Wednesday, August 10, 2022

இந்திய தேசியக் கொடியை முஸ்லிம்கள் மதிப்பது ஹராமா?

தேசியக் கொடி ஏந்திப் பேரணி சென்றால் முஸ்லிம்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாம். உவரி காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்.

*நெல்லை மேலப்பாளையம் என்ன பாகிஸ்தானா ?*
இந்திய சுதந்திர தின 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி வரும் 12.8.22 (வெள்ளி) மாலை 4மணிக்கு நெல்லை பாளையங்கோட்டை வீரன் அழகுமுத்துக்கோன் சிலை முன்பிருந்து விழிப்புணர்வு வாகன பேரணி துவங்கி மத்தியசிறை, குலவணிகர்புரம் , மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா , குறிச்சி, மேலப்பாளையம் ஆஸ்பத்திரி , நத்தம் வழியாக டவுண் காந்திசிலை முன்பு வரை விழிப்புணர்வு யாத்திரை செல்ல நெல்லை மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டால் குல வணிகர்புரம் வரை மட்டுமே செல்லலாம் என்றும் மேலப்பாளையத்திற்குள் தேசியக் கொடியோடு சென்றால் பிரச்சனை ஏற்பட கூடும் எனவும் அந்த வழியில் அனுமதி மறுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
மேலப்பாளையத்திற்குள் இந்துமுன்னணி கொடியோடு அல்லது காவி கொடியோடு சென்றால் பிரச்னை வரலாம் என காவல்துறை கூறினால் அதில் நியாயம் இருக்கிறது என்று கூற முடியும்
ஆனால் தேசிய கொடியோடு சென்றால் பிரச்சனை வரும் மேலப்பாளையத்திற்கு தேசிய கொடியோடு ஊர்வலம் செல்லக்கூடாது என்றால் மேலப்பாளையத்தில் இருப்பவர்கள் எல்லாம் தேசியக் கொடிக்கு எதிரானவர்கள் என காவல்துறை கருதுகிறதா ? மேலப்பாளையம் இந்தியாவில் தானே இருக்கிறது மேலப்பாளையம் பாகிஸ்தானிலா இருக்கிறது
அங்கு தேசியக் கொடியோடு சென்றால் என்ன பிரச்சனை வரப்போகிறது
இதேபோல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா குட்டம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசித்து வருவதாகவும் அந்த பகுதியில் பள்ளிவாசல் இருப்பதாலும் தேசிய கொடியோடு விழிப்புணர்வு யாத்திரை செல்லக்கூடாது என அங்கும் நெல்லை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது
குட்டம் , மேலப்பாளையத்தில் இருப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்ற முடிவுக்கு காவல்துறை வருகிறதா தெரியவில்லை
மேலப்பாளையம் இந்தியாவின் ஒரு அங்கம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில்
வருகிற 13-ம் தேதி நிச்சயம் தேசிய கொடியோடு மேலப்பாளையத்திற்குள் செல்வோம்
தேசபக்தர்கள் வாரீர் !
கா.குற்றாலநாதன் MA, BL
மாநில செயலாளர்
இந்துமுன்னணி
தேசியக் கொடியை எதிர்ப்பவர்கள் இந்த நாட்டில் வாழத் தகுதி அற்றவர்கள் நாட்டை விட்டுத் துரத்தப்பட வேண்டியவர்கள் ll


https://www.facebook.com/groups/1802075443422233/permalink/2885942035035563/?flite=scwspnss

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0H9oLbHxRStdzsqoaXtLCURU6rDUVgdHPqqVawhQ2Nw2DaYzyaDJBMdbirjuz7b6Pl&id=100004583194692

 

No comments:

Post a Comment