*ஊழல் ஆட்சியில் FIR-லும் மோசடி‘’..!*

முதற்கட்டமாக அரசு சார் கணினியின் வரி விதிப்பு தொகையில் திருத்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு அரசு ஊழியர் இது போன்ற நிதி மோசடித் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் மிக முக்கியமாக IPC பிரிவுகள் 120B ( கூட்டுச் சதி), 420 (மோசடி), 471 (அரசு சார் ஆவணங்களில் மோசடி), மற்றும் PC Act (ஊழல் தடுப்புச் சட்டம்) ஆகியவையின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இந்த குற்றத்தின் வீரியத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக மேற்கூறிய எந்த ஒரு பிரிவையும் FIR இல் சேர்க்கப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மேற்கூறிய IPC 120B, 420, 471 பிரிவுகள் மற்றும் PC Act ஆகியவையின் கீழ் வரும் குற்றங்கள் PMLA Act-
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் scheduled offence - ன் அட்டவணையில் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தால், அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்வதற்கு முகாந்திரம் ஆகிவிடும் என்கிற காரணத்தால், பெயருக்கு 465, 466, 468, 477 ஏ மற்றும் ஐ.டி. சட்டங்களின் பிரிவுகளில் மட்டும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையிடம் இருந்து காக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்திருப்பதே ஒரு மோசடிதான்.
ஏற்கனவே அமலாக்கத்துறையின் பிடியில் பல தி.மு.க அமைச்சர்கள் சிக்கி இருக்கும் நிலையில், மேலும் ஒரு அமலாக்கத்துறை வழக்கை எதிர்கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்த தி.மு.க., வெகு சாமார்த்தியமாக இந்த FIR-ல் குற்றத்திற்கேற்ப பிரிவுகளை சேர்க்காமல் விட்டிருக்கிறது.
கீழ்நிலையில் இருக்கும் சில ஊழியர்களை காப்பாற்றவே இந்த மெனக்கெட்டிருப்பதாக தெரியவில்லை; சம்பந்தப்பட்டிருக்கும் மேல் மட்டத்திலிருப்பவர்கள் நோக்கி அமலாக்கத்துறை வந்துவிட கூடாது என்பதற்காகவே FIR இல் இந்த மோசடி நடந்திருக்க வேண்டும் என்ற ஐயம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
எனவே தமிழக காவல்துறை டி.ஜி.பி மற்றும் காவல்துறை மந்திரியான முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் , குற்றத்திற்கேற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறோம்.
விஞ்ஞான முறையில் ஊழல் செய்து அதிலிருந்து விஞ்ஞான முறையில் தப்பிக்கவும் முயற்சிக்கிறது திமுக. கண்ணகி நீதி கேட்ட மதுரையில், இந்த அநீதிக்கும் நீதி கிடைக்குமா..?
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை நினைவில் கொள்க மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களே ..!
No comments:
Post a Comment