Wednesday, April 12, 2023

திருமா - மிருகத்தன தமிழர் விரோத உளறல் கல்விக்கு விரோதப் பேச்சுகள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். குறள் 393: கல்வி
கல்வி கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
திருவள்ளுவர் இத்தோடு நிற்கவில்லை
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து . குறள் 398: கல்வி
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவன் ஆன்மா மீண்டும் எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

https://www.vikatan.com/government-and-politics/politics/who-is-educated-thol-thirumavalavan-speech

அன்புமணி விமர்சனம்... தொல்.திருமாவளவன் விளக்கம்: ``படித்தவர்கள் யார், படிக்காதவர்கள் யார்?’

திருமாவளவன்

`என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நிலையை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன்.’ - திருமாவளவன்.

கடந்த சில தினங்களுக்கு முன் அரக்கோணம் மாவட்டம் அருகேயுள்ள சோகனூரில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு தலித் இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை காவல்துறையினர் செய்திருக்கின்றனர். இந்தக் கொடூரமான செயலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இறந்த இளைஞர்கள்
இறந்த இளைஞர்கள்
Facebook

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இறந்தவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்தநிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ்,``இந்தக் கொலைச் சம்பவம் குடி போதையில் நடந்தது. சாதிய மோதல் காரணமில்லை. திருமாவளவன் போன்றவர்கள் பொய்த் தகவலை பரப்புகின்றனர். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

அன்புமணியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், திருமாவளவனுக்கு ஆதரவு தரும் வகையிலும், சமூக வலைதளங்களில் #MyLeaderThiruma என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. பல்வேறு தரப்பினரும் `நாங்கள் படித்தவர்கள், நாங்கள் திருமாவின் பக்கம் நிற்கிறோம்’ என்று தங்களின் பலத்த ஆதரவை திருமாவளவனுக்குத் தெரிவித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு, நேற்று நேரலையில் திருமாவளவன் பேசிய உரையிலிருந்து சில கருத்துகளைப் பதிவாகத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த உரை பின்வருமாறு:

`` `திருமாவளவனைப் படித்த இளைஞர்கள் நம்புவதில்லை’ என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்திருக்கிறார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்குக் கல்வியை நுகர வாய்ப்பில்லாத இளைஞர்களைக் கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள், படிக்காதவர்களைவிட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால்தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக்காதவர்கள் ஆதரித்தால் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து அதிலே தொனிக்கிறது.

எம்.ஜி.ஆர் என்ன படித்தார்... ஜெயலலிதா என்ன படித்தார்... காமராஜர் படித்தது என்ன... முத்தமிழறிஞர் கலைஞர் படித்தது என்ன? ஆனால், இவர்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடிய மக்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கூடத்தின் வாசலைக்கூட மிதிக்க வாய்ப்பில்லாதவர்கள்தான். ஆடு மாடுகளை மேய்க்கக்கூடிய அடித்தட்டு மக்கள்தான். வயல்வெளிகளில் விலா எலும்பு உடைய உடைய உழைக்கக்கூடிய பாட்டாளிகள்தான். உழைக்கிற மக்கள், படிக்க வாய்ப்பில்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்களா?

கல்வியைப் பெற்றவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று பொருள். கல்வி பெற இயலாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர்கள் என்றுதான் பொருள். கல்வி பெற்றவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்கிற மனோநிலை என்பதே ஒரு பாகுபாடு உளவியல்தான். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற Discrimination அதிலே இருக்கிறது.

1990-களில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு என் பெயருக்குப் பின்னால் இரா.திருமாவளவன், M.A.,B.L., என்று தோழர்கள் போடுவார்கள். அப்போதே நான் அதைப் போடுவதை எடுக்கச் சொல்வேன். படித்ததைத்தானே போடுகிறோம் என்று தோழர்கள் சொல்வார்கள். நாம் பணியாற்றுகிற களம், உழைக்கும் மக்களின் களம். ஆடுமாடு மேய்க்கக்கூடியவர்களாக, கல்லுடைப்பவர்களாக, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்களாக, மூட்டை சுமப்பவர்களாக, பார வண்டி இழுப்பவர்களாக, கட்டடத் தொழிலாளர்களாக, மீனவர்களாக, கருப்பங்காட்டில் கிடந்து காயும் விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். அவர்களிடத்திலே திருமாவளவன் M.A.,B.L., என்று போட்டுக்கொள்வது தம்பட்டம் அடிப்பதாக இருக்கும்.

அவர்களுக்கும் நமக்கும் ஓர் இடைவெளி ஏற்படுவதாக அமையும். ஆகவே, என் பெயருக்குப் பின்னால் பட்டத்தை ஒருபோதும் போடக் கூடாதென்று தொடக்கத்திலிருந்தே கடைப்பிடித்து வந்தவன். அவ்வாறு போடும் தோழர்களைக் கடிந்து, கண்டித்தவன். 1999 வரை என்னுடைய படத்தைக்கூட போட்டுக்கொள்ள அனுமதித்ததில்லை. படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் ஓர் இடைவெளியை ஏற்படுத்திவிடக் கூடாது என்கிற எண்ணம் எனக்கு யாரும் சொல்லித் தரவில்லை. எனக்குள் இருந்த உணர்வு அது. அப்படி போட்டுக்கொண்டால் நாம் உழைக்கின்ற மக்களிடையே ஓர் இடைவெளி உண்டாகும் என்று எனக்கு யாரும் சொன்னதில்லை. நானே எடுத்துக்கொண்ட முடிவு அது.

திருமாவளவன் தனி ஆள் அல்ல; அவனை தனிமைப்படுத்திவிட முடியாது!- தலைவர் திருமாவளவன் உரை'திருமாவளவனை படித்த இளைஞர்கள்...

Posted by Vanni Arasu on Sunday, April 11, 2021

படித்தவர்களைவிட படிக்க வாய்ப்பில்லாதவர்களிடம்தான் நான் அதிகம் கருத்து கேட்பதுண்டு. நான் எழுதுகிற முழக்கங்களில் எது உங்களுக்குப் பிடிக்கிறது என்று கேட்பேன். நான் எழுதுகிற கவிதைகளில் எது உங்களுக்குப் புரிகிறது என்று கேட்பேன். அவர்கள் எதைத் தேர்வு செய்கிறார்களோ அதைத்தான் நான் துண்டறிக்கையிலே, சுவரொட்டியிலே அச்சிடுவேன். படிக்காதவர்களை அலட்சியப்படுத்துவது, கொச்சைப்படுத்துவது, துச்சமென நினைப்பது மிக மோசமான ஆதிக்க உணர்வுகொண்ட உளவியல். அது தலைக்னம், கர்வம் சார்ந்த உளவியல்.

என்னுடைய சொந்த ஊரில் நான் பல்கலைக்கழகம் வரை சென்று படித்தும்கூட கிராமத்தில் பேன்ட், சட்டை போட்டுக்கொண்டு நடந்ததில்லை. ஆற்றைக் கடக்கும்போதுகூட என் ஆடைகளைக் கழற்றி பையில் வைத்துக்கொண்டு, லுங்கி கட்டிக்கொண்டு கிராமத்துக்குள் நடந்து செல்வேன். இது யாருக்கும் அஞ்சியல்ல. என் உறவுக்காரர்கள் என்னை வேற்றுமைப்படுத்தி பார்த்துவிடக் கூடாது. அவர்களில் ஒருவனாகவே நான் இருக்க வேண்டுமென்று ஊருக்குள் போகிறபோதே ஆடைகளை மாற்றிக்கொண்டு அவர்களில் ஒருவனாகத்தான் ஊருக்குள்ளே நுழைவேன். இது என்னுடைய இயல்பு. எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் பள்ளியிலிருந்து கல்லூரிக்குப் போனேன். கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் போனேன். சட்டம் பயின்றேன். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ஊரிலே இருந்து வேலை செய்கிறார்கள். ஆடு மாடு மேய்க்கிறார்கள். அனைத்துச் சமூகங்களைச் சார்ந்தவர்களையும்தான் நான் குறிப்பிடுகிறேன்.

திருமாவளவன்
திருமாவளவன்

கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் எந்தவகையிலும் தாழ்ந்தவர்கள் இல்லை. இழிவானவர்கள் இல்லை. படித்திருந்தும் சாதி புத்தி இருந்தால் அவன்தான் இழிவானவன். படிப்பதற்கு வாய்ப்பில்லாமல், சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று சொன்னால் அவன்தான் உயர்ந்தவன். கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத நிலையிலும் சமத்துவத்தை அவன் உள்வாங்குகிறான் என்றால், அவன்தான் மனிதருள் உயர்ந்த மாணிக்கம். டாக்டர், இன்ஜினீயர், பிஹெச்.டி என்று படித்திருந்தாலும்கூட சனாதன புத்தி, சாதி புத்தி, மதவெறி, சாதிவெறி, சுயநலம், தான் உண்டு தன் குடும்பம் உண்டு, தன்னுடைய பெண்டு பிள்ளைகள் பிழைத்தால் போதும், யாரை வேண்டுமானாலும் ஏய்க்கலாம், யாரை வேண்டுமானாலும் எத்திப் பிழைக்கலாம், யார் எக்கேடு கெட்டால் என்ன... நான் வெற்றி பெற்றால் போதும் என்று அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு, அவர்களை இரையாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணம் எவ்வளவு கல்வி பெற்றிருந்தாலும்கூட அது இழிவான எண்ணம்தான். இழிவான புத்திதான். எனவே நாம் படித்து பெற்றிருக்கிற பட்டம் என்பது நம்மை உயர்த்திவிடாது.

நாம் கற்றிருக்கிற கல்வி சக மனிதர்களை சமத்துவமாக அணுகுவதற்கு பயன்பட்டால்தான் அந்தக் கல்வி உயரும். வேலைவாய்ப்புக்காக பெறுகிற பட்டம், வருமானத்துக்காகப் படிக்கிற பட்டம், சமூகத்தில் நான் படித்திருக்கிறேன் என்று காட்டிக்கொள்வதற்கான பட்டம் எந்த வகையிலும் உயர்ந்ததில்லை. எனவே, என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அரசியலை அவர் கையாண்டிருக்கிறார். அவரின் நிலையை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தநிலையிலும்கூட பல்லாயிரக்கணக்கான தோழர்கள்... ஏன் லட்சத்தைத் தொடும் அளவுக்கு சாதி, மதம், இனம், மொழி என வரம்புகளைக் கடந்து கற்றறிந்த கல்விமான்கள் பலரும், கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த பலரும், நாங்கள் திருமாவளவனோடுதான் நிற்கிறோம். கைவிட்டுவிடுவதில்லை. அவரை, அவருடைய தலைமையை ஏற்றிருக்கிறோம் என்று தன்னியல்பாக இன்றைக்குச் சமூக வலைதளங்களிலே ஒரு யுத்தத்தையே நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

திருமாவளவன் தனி ஆள் அல்ல. அவனைத் தனிமைப்படுத்திவிட முடியாது. ஓரங்கட்டி ஒதுக்கிவிட முடியாது. சமூகநீதிக் களத்தில் போராடுகிற ஒரு சகதோழன். எனவே, நாங்கள் திருமாவளவன் பக்கம் நிற்கிறோம். சாதி மத வரம்புகளையெல்லாம் கடந்து நிற்கிறோம். கைகோத்து நிற்கிறோம். களத்தில் நிற்கிறோம் என்று குரல் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இத்தகைய ஆதரவு என்பது எனக்குள் ஊறிக்கிடக்கும் சமத்துவத்துக்கான போர்க்குணத்தை மேலும் ஊக்கப்படுத்துகிறது. வலுவூட்டுகிறது. அதற்காக நான் மீண்டும் மீண்டும் ஆதரவு நல்கிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்" என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


 

No comments:

Post a Comment