திருவள்ளுவர் படத்தை அவர் தமிழர் மெய்யியலாளர் என்பதான பழைய படங்கள்






கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=201&pno=51 பாவாணர்நோக்கில் பெருமக்கள் -தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர் பாவாணர் அட்டைப் படம் பற்றி புகழ்ந்தவர் உள்ளே கிறிஸ்துவச் சதி விஷத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை.(விளம்பரம் தரும் முயற்சியோ )


லெமூரியா, குமரிக்கண்டம் - விஷயத்தை அடிப்படையாக வைத்து தமிழ் உலகின் முதல் மொழி, தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற சொற்கள், தமிழ் மன்னரை 2000 வருடம் முன்பு "அடிமை"ப் படுத்திய ஆரியர் - இது போல பல அம்புலிமாமா கதைகளை விட்டவர், ஆனால் தமிழ் பற்றாளர் எனும் மாயை ஏற்படுத்தியவர்.



சாந்தோம் சர்ச் பணத்தில் - திருவள்ளுவர் கிறிஸ்துவரா என முதல் நூல் ஆரம்பித்து, பின் பல வெளியிட்டு, சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை அமைத்து தோமோவின் போதனையில் திருக்குறள், சைவம்- வைணவம் என அனைத்தும் எழுந்ததாக முனைவர் பட்டங்கள் வாரி வழங்கப்படுகிறது.
வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31 திருவள்ளுவர் கிறித்தவரா?
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். பக்௧83
மேலும் திருவள்ளுவர் படத்தை அவர் தமிழர் மெய்யியலாளர் என்பதை மாற்றும் தன்மை காணுங்கள்.
திருவள்ளுவர் திருக்குறளில் சொன்னவற்றிற்கு அர்த்தமற்ற விதத்தில் உரை எழுதியோர் பலர் - இலக்குவனார், பாவாணர், அப்பாடுரை, குழந்தை, நெடுஞ்செழியன், கருணநிதி -எனப் பலர்.
உறங்குவது போலும் சாக்காடு -உறங்கி விழித்தல் போலும் பிறப்பு. என மீண்டும் மீண்டும் எழுந்து பிறக்கும் பிறப்பை எழு பிறப்பு என்பதை அர்த்தமற்று சந்ததிகள் - தன்னுடைய பிற பருவங்கள் என பல்வேறு உளறல்கள் அது போல 27 குறள்களில் கடவுள் பெயர் சொன்னதை, மக்களிடம் பரவலாய் அறிந்த உவமை என பிதற்றல்கள்.
யூதர் - எபிரேயர் எனும் இனம் உண்டானதே பொ.மு. 6ம் நூற்றாண்டில் தான், பழைய ஏற்பாடு உருவானது ஏசுவிற்கு 50 ஆண்டு முன்பு தான். தங்கள் தொன்மம் கூறும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு இஸ்ரேல் எனும் புனையலை ஏற்று தேர்ந்தெடுக்கப்பட்டோர் எங்கும் வெளியேறவே இல்லை. ஆனால் நம் அமைச்சர் உளறல்


திருவள்ளுவரை தமிழர் மெய்யியலினின்று வெளி கொணர சர்ச் அவரை கிறிஸ்துவர் என்ற பைத்தியக்கார நூல்கள். இவர்ற்றை கண்டிக்க தமிழ் புலவர்கள் தயங்குவது ஏன். தமிழறிஞர்கள் தமிழ் பகைவர் ஆனது தான்




No comments:
Post a Comment