Saturday, January 1, 2022

கோவில் உண்டியலில் அசுத்தமான ஆணுறையை போட்ட கிறிஸ்தவ மதவெறியர் ’ஜான் தேசாய்’

 கோவில் உண்டியலில் அசுத்தமான ஆணுறையை போட்ட கிறிஸ்தவ மதவெறியர் ’ஜான் தேசாய்’






https://english.varthabharati.in/karavali/mluru-accused-devdas-desai-arrested-for-dropping-condoms-in-collection-boxes-of-religious-places

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்திய ஆணுறைகளை வீசியதற்காக 62 வயது உடைய ’ஜான் தேசாய்’ என்பவன் கைது செய்யப்பட்டு உள்ளான். “அசுத்தமான இடங்களுக்கு அசுத்தமான பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் நான் இதைச் செய்தேன்” என்று தனது குற்றத்தை காவல்துறையிடம் ஒப்புக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.18 மத வழிபாட்டு தளங்களில் இது போன்ற கீழ்த்தரமான செயல்கள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மங்களூருவில் குறைந்தபட்சம் 5 கோவில்களின் வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சந்தேகப்படும்படியாகத் தோற்றமளிக்கும் ஒருவன் உண்டியலில் எதையோ போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டுச் செல்வது தெரிந்தது.

 சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து காவல்துறை அவனை கைது செய்து உள்ளது. அவனிடம் தீவிர விசாரணை நடத்திய பொழுது தனது குற்றத்தை அவன் ஒப்பு கொண்டு உள்ளான். “கடந்த 15 ஆண்டுகளாக நான் இயேசுவின் செய்தியைப் பரப்பி வருகிறேன். இயேசுவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று பைபிள் சொல்கிறது. தூய்மையற்ற இடங்களுக்கு அசுத்தமான பரிசுகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த ஆணுறைகளை போட்டேன் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தனது செயல்களுக்கு நியாயம் கற்பித்து உள்ளான்.

 

பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, அண்ணாமலை போன்றவர்களின் பெயரை கேட்டால் உடனே ஓடி வரும் தமிழகத்தை சேர்ந்த முன்களபணியாளர்கள், நெறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சீப்பு செந்தில், குணம் ஆகாத குணா போன்றவர்கள் பெரும்பான்மை ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திய ‘ஜான் தேசாய்’ என்பவன் குறித்து எப்பொழுது வாய் திறப்பார்கள்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

No comments:

Post a Comment