Tuesday, January 4, 2022

இந்திய நீதி நிர்வாகம் தர்ம சாஸ்திரங்களை பின்பற்ற வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதி - அப்துல் நசீர்

திருக்குறள் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டும் முந்து நூல்கள்



 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.  குறள் 543: செங்கோன்மை. 
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை. அந்தணர்  நூல் அறத்திற்கும் - பிராமணர் வேதங்களும் அவற்றின் சாரமாகிய தர்மசாஸ்திர நீதி நூல்கள்; ஆதியாய் -அடிப்படையாய் 

 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.  குறள் 560: கொடுங்கோன்மை. 
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
 அறு தொழிலோர் நூல் மறப்பர் - அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா 
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.  குறள் 725: அவையஞ்சாமை.  மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.


 

No comments:

Post a Comment

நீட் உயர் மருத்துவகல்வியில் அரசு டாக்டர் என இடஒதுக்கீட்டில் படித்துவிட்டு தலைமறைவு என தனியாக கொழிக்கும் 229 மருத்துவர்கள்

அரசு மருத்துவமனையில் பயின்று அரசு மருத்துவமனைகளில், மருத்துவக் கல்லூரியில் பணியில் அறிவிப்பு இல்லாம (abscond) மருத்துவர்கள் மீது உரிய சட்ட ந...