வரிசையில்- ஆபிரகாமிலிருந்து 57வது தலைமுறை.

1இராஜாக்கள்4:29 கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார். 

பைபிளே முரண்பாட்டின் முழு உருவம்

சவுலின் மரணம்

1சாமுவேல்31:பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்: பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுக்கிட்டு ஓடினர்: பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்த்தினார்.2 பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.3 சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது: வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.4 அப்பொழுது சவுல் தம் படைவீரர்களை தாங்குவோனை நோக்கி, இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு, என்றார். ஆனால் அவருடைய படைக்கலன் தாக்குவோன் மிகவும் அஞ்சியாதால் அதற்கு அவன் இசையவில்லை.எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். 5 சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்கு வோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான்.6 இவ்வாறு சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லோரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்.7 இஸ்ரயேல் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர் என்றும் சவுலும் அவர்தம் புதல்வர்களும் மடிந்தனர் என்றும் பள்ளத்தாக்கு அருகே யோனத்தானும் கிழக்கேயும் இருந்த இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டுவிட்டு ஓடினார். அதனால் பெலிஸ்தியர் வந்து அங்கே குடியேறினர்.

 சவுல் மரணத்தை மீண்டும் இதே கதாசிரியரின் இரண்டாவது புத்தகத்தில்

சவுல் மரணத்தை தாவீது அறிதல்-2சாமுவேல்1:சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்து திரும்புகையில் தாவீது சிக்லாவில் இரண்டு நாள் தங்கினார். 2 மூன்றாம் நாள், சவுலின் பாசறையிலிருந்து கிழிந்த ஆடைகளோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.3 நீ எங்கிருந்து வருகிறாய்? என்று தாவீது அவனை வினவ, நான் இஸ்ரயேல் பாசறையிலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று அவன் பதில் கூறினான்.4 என்ன நடந்தது? என்னிடம் சொல், என்று தாவீது கேட்க, அவன் வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்: அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்: சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துமடிந்துவிட்டனர் என்று கூறினான்.5 சவுலும் அவனுடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்? என்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.6 அதற்கு அந்த அளைஞன் நான், தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின் மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.7 அவர் பின்னால் திரும்பிய போது என்னை பார்த்து கூப்பிட்டார், இதோ இருக்கிறேன் என்று நான் கூறினேன்.8 யார் நீ? என்று அவர் என்னை வினவ, நான் ஓர் அமலேக்கியன் என்று பதிலளித்தான்.9 என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில் நான் மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால் என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுயிருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார்.10 நான் அவர் மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில் விழுந்த பின்பு அவர் பிழைக்கமாட்டார் என நான் அறிவேன். அவர் தலையிலிருந்த மகுடத்தையும் பையிலிருந்த காப்பையும் எடுத்துக் கொண்டு, உம்மிடம் வந்துள்ளேன் என்று கூறினார்.11தாவீது தம் ஆடைகளை பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.12 சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்லயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்க்ள.

அமலேக்கியனைக் கொல்ல தாவீது கட்டளை

13 தாவீது தமக்கு செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், நீ எங்கிருந்து வருகிறாய்? என்று மீண்டும் வினவ, நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன் என்று மறுமொழிக் கூறினான்.14 ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்? என்று தாவீது அவனைக் கேட்டார்.15 பின்பு தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டுபோ, அவனை வெட்டு என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.16 இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன் என்ற உன் வாயே எனக்கு சான்று சொல்லிவிட்டது என்று தாவீது அவனை நோக்கி கூறினார்.

 நாட்டில் பஞ்சம் வருகிறதாம் அதற்கு தீர்வு கர்த்தருக்கு சவுல் பேரன்கள் கொலையாம்

சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது.

2சாமுவேல்21:தாவீதின் வழிமரபினர் கொலை செய்யப்படல்

1 தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுள்ளத்தை நாடினார். கிபாயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன் மீதும் அவன் வீட்டார் மீதும் இரத்தப்பழி உள்ளது என்றார் ஆண்டவர்.2 அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரை சார்ந்தவர் அல்ல: அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவரை அழிக்க முயன்றார்.3 தாவீது கிபயோனியரிடம் உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவரின் உரிமைச் சொத்துக்கு ஆசிவழங்குமாறு நான் என்ன கழுவாய் செய்ய வேண்டும்? என்று கேட்டார்.4 கிபயோனிர் தாவீதிடம், சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை: இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்று நாங்கள் விருப்பவில்லை என்று கூறினார். தாவீது, நீங்கள் வீம்புவதை நான் செய்வேன் என்றார்.5கிபயோனியர் அரசரிடம், நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே ஒழிந்து போகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு.6 அவன் புதல்வருள் ஏழு பேர் எங்களிடம் ஒப்புவிக்கப்பட்டும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபயோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம் என்று கூறினர். அரசரும் அவர்களை ஒப்புவிக்கிறேன் என்றார்.7 ஆனால் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டு சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த பெரிபொசேத்தை அரசர் தப்பவிட்டார்.8 அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து,9 கிபயோனியர் கையில் அரசர் ஒப்படைத்தார். இவர்களை ஆண்டவர் முன்னிலையில் மலையில் கழுவேற்றினர். அந்த ஏழுபேரும் ஒன்றாக மடிந்தார்கள். அவர்கள் வாற்கோதுமை அறுவடை தொடங்கிய முதல் நாள்களிலே கொலையுண்டார்கள்.10 அப்போழுது அய்யாவின் மகன் ரிஸ்பா சாக்குத் துணியை எடுத்துக் கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள் முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியும்மட்டும் இருந்தாள்: பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனும11 சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.12 எனவே, தாவீது சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் யாபேசு கிவயாதின் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்தார். பெலிஸ்தியர் அவர்களை கில்போவாவில் வெட்டி வீழ்த்தி, பெத்சான் நகர முற்றத்தில் கழுவிலேற்றினர். அந்த முற்றத்திலிருந்துதான் யாபேசு கியாதின் ஆள்கள் எலும்பு13 சவுலின் எலும்புகளையும் யோனத்தானின் எலுக்புகளையும் அங்கிருந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர்.14 சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமின் நிலப்பகுதியான செலாவில் அவர்தம் தந்தை கீசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். அரசர் கட்டளையிட்டவாறே அனைத்தையும் செய்தனர். அதன் பின் நாட்டுக்காகச் செய்யப்பபட்ட வேண்டுதலைக் கடவுள் கேட்டார்.
சவுல் செய்த தவறிற்கு அவர் பேரன்களை நரபலியாய் தந்த உடன் கர்த்தர் பஞ்சத்தைப் போக்கினாராம்.

உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.


கர்த்தர் நாபலை கொலை செய்தார் - மனைவி அபிகாயில் தாவீதுக்கு

பழைய ஏற்பாடு எனும் எபிரேயப் புராணத்தின் மிக முக்கிய கதைப் பாத்திரம் தாவீது ராஜா.

 பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை 
தாவீது முதலில் நாட்டை பெஞ்சமின் ஜாதியைச் சேர்ந்த சவுல் ராஜா ஆண்டபோது, ஒரு எதிர் கும்பல் தலைவனாய் எழுந்து போராடியதாய் கதை. 

  

அந்த காலகட்டத்தில் மாகோன் என்னும் ஊரில் உள்ள கர்மேலில் நாபால் எனும் பணக்காரர் வாழ்ந்து வந்தார்.

தாவீதும் அபிகாயிலும்

1சாமுவேல்25:1...தாவீது புறப்பட்டு பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.2 கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம் மனிதன் செல்வம் மிக்கவன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.3 அம் மனிதன் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்,வன் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலோபியன்.4 நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்ததிப்பதற்காகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார்.5 தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து. நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்கு சமாதான வாழ்த்து கூறுங்கள்.6 அவனை நோக்கி, உமக்கும், எம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!7 ஆடுகள் உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் என்று கேள்வியுற்றேன்! உம் இடையர்க்ள எம்மோடு இருந்தார்கள்: நாங்கள் அவர்களை துன்புறுத்தியதில்லை: கர்மேலில் அவர்கள் இருந்த காலம் மெல்லாம் எதையும் இழக்கவில்லை.8 உம் பணியாளர்களை கேளும்: அவர்கள் உமக்கு சொல்வார்கள். ஆதலால் இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில் நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கு உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க! எனக் கூறுங்கள் என்று சொல்லியனுப்பின9 தாவீதின் இளைஞர்கள் சென்ற நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றiயும் கூறிக் காத்திருந்தனர்.

ஒரு ரௌடியாக மாமூல் கேட்டு தாவீது ஆள் அனுப்புதலைக் காண்கிறோம்.

1சாமுவேல்25:10 நாபால் தாவீதின் இளைஞர்களிடம், தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் பலர் உள்ளனர்.11 என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியும் எடுத்து எங்கிருந்தோ வந்த வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா? என்று பதிலளித்தான்.12 ஆதலால் தாவீதின் இளைஞர்கள் அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.

நாபால் பதில், மிகத் தெளிவாக என் தொழிலாளிக்கு நான் தருவேன், எங்கிருந்தோ வந்தவர்க்கு எதற்கு?

தாவீது புறப்பட்டு பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.

ஆனால் கதாசிரியர், தாவீது அங்கே நாபாலின் பண்ணைக்கு தாவீது  வீரர்கள் பாதுகாப்பு தந்ததாக ஒரு கதை இப்போது வருகிறது- நாபால் மனைவி அபிகாயிலிடம் சொல்லப்படுவதாக

1சாமுவேல்25:13 தாவீது தம் ஆள்களை நோக்கி, நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள், என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளை கட்டிக்கொண்டான்: தாவீதும் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்தனர்.14நாபாலுடைய பணியாள்களின் ஒருவன் அவன் மனைவி அபிகாலிடம், இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவம்மானப்படுத்தினார்.15 இருப்பினும் அந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தார்: எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளியில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.16 நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்நத நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தார்.17 எனவே இதையறிந்து நீ யோசித்து என்ன செய்ய முடியுமென்று பாரும்: ஏனெனில் நம் தலைவர் மேலும் அவர் வீட்டார் மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது. இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்கு தீய குணமுடையவராய் இருக்கிறார் என்றான். 18 இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், ஐந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவ்றறை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.19 அவர் தம் பணியாளர்களை நோக்கி, நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன், என்றார்.20 அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீது அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களை சந்தித்தார்.21அப்பொழுது தாவீது, இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் தீமையே செய்தான்.22 அவனுக்குச் சொந்த மாணவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் அவரைத் தண்டிப்பாராக என்று சொல்லிக் கொண்டிருந்தார்.23அபிகாயில் தாவீதைப் பார்த்த போது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.24 அவர் தாவீதின் காலில் விழுந்து, என் தலைவரே பழி என் மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் நீ சொல்லப் போவதை நீர் செவிக் கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.
இக்கதை உண்மை என்றே இருந்தாலும், கருமியாய் இருந்த நாபால் தவறை, மனைவி, அபிகாயில் தாவீதிற்கு மாமுல் தந்து சரி செய்கிறாள் எனப் பார்க்கலாம்.

 நாபால் தன் பண்ணைத் தொழிலாளருக்கு அறுவடைக்கு சம்பளம் தந்து மதுவோடு கொண்டாடினார். இதில் தவறே இல்லை.

1சாமுவேல்25:36 அபிகாலில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றை தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்: அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது அவன் மிகுந்த குடிப் போதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.37 காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தப் பின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லைப் போல் செயலற்றவன் ஆனான்.38 ஆண்டவர் கர்த்தர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.39 நாபால் இறந்து விட்டதைக் தாவீது கேள்வியுற்றபோது, நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு எதிராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அதைத் திருப்பிவிட்டார். பின்பு அபிகாயிலை மணந்து40 தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார் என்றார்.41 அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, இதோ! உம் அடிமைகளாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக! என்றாள்.42 உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்துச் சென்றார். பணிப்பெண்கள் ஐவர் அவருடன் சென்றார்கள்: அவர் தாவீது தூதர்களை பின் தொடர்ந்து அவருக்கு மனைவியானார்.43 இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்: அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.44 சவுல் தம் புதல்வியையும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.

 தாவீதிற்காக ஒருவன் மனைவியை கைப்பற்ற, கர்த்தர் நாபாலைக் கொலை செய்தாராம்.

கர்த்தர் செயல் கேவலமாய் உள்ளது.

Monday, June 9, 2014

அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?

ஏசுவின் மரணத்திற்குப்பின் ஜெருசலேமில் ஆதி சர்ச், ஏசுவின் உடன் பிறந்த சகோதரர் யாக்கோபு தலைமையில் இயங்கியது என பவுல் கடிதம் புனைகின்றது.
கலாத்திய1:17 எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன்.  19 ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.
கலாத்திய2:9 அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர். 
அந்தியோக்கியாவில் பவுல் பேதுருவைக் கடிந்து கொள்தல்
11 ஆனால் கேபா அந்தினேயாக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்.12அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்: ஆனால் யாக்கோபின் ஆள்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.13மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக் கூடக் கவர்ந்து விட்டது.
1கொரிந்திய9:உண்பதற்கும் குடிப்பதற்கும் உரியவற்றைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா?5 மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?
1கொரிந்திய15:5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.8எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.
ஏசுவின் குடும்பம் சகோதரர்கள் பற்றி காண்பது
மாற்கு6: 1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ' என்றார்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world at the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense. -New Catholic Encyclopedia, Vol-9 Page-337; fom Catholic University America
ஏசுவின் குடும்பம் சகோதரர்கள் பற்றி விக்கிபீடியாவில் காண்பது http://en.wikipedia.org/wiki/Brothers_of_Jesus - Family Tree & pedigrees
 Mary=Joseph                                   Cleopas=another Mary
     |                                                |
     |______________________________________          |
     |    |     |     |     |      |      |           Simeon
     |    |     |     |     |      |      |           d. 106
    Jesus James Joses Simon Sister Sister Jude
          d.62                             |
            |                            Menahem
          Jude                           ____|____
            |                            |        |
         Elzasus                       James     Zoker
            |                                 ?
          Nascien                             |
                                      Bishop Judah Kyriakos
                                         fl. c. 148–49.


James the Just
Saint James the Just.jpg
Icon of James
Martyr, Adelphotheos
Born –unknown, Palestine
Died -62- (according to Josephus and Jerome) or 69 (Hegesippus, Clement of Alexandria, and Eusebius of Caesarea)
Honoured in -All Christianity
Feast - May 3 (Roman Catholic), May 1 (Anglican), October 23 (Lutheran), (Episcopal Church (USA)), (Eastern Orthodox), December 26 (Eastern Orthodox)
Attributes- fuller's club; man holding a book

Controversy -James is sometimes identified with James, son of Alphaeus andJames the Less. There is disagreement about the exact relationship to Jesus.
 http://en.wikipedia.org/wiki/James_the_Less-may or may not be the same person as James the Just or James, son of Alphaeus.
http://en.wikipedia.org/wiki/James_the_Just
In a third century letter pseudographically ascribed[3] to the second century Clement of Rome, James was called the "bishop of bishops, who rules Jerusalem, the Holy Assembly of Hebrews, and all assemblies everywhere".[4] But like the rest of the early Christians, information about his life is scarce and ambiguous. In the non-canonical Gospel of Thomas,Jesus names James his successor: "The disciples said to Jesus, 'We know that you will depart from us. Who will be our leader?' Jesus said to them, "Where you are, you are to go to James the Just, for whose sake heaven and earth came into existence.'"
உள்ள குறிப்புகளின்படி, ஜெருசலேம் சர்ச்சை ஏசுவிற்குப்பின் தலைமை ஏற்று அப்போஸ்தலர்களையும் வழி நடத்தியதான யாக்கோபு(ஆங்கில ஜேம்ஸ்) 61 அல்லது 69ல் இறந்திருக்கலாம். இவர் கடைசிவரை யூத நம்பிக்கை கொண்டு, ஜெருசலேம் நோக்கி தொழுகை செய்து வாழ்ந்தவர் எனக் குறிப்புகள் கூறுகிறது.
இவர் பற்றியே நம்பிக்கைக்கு உரிய செய்திகளை சர்ச் பாதுகாக்கவில்லை.
 இவர் எழுதியதாக ஒரு கடிதம் புதிய ஏற்பாட்டில் உள்ளது. அது யூதர்களின் 12 கோத்திரத்தாருக்கு என ஆரம்பத்தோடு உள்ளது.

யாக்கோபு தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது:

தம்பி யூதா பெயரிலும் கடிதம் உள்ளது

யூதா 1 யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து, தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: 

ப்ரோட்டஸ்டண்ட் கிளர்ச்சியின் முன்னிலைப் பாதிரியாரான மார்டின் லூதர் - புதிய ஏற்பாட்டில் யாக்கோபு, யூதா, எபிரேயர் & வெளிப்படுத்திய விசேஷங்கள் இவை நான்கும் நீக்க வேண்டும் எனக் கருதினார். மற்றவர் தடுக்க முயற்சி கைவிடப்பட்டது.

http://en.wikipedia.org/wiki/Luther's_canon

அப்போஸ்தலர்கள் யார் யார் ? தெரியாது? 

 மாற்கு
 மத்தேயு
 லூக்கா 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்
 பேதுரு என்னும் சீமோன் 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட  சீமோன் 
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 யாக்கோபின் சகோதரரான யோவான்
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 யாக்கோபு,  ,  
 அந்திரேயா 
 யாக்கோபுசகோதரர் யோவான்
 யோவான்
 பிலிப்பு 
 பிலிப்பு
 பிலிப்பு
 பர்த்தலமேயு 
 பர்த்தலமேயு
 பர்த்தலமேயு
 மத்தேயு 
 தோமா
 மத்தேயு
 தோமா
  வரி தண்டினவராகிய மத்தேயு
 தோமா
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயு மகன் யாக்கோபு,
 ததேயு
 ததேயு
  யாக்கோபின் மகன் யூதா
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 தீவிரவாதி எனப்பட்ட சீமோன்
  இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
 துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து
 நாம் மேலே பார்த்த ஏசு குடும்பத்தில் ஏசுவின் உடன் பிறந்த தம்பிகள் நாலு பேர்- யாக்கோபு, யோசே, யூதா, சிமியோன் இவர்களில் உள்ள இரு பெயர்கள் தான் யாக்கோபு- யூதா.
சர்ச் கூறும் செவிவழிப் பாரம்பரிய நம்பிக்கை, மேலுள்ள அல்பேயுவின் மகன் யாக்கோபு - தான் கடிதம் எழுதியதான. ஏசுவின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆன அப்போஸ்தலர் என்கிறது.  ததேயு என இங்குள்ளது மற்ற சுவிகளில் யூதா என மட்டும் இருக்க இரண்டும் ஒருவர், ஏசுவின் சகோதரர் தான் இந்த அப்போஸ்தலர், இவர் தான் மேலுள்ள கடிதம் புனைந்தது என்கிறது.
ஆனால் ஏசு உடன் பிறந்த தம்பிகள் பற்றி யோவான் சுவிசேஷம் சொல்லும் கதை செய்தி

யோவான்7:1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ' நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே! ' என்றனர்.5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

 ஏசுவின் சகோதரர் இருவர் அப்போஸ்தலர் என்றால் யோவான் சுவி தவறு. இந்த சுவி சரி எனில் அப்போஸ்தலர்கள் யார் என்பதே தெரியாது, அல்லது ஏசு- சீடர்கள் பற்றி சர்ச் ஏதுமே தெரியாது, பிற்காலத்தில் தன்னிச்சையாய் புனைந்து வருகிறது என்ப்பது தெளிவாக புரியும்.
OXFORD Dictionary of Saints -1978 - JAMES THE LESS: The sons of Alphaues is often but not certainly, identified with the James whose mother stood by Christ on the cross and also with James, the brother of the Lord, who saw the risen Christ and is often called the first Bishop of Jerusalem, He is also sometimes identified with Author of the Epistle of the St.James. If Non of this identification is correct, we know Practically nothing about James the Less.// Page - 208.
இவரைப் பற்றி சொல்வது எல்லாமே ஆதாரமில்லா நம்பிக்கை- செவிவழிக் கதைகள் என பரப்பப் பட்டவையே.
சரி யாக்கோபு பெயரில் உள்ள கடிதம் பற்றி பைபிளியல் அறின்ஞர் கூறுவது காண்போமா?
Oxford  Dictionary of Christian Church : Even if the Epistle is not the work of St.James, it seems likely that it was composed by A.D.95, At any rate it is not later than A.D.150. // Page 712
 நடுநிலை பைபிளியல் அறிஞர்கள், மார்சியன் கிளர்ச்சிக்குப் பின் 150 வாக்கில் தான் பாஸ்டரல் கடிதங்கள் அனைத்துமே வரையப்பட்டது என ஏற்கின்றனர்.
20 நூற்றாண்டாய் சர்ச் கட்டும் கதையின் உண்மைகள் உடைய சர்ச் உண்மை சொல்வோரை இழிவு படுத்தி தாக்குதல் தொடர்கிறது.
உண்மைகளை மறைக்க முடியாது. உலக பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை எனப்படும் தாமஸ் பைன் எழுதிய “ஆய்வின் காலம்”; Thomas Paine – “Age of Reason” என்னும் நுலிற்காக அவரைக் கொல்ல சர்ச் முனைந்தது, அவர் எழுதும் போது 80 வயது நெருங்கியவர், அது அவரைக் காப்பாற்றியது, ஆனால் அந்த நூலில் உள்ள பெரும்பாலான கருத்துக்களை பெரும்பாலான பைபிளியல் அறிஞர்களும் சரியே என எழுதியுள்ளார்கள்.
ஏசு மரணம் பின் நாற்பது ஆண்டு சர்ச் தலைமை ஏற்று நடத்திய ஏசுவின் உடன்பிறந்த சகோதரர் யாக்கோபு பற்றி சர்ச் கூறுவது எலாமே ஊக - அனுமானங்கள் தான். ஏசுவோ அதற்கு 40 வருடம் முன் சீடரோடு ஒரு வருடமோ அல்லது மேலும் சில காலமோ இயங்கியிருக்கலாம்.
அப்போஸ்தலர் பணி16:2 திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர்.3 பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச்செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு திமொத்தேயுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.
அப்போஸ்தலர் பணி21:18 18 மறுநாள் பவுல் எங்களைக் கூட்டிக் கொண்டு யாக்கோபிடம் சென்றார். அங்கு அனைத்து மூப்பரும் வந்திருந்தனர்.
23 நாங்கள் உமக்குக் கூறுவதை நீர் செய்யும். பொருந்தனை செய்து கொண்ட நான்கு பேர் எங்களிடையே உள்ளனர்.24 இவர்களைக் கூட்டிக் கொண்டு போய், இவர்களோடு சேர்ந்து தூய்மைச் சடங்கு செய்துகொள்ளும். அவர்கள் முடிவெட்டுவதற்கான செலவை நீரே ஏற்றுக்கொள்ளும். இதனால் நீர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடப்பவர் என்றும் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டவைகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அனைவரும் தெரிந்து கொள்வர்.

 மோஸே சட்டப்படி விருத்த சேதனம், டங்குகள், 60 வாக்கில் யாக்கோபினால் செய்யப் பட்டது. ஏசு தேவ குமாரன் கதைகளை யாக்கோபு ஏற்கவில்லை.

உண்மைகளே காப்பாற்றும். இருதயம் கொண்டிருக்கும் மூட நம்பிக்கையை தூக்கி எறிந்து ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்

மாற்கு: 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராதமறை பொருளுமில்லை.23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
லூக்கா16:10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

.நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

ஏசுவை தெய்வமாக்க புனையப்பட்ட கதைகளை நியாயப்படுத்த செய்யும் முயற்சிகள்- வைத்துள்ள ஷூவிற்காக காலை வெட்டும் பாதிரிகள் கதை மழுப்பல்கள் எடுபடாது.  

முஸ்லிம் மதமும் மதமாற்ற காதலும்

 ஒரு நிறுவன உரிமையாளரின் மகள், ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்தாள்... அவள் அவன் மீது தீவிரமான காதலில் இருந்ததால், தன் பெற்றோரின் விருப்பத்தை ம...