Tuesday, January 4, 2022

இந்திய நீதி நிர்வாகம் தர்ம சாஸ்திரங்களை பின்பற்ற வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதி - அப்துல் நசீர்

திருக்குறள் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டும் முந்து நூல்கள்



 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.  குறள் 543: செங்கோன்மை. 
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை. அந்தணர்  நூல் அறத்திற்கும் - பிராமணர் வேதங்களும் அவற்றின் சாரமாகிய தர்மசாஸ்திர நீதி நூல்கள்; ஆதியாய் -அடிப்படையாய் 

 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.  குறள் 560: கொடுங்கோன்மை. 
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
 அறு தொழிலோர் நூல் மறப்பர் - அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா 
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.  குறள் 725: அவையஞ்சாமை.  மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.


 

No comments:

Post a Comment