Wednesday, January 19, 2022

பச்சிளம் குழந்தைகள் படுகொலை நினைவு செய்யும் கிறிஸ்துமஸ் + ஸ்டார்

பைபிள் சுவிசேஷக் கதை நாயகன் இயேசு கிறிஸ்து  வரலாற்றில் வாழ்ந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. முதலாவதான மாற்கு சுவிசேஷ கதை பொது ஆண்டு  70 +80 வாழக்கில்  வரையப் பட்டது.
மாற்கு கதையிலே இயேசு பிறப்பு கதை கிடையாது; இயேசுவின் அப்பா பெயர்  கூட எங்குமே இல்லை. 

 மாற்கு 6:3  இவர் ஒரு தச்சன் தானே.  மரியாளின் மகன் அல்லவா?  யாக்கோபு, யோசே, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று சொந்த ஊரில் பேசினர். 

மாற்கு 3: 21 இயேசு மதிமயங்கி ள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள விரும்பினர்


 மத்தேயு 2: 1ஏரோது மன்னன் காலத்தில், சில ஜோதிடர்கள் எருசலேமுக்குக் கிழக்கிலிருந்து வந்து 2 அவர்கள்  “யூதர்களின் ராஜாவாக குழந்தை பிறந்ததை காட்டும் நட்சத்திரத்தைக் கிழக்கு திசையில் கண்டோம்.  ...” என்றனர்.

  மத்தேயு 2: 16 ஜோதிடர்கள் தன்னைச் சந்திக்காமல் சென்றுவிட்டதை அறிந்த ஏரோது,  ... இதற்குள் இரண்டு வருடங்களாகி இருந்தன. எனவே, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோது ஆணையிட்டான். ஆகவே, இரண்டும் அதற்குக் குறைவான வயதுடையதுமாகிய எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட ஆணையிட்டான்.









 

No comments:

Post a Comment

Temple Property Rents - new Guidelines