Thursday, May 25, 2023

திருக்குறளை சிறுமை செய்யும் மதவெறி - கிறிஸ்துவ தெய்வநாயகம் & திராவிடியார் மோகன ராசு

திருக்குறளை சிறுமை செய்ய தன்னுடைய 20ம் நூற்றாண்டு நம்பிக்கை அடிப்படையில் எள்ளல் செய்வதில் கிறிஸ்துவர்களும் - திராவிடியார் நவீன தமிழ் அறிஞர்களும் போட்டி

திருக்குறளை கிறிஸ்துவ நூல் என நிரூபிக்க- குறளின் உரைகளில் மாற்றம் மற்றும் வள்ளுவர் ஒரு அதிகாரத்தில் தமிழர் மெய்யியல் மரபில் கூறியதை  எள்ளல் காண்போம்.

கிறிஸ்துவ மதவெறி  மோசடி தெய்வநாயகம் & திராவிடியார் மோகனராசு 

 கிறிஸ்துவம் - மனிதப் பிறப்பு என்பது ஒரு முறை தான்- பிறகு இறந்தவர் பிண உடலை அடக்கம் செய்தால் உலக முடிவு நாளில் எழுப்புவர் என நம்பிக்கை. எனவே மனிதன் மீண்டும் மீண்டும் பிறந்து- இறந்து -பிறந்து எனத் தொடரும் பிறவிப் பெருங்கடலை ஏற்பது இல்லை. எனவே வள்ளுவர் எழுபிறப்பு என்பதை எள்ளல் நடையில் கீழமை செய்தார்.


ஆனால் திருவள்ளுவர் மனித வாழ்க்கையில் - 'உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழித்தல் போலும் பிறப்பு' என பிறவிப் பெருங்கடலை விளக்கி உள்ளார்.

நீதிமன்ற வழக்குபடி பேராயர் அருளப்பா - பால் கணேஷிற்கு 14 லட்சம் 1976 - 80ல் தந்து இருந்தார். மோசடி திருக்குறள் ஓலை சுவடி தயாரித்த கிறிஸ்துவம் பற்றி ஆங்கில இல்லஸ்டிரேடட் வீக்லி பத்திரிக்கையில்  முழு கட்டுரை.

சென்னை பல்கலைக்கழக திருக்குறள் துறை செய்ய வேண்டிய பணியை, கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் - பேராயர் அருளப்பா கும்பல் மோசடியை திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகம் - செய்தது.  திருக்குறளில் கிறிஸ்துவம் சிறிதும் இல்லை, என லயோலா கல்லூரி தமிழ்துறை பேராசிரியரும் இயேசு சபை  Rev. S.J.ராஜமாணிக்கம். அவர்கள் கருத்தரங்கு   கட்டுரையை வெளியீட்டது

திரு.மோகனராசு பல ஆண்டுகள் சென்னை பல்கலைக் கழக திருக்குறள் துறைத் தலைமைப் பதவியோடு  கிறிஸ்துவத் தமிழ் துறைத் தலைவராக இருந்தவர் - சர்ச் மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பைப் பற்றியோ திருக்குறளை கிறிஸ்த்வம் ஆக்கும் மோசடியின் முக்கிய பங்கு தேவநேயப் பாவாணர் என்பதை இவர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. 

 தெய்வநாயகத்தின் பொருள் ஆதாரமான சாந்தோம் பேராயர் அருளப்பாவின்  கிறிஸ்துவ மதவெறி திருக்குறள் (கீழ்த்தரமான) உரையைப் பாராட்டி எழுதி உள்ளார். அருளப்பா உரையில் வான் என்பதை பரிசுத்த ஆவி எனவும் நீத்தார் என்பதை ஏசுவை குறிக்கும் வையில் அருவருபான உரையின் தன்மையை ஏதும் சொல்லவில்லை.

திராவிடியார் நாத்தீக மதவெறியர் மோகனராசு கீழ்த்தரமான ஆய்வு

"ஆதி பகவன் முதற்றே உலகு" என இந்த உலகம் பரம்பொருளினால் படைக்கப் பட்டு அவரிடம் இருந்து தொடங்குகிறது, அதை விளக்க-'அகர முதல் எழுத்து எல்லாம்' என அதாவது நாம் கல்வி கற்கும் முதல்படி 'கரம் எழுதித் தொடங்கி- நாம் கற்கும் அனைத்தையும் (எழுத்து எல்லாம்) கற்கிறோம். நாம் உலகில் எங்கு இருந்தாலும் அந்தக் கல்வி நம்மோடு இருப்பது போல இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளார் எனும் கருத்தை இந்தக் குறளில் கூறி உள்ளார்.

கல்வி கற்றதன் முழுமையான பயன் முழுமையான அறிவனான இறைவன் திருவடிகளைத் தொழுவதற்கே என்பதே வள்ளுவத்தின் மெய்யியல்.

கடவுள் நம்பிக்கைக்கு மாறான எதையும் வள்ளுவர் ஏற்பதில்லை என்பதும் முதல் அதிகாரத்தில் வள்ளுவர் உறுதி செய்துள்ளார். வாழ்வில் இறை மறுப்பினை ஏற்காத வள்ளுவர்


2. வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

9. குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

10. குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

கடவுள் வாழ்த்து அதிகாரக் குறட்பாக்களின் சாரம்:

1. நாம் கல்வி முழுவதும் கற்க முதலில் 'அ'கரம் கற்கிறோம், உலகம் பரம்பொருள் எனும் ஆதிபகவனை முதலாக உடையது என உலகிப் படைத்த கடவுள் என்பதும், கல்வி நாம் எங்கு இருந்தாலும் நம்மோடு உள்ளது போல தெய்வமும் உலகம் முழுவதும் நிறைந்த  இயல்பை  கூறுகிறது.

2.கல்வி கற்பதன் முழுமையான பயன் என்பது  முழுமையான அறிவன் ஆன பரம்பொருள் திருவடியை தொழுவதற்கே 

3 ஆம்குறள் கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்கிறது.

4 ஆம்குறள் சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் என்பதைச் சொல்வது.

5 ஆம்குறள் கடவுளின் பெருமை அறிந்து வாழ்த்துபவருக்கு நல்வினை தீவினை எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது.

6 ஆம்குறள் ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க என அறிவுறுத்துவது.

7 ஆம்குறள் எல்லாம்வல்ல இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றல் தர முடியும் என்று சொல்கிறது.

8 ஆம்குறள் அருள் வடிவினனான இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள வழியுண்டு எனச் சொல்வது.

9 ஆம்குறள் இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் எனக் கூறுகிறது.

10 ஆவதுகுறள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்கிறது.



மோகனராசு நூலில் 75க்கும் மேற்பட்ட திராவிடியார் உரைகளில் ஆதி பகவன் என்பதை பகலவன் என்பதே சரி எனச் சூரியன் குறிப்பதாகவும், மீதமுள்ள கடவுள் வாழ்த்து பாடல் இறைவனை குறிக்கும் சொற்கள் தலைவன் என உரை செய்து உள்ளதை பதிவு செய்துள்ளார்

No comments:

Post a Comment